வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்

100% சிரிக்க

‘பொன்ஸ்’ பகுப்புக்கான தொகுப்பு

2. அறிஞன் அநிர்பிரும்ம தேவன்: வ.வா.ச. வரலாறு

பதிந்தவர் vavaasangam மேல் ஜூன் 30, 2006

கைப்போங்காவும் விவசாயியும் விருந்து வரிசையில் நிற்கிறார்கள். வாசலில் யானை பிளிறுகிறது.

ஆப்பிரிக்கா தந்த அஞ்சா நெஞ்சனாம் கைப்போங்கா, யானையின் பிளிறலில் சற்று அதிர்ந்த இதயத்தைக் கையால் பிடித்துக் கொண்டு, பயத்தை வெளியில் காட்டிக் கொள்ளாமல் நிமிர்ந்து யானையைப் பார்த்தான். அதே நேரம், தங்கவை நாச்சியார் என்னும் அந்தக் கம்பீரமான போர்யானையும் நம் நாட்டில் இது என்ன புது மிருகம் என்ற எண்ணத்துடன் கைப்போங்காவைப் பார்த்தது.

அண்ணலும் நோக்கினார்………..
…..
…..
…..
….

தங்கச்சியும் நோக்கினார்…

நோக்கியா போனைக் கொண்டு இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கக் காட்சியை விவசாயியும் க்ளிக்கினார்.

பார்த்த நொடியே இருவருக்கும் அந்தப் பேருண்மை தெரிந்து விட்டது. ஆப்பிரிக்கக் கிராமத்திலும் இந்தியக் காடுகளிலும் பிறந்திருந்தாலும், ஏதோ ஒரு இனம் தெரியாத, “அட எல்லாம் நம்ம இனம் தான்” என்று தெரிந்து கொண்ட பாசம், ஒரு கொடியில் பூக்காத அந்த இரு மலருக்குள்ளும் இருப்பது இருவருக்கும் நொடியில் புரிந்து விட்டது.

அன்பு மேலிட்டால், அண்ணனை நோக்கி ஓடி வந்த யானை அப்படியே துதிக்கையில் தூக்கித் தட்டாமாலை சுற்றியதில் இதைச் சற்றும் எதிர்பார்க்காத கைப்போங்காவின் அலறல்கள் விண்ணை முட்டின. கைப்போங்காவின் அதிர்ச்சிக் கூவல்களை, பாசத்தின் ஒலிவடிவமாக எண்ணிய விவசாயி ஆனந்தக் கண்ணீர் மல்க அதை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருக்கையில், கைப்போங்காவும் அதிர்ச்சிக் கண்ணீருடன் “காப்பாத்து காப்பாத்து” என்று வாய் திறக்கப் பயந்து கையால் மேலும் கீழும் அடிக்கத் தொடங்கினான்.

யானை ஓடிவந்ததால், அருகில் பாட்டுக் கச்சேரி நடத்திக் கொண்டிருந்த அறிஞன் அநிர்பிரும்ம தேவனின் தபேலாக்கள் ஒரு முறை விண்ணில் எழும்பிப் பின் கீழே இறங்கின. அநிர் பிரம்ம தேவன் இனிமையான சாரீரம் உடையவன் அல்லன் என்றபோதும் கச்சேரி செய்வதை மட்டும் விடுபவனில்லை. ஏற்கனவே அவரது சத்தம் தாங்காமல் காதை மூடிக் கொண்டிருந்த பக்கத்துத் திண்ணைப் பெரியவர்களும் இதுவரை போல் இல்லாமல் இன்று, தாம் அமர்ந்திருக்கும் இடமே லேசாக ஆட்டம் கண்டதைப் பார்த்து, அநிர்தேவனின் குரலுக்குப் பூமாதேவியே ஆட்சேபம் தெரிவிக்கிறாள் என்று எண்ணி நடுங்கத் தொடங்கி விட்டனர்.

தபேலாக்களை அசைத்துத் தன் இசைத் தவத்தைக் கலைத்தவன் யாரென்று அறிய எண்ணி அநிர்தேவன் கோபத்துடன் வீதியில் இறங்கிப் பார்த்தான். எப்போதும் அவனது கச்சேரித் திண்ணையில் வந்து வாத்தியங்களை அசைத்துப் பார்க்கும் தங்கவை நாச்சியாரின் சேட்டை தான் இது என்பதைப் பார்த்த கணமே புரிந்து கொண்டான்.

இந்த யானையை என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டே அவன் நிமிர்ந்தபோது தங்கவையின் பிடியில் ஒரு புதுவிதமான உருவம் இருப்பதையும், அது பயத்தில் அலறுவதையும் கைகாலை அடித்துக் கொள்வதையும் பார்த்த தேவன், சுற்றுமுற்றும் பார்த்தான்.

விவசாயியும் மற்றவர்களும் அந்த விபரீதத்தை உணராமல் கைகொட்டி ரசித்துக் கொண்டிருப்பதைக் கண்டான். தங்கவையின் கோரப் பிடியில் சிக்கி இருக்கும் கைப்போங்காவை எப்படிக் காப்பது என்று தேவன் யோசித்துக் கொண்டிருக்கும் போது தான் சற்றுத் தூரத்தில் அந்த இளைஞன் நடந்து கொண்டிருந்தான்.

சோழனின் அவையில் போருக்காகத் தூது சொல்ல வந்து பூம்புகார்ப் பெண்களின் அழகில் மயங்கி போர் தொடங்கிய பின்னும், சோழ நாட்டுத் தாவணியைப் பற்றி ஆராய்ச்சி செய்கிறேன் என்று கதை சொல்லிக் கொண்டு பூம்புகாரில் நிரந்தரமாக செட்டில் ஆகிவிட்ட வில்லுப் பாண்டிதான் அவன். மின்னலென ஒரு யுக்தி அநிர்தேவனுக்குப் புலப்பட்டது.

(தொடரும்)

.... இங்கே பதியப்பட்டது பொன்ஸ் | Leave a Comment »

விருந்து சமைக்கிறாங்க வ.வா.சவிலே..

பதிந்தவர் vavaasangam மேல் ஜூன் 17, 2006

நூறாவது பதிவில் அண்ணன் கைப்புவின் புகழைப் பறை சாற்றிப் பெருமை சேர்த்த கழகப் போர்வாள் கச்சேரி தேவ் தம் வலையுலகப் பயணத்தில் நூறு என்னும் மைல்கல்லை அடைந்ததைப் பாராட்டி அண்ணன் கைப்பு சொந்த சமையல் செய்து விருந்து வைப்பது என்று முடிவெடுத்திருக்கிறார். அண்ணன் இதுவரை சமையற்கட்டுப் பக்கம் வந்ததே தன் தாயாரிடமிருந்து தீய்ந்த தோசையை வாங்க மட்டுமே என்பதால் சமையலறையில் உதவிக்காக சங்கக் கண்மணிகள் கை கொடுக்க வருகிறார்கள்.

கைப்பு டீக்காக ஏப்ரான் எல்லாம் அணிந்து தொப்பியுடன் சமையலுக்குத் தயாராக வருகிறார்.

கைப்பு: ஓகே.. சங்க மெம்பர்ஸ், எல்லாரும் ரெடியா? சமையலை ஆரம்பிப்போமா?

பாண்டி: எல்லாம் ரெடி தல.. நீ சொன்னதும் ஆரம்பிக்க வேண்டியது தான்..

கைப்பு: ஆமாம், சங்கத்து மக்கள் எல்லாரும் இருக்காங்க சரி, அதோ அந்தாண்ட நிக்குதே ஒரு பொண்ணு, அது யாரு பாண்டி?

பாண்டி: ஹி ஹி.. தல, என்ன தல அப்படிக் கேட்டுப்புட்டீங்க.. அதான் நம்ம சிந்து.. ஹி ஹி..

பார்த்தி: சிந்துவா? அந்த கம்ப்யூட்டர் லாப் இன்ஸ்ட்ரக்டர்?என்னாது இது.. பெரிய ஊழலா இருக்கும் போலிருக்கு… கம்ப்யூட்டர் லாப் இன்ஸ்ட்ரக்டருக்கு இங்க என்ன வேலைன்னு கேக்கறேன்?.. விசாரிக்கறேன். விசாரணை கமிஷனுக்கு ஏற்பாடு பண்றேன்.. இது ஒண்ணும் சரியில்லை..

சிபி: பார்த்தி, கொஞ்சம் சும்மா இரு.. பாண்டி, ஹி ஹி.. சிந்துவுக்கு சமையல் தெரியும்னு கூட மாட ஒத்தாசையா கூட்டிகிட்டு வந்த தானே?

பாண்டி: இல்ல சிபியண்ணே.. நம்ம சமையல் செய்ய என்ன வேணும்?

பொன்ஸ்: என்ன வேணும்? மைக்ரோவேவ் ஒவன் வேணும்.. அதுல பவர் பட்டனைப் பார்த்து..

இளா: ஆரம்பிச்சிட்டாங்கப்பா.. விட்டா சோறு வடிச்சி, கொழம்பு வச்சி, வெண்பாவும் வடிச்சிட்டுத் தான் மூடுவாங்க.. அக்கா.. பொன்ஸக்கா.. கொஞ்சம் சும்மா இருங்கக்கா.. பாண்டி சொல்லட்டும்…

பாண்டி: சமையல் செய்ய, முதல்ல ரெசிபி வேணாமா? அதான், என்னென்ன ரெசிபி வேணும்னு சொல்றீங்களோ, அதையெல்லாம் கம்ப்யூட்டர்ல தேடிக் குடுக்க எனக்கு உதவியாத் தான் சிந்து வந்திருக்கு.. சிந்து, கமான் யா.. கொஞ்சம் டீ போடுவது எப்படின்னு தேடு பார்க்கலாம்..

பொன்ஸ்: டீ போட எல்லாம் எதுக்கு கம்ப்யூட்டர்.. என் கிட்ட விடுங்க தல.. என்னோட அடுத்த பதிவே.. மைக்ரோவேவில் டீ போடுவது எப்படி?ங்கிறது தான்

பெருசு: ஐயோ ஐயோ.. இந்த டீ போடுவது மாதிரி சின்ன மேட்டரை எல்லாம் விடுங்கப்பா.. என்னா இது.. சின்ன பிள்ளத் தனமா. அப்படியே முன்னேறி ஹைடெக்கா உப்புமா சாப்பிடுவீங்களா.. டீப் போடறாங்களாம் டீ..

கைப்பு ( பெருசுவை அதிசயமாகப் பார்க்கிறார், தனக்குள்): நம்ம சங்கத்துல உப்புமா எல்லாம் செய்யத் தெரிஞ்ச ஆளா?!!! பெரிய ஸ்டார் குக்கா இருப்பார் போலிருக்கே.. இவரை விடக் கூடாது.. (வெளியில்) அட பெருசு, வெவரமான ஆளாத் தான் இருக்கீரு.. உப்புமாவே செஞ்சுடுவோம்.. உப்புமா உங்க டிபார்ட்மென்ட் ஆமாம், சொல்லிட்டேன்.. பாண்டி, இவருக்கு உப்புமா செய்ய என்ன வேணும், ஏது வேணும்னு கேட்டு லிஸ்டுவாங்கிக்க..

பாண்டி (மனசுக்குள்): தலைக்கு புத்தி போவுது பாரு.. போயும் போயும் விருந்துக்கு உப்புமா எவனாவது செய்வானா?!! ஒரு பிரியாணி, ஒரு சிக்கன் 65ன்னு போட்டா சொகமா சாப்டுட்டு சொகமாத் தூங்கலாம்..ம்ஹும்.. நேரம், (சத்தமாக) பெருசு, முத ஐட்டம் உன் ஐட்டம் தான்யா.. என்ன வேணும் உப்புமா செய்ய? சேமியா உப்புமாவா, இல்லை ரவா உப்புமாவா?

பெருசு: இல்லை இல்லை.. இதெல்லாம் இல்லை.. உப்புமா செய்யணும்னா, எனக்கு இட்லி வேணும்..

பொன்ஸ்: என்னது இட்லியா?

இளா: இட்லி யெல்லாம் யாருக்கு செய்யத் தெரியும்? இட்லி வடைன்னு ஒருத்தர் இருக்காரு.. அவரை வேணா கூட்டிட்டு வரலாம்..

பெருசு: எனக்கு இட்லி இருந்தாத் தான் உப்புமா செய்ய வரும்.. கரெக்டா சொல்லுங்க, இட்லி எப்போ வாங்கியாருவீங்க? எனக்கு அஞ்சுமணிக்கு வெண்பா க்ளாஸ் இருக்கு.. கொத்தனார் வரச் சொல்லி இருக்காரு.. போகணும்..

கைப்பு: ஏய்யா? !! இட்லி எல்லாம் செஞ்சா அத விட்டுட்டு எவனாவது உப்புமா செஞ்சி சாப்டுவானாய்யா? இட்லி செய்யும் அளவுக்கு சமைக்கத் தெரிஞ்சா நாங்க இப்படிப் பேசிகிட்டு இருப்போமா? ம்ஹும்.. இது தேறாத கேஸு.. சரி சரி பாண்டி, நம்ம தான் மெனு முடிவு பண்ணணும் போலிருக்கு.. யாருக்கு என்னென்ன சமைக்கத் தெரியும்னு சொல்லுங்க..

பொன்ஸ்: எனக்கு சாதம் வடிக்க நல்லா தெரியும்ணே.. அதாவது… மைக்ரோவேவ்ல,,

கார்த்திக்: ஸ்டாப் ஸ்டாப் ஸ்டாப்.. நீங்க சாதம் வடிச்ச கதை தான் அமெரிக்காலேர்ந்து நியூசிவரைக்கும் எல்லாருக்கும் தெரியுமே.. கொஞ்சம் எங்களையும் பேச விட்டா நல்லா இருக்கும்..

அப்போது கீதா வேகமாகக் கதவைத் திறந்து கொண்டு ஆக்ரோஷமாக உள்ளே வருகிறார்

பொன்ஸ் (முணுமுணுப்பாக) வந்துட்டாங்க.. தலைவலி

கீதா : என்ன தலைவரே.. நிரந்தரத் தலைவலியான என்னை விட்டுவிட்டு எல்லாரும் எங்கே போய்விட்டீர்கள்? “சிபி ஏன் குமார காவியம் எழுத வில்லை” என்று திடீர் என்று நினைவு வந்ததால், பாதி சாப்பாட்டில் எழுந்து அவருக்கு போன் செய்த காரணத்தால் நீங்கள் இங்கே இருப்பது தெரிந்தது.. இல்லைன்னா என்னை விட்டு விட்டு நீங்கள் எல்லாரும் என்ன சதி செய்கிறீர்கள் என்றே தெரியாமல் போயிருக்கும்.

பாண்டி: கீதாக்கா, அமைதி அமைதி..சதி இல்லைக்கா, சமையல் தான் செய்யறோம். எதுக்கு இத்தனைக் கோபப் படுறீங்க.. நம்ம தேவ் நூறாவது கச்சேரி போட்டுட்டாப்ல.. அதுக்குத்தேன் எல்லாரும் சேர்ந்து விருந்து சமைக்கப் போறோம்.. இப்போ பொன்ஸக்கா சாதம் வடிக்கப் போறாங்க.. (பொன்ஸ் ஏதோ பேச ஆரம்பிக்கிறார்..)
அக்கா.. இருங்கக்கா.. எப்படி வடிக்கிறதுன்னு கேட்கலை.. இருங்க இருங்க.. பேராசிரியர் கார்த்திக் தோசை சுடுவதில் எக்ஸ்பர்ட்.. அவரு தோசை செஞ்சிடுவாரு.. நீங்க என்னக்கா செய்வீங்க?

கீதா: நான் சாம்பார் நல்லா வைப்பேன்.. நானே சாம்பார் வைக்கிறேன்..

பொன்ஸ்: ஆனா அதுல உப்பு மட்டும் போட மறந்துருவாங்க!!

கீதா திரும்பி பொன்ஸை முறைக்கிறார்.

கீதா: சிலப்பதிகாரத்துல சாம்பாரைப் பத்தி என்ன சொல்லி இருக்குன்னா,..

சிபி: இருங்க இருங்க.. இதெல்லாம் வேண்டாம்… சரி, பாண்டி, எனக்கென்ன வேலை.. நான் என்ன செய்யணும்? கமான்.. டெல் மீ.. கமான்… கை பர பரங்குது..

கார்த்திக்: ஆமா, என்னவோ விருந்துங்கறீங்க ஒரே வெஜிடேரியனா இருக்கு.. மருந்தாகிடப் போகுது.. பார்த்து…

மகேஸ்: ஆமாம்.. எல்லாம் மருந்து ஐட்டமாவே இருக்கு.. ஒரு கிடா வெட்டி பிரியாணி போட்டோம்னு வைங்க..

பொன்ஸ்: ஆடெல்லாம் வெட்டக் கூடாது.. ஆடு பாவம்.. மல்லிச் செடி கூட பாவம்…. இருங்க நான் போய் மேனகா காந்தி கிட்ட சொல்லப் போறேன்..

கைப்பு : ஆகா.. இந்தப் பொண்ணை வச்சிகிட்டு ஒண்ணுமே செய்ய முடியாது போலிருக்கே.. பூனையை மடியில கட்டி சகுனம் பார்த்த மாதிரி..

பொன்ஸ்: ஆமாம் அண்ணே.. எனக்குப் பூனை ரொம்ப பிடிக்கும்.. யானையும் பிடிக்கும்.. யானை இருக்கு பாருங்க..எத்தனை பெரீசு..

பெருசு: இதுக்கு நம்மளே பரவாயில்லை போலிருக்கு.. எந்தத் தலைப்பு கொடுத்தாலும் ஆரம்பிச்சா நிறுத்தாம பேசுறாங்க..

கீதா: ஆமாம்..இந்த ஆடு கோழி எல்லாம் பேசாதீங்க.. பேசாம, போளி செய்யலாம்…

பெருசு: ஆகா, போலியா.. எனக்கு வெண்பா க்ளாசுக்கு நேரமாச்சு..

கைப்பு: இருங்கம்மா.. இந்த மகளிர் அணியைச் சும்மா இருக்க வைக்கிறதுக்குள்ள மனுசனுக்கு உயிர் போய் உயிர் வருது.. ரெண்டு பேர் இருக்கும் போதே இப்படின்னா, இன்னும் புதுசா கெக்கே பிக்கேன்னு எல்லாத்தையும் போய் கூட்டிட்டு வருது இந்த பொன்ஸு.. கொஞ்சம் அடக்கி வைக்கணும் எல்லாத்தையும்.. சரி சரி.. விவசாயி இளா.. உங்க பண்ணையிலேர்ந்து ஒரு பத்து ஆடு, இருபது கோழி, அஞ்சு கிலோ கோஸ், பத்து கிலோ வெங்காயம் எல்லாம் எடுத்துட்டு வாங்க.. சமையலை ஆரம்பிக்கலாம்..

இளா: (தனக்குள்) அடடா.. என்னது இது.. தின்னே அழிச்சிடுவாங்க போலிருக்கே.. கட்சி நிதி வேற காலியா இருக்கு.. அப்டியே எஸ்கேப் ஆக வேண்டியது தான்.. (சத்தமாக) அண்ணே.. அதெல்லாம் இந்த முறை வெளில வாங்கிக்குங்க.. எனக்கு ப்ளைட்டுக்கு நேரமாச்சு.. கதார் வேற போகணும்.. இப்போ தான் நேரம் பார்த்தேன்.. வரேண்ணே…

கைப்பு: தம்பி.. இளா.. இளா.. (கூப்பிடக் கூப்பிட திரும்பிப் பார்க்காமல் ஓடுகிறார்.. )

(இதற்குள் கட்ட துரை பெருசு, சிபி காதில் ஏதோ சொல்கிறார்)

சிபி: இருங்க தல.. இப்போ எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்..

கைப்பு: அட நீ வேறயா? என்ன உண்மை?

சிபி: நானும் சங்கத்துல தானே இருக்கேன். நானும் இப்போ தானே ஒரு நூறாவது பதிவைப் போட்டேன்.. எனக்கு மட்டும் எந்த ட்ரீட்டும் வைக்கலை.. இப்போ கச்சேரில நூறாவது பதிவுன்ன உடனே பிரியாணி என்ன, ஜிகிர்தண்டா என்னன்னு ஒரே பெரிய ஸ்பெசல் விருந்தே தயார் பண்றீங்க.. அதை வேற என்னை வச்சே வேலை செய்ய வைக்கிறீங்க?? என்ன நடக்குது?

பொன்ஸ்: தளபதி.. தகுதிக்கு மீறி ஆசைப்படக் கூடாது..

கைப்பு: ஐயோ, ஐயோ பேச ஆரம்பிச்சிட்டாளே.. டேய் பாண்டி.. அவளைக் கொஞ்சம் அந்தப் பக்கம் கூட்டிப் போடா…

சிபி: அப்டீன்னா? என்ன சொல்ல வர்றீங்க?

பொன்ஸ்: இப்போ, தேவோட நூறாவது பதிவைப் பாருங்க.. நம்ம சூப்பர் ஸ்டாரு, கைப்புன்னு போட்டு அசத்திட்டாரு.. நீங்களும் போட்டீங்களே ஒரு நூறாவது பதிவு.. ப்ரோபேசன் பதிவாம்ல..
நூறாவது பதிவிலயே நீங்க ப்ரோபேஷன் லெவல் தான் நினைவிருக்கட்டும்..

இதைக் கேட்டதும் தளபதி சிபிக்குக் கோபம் வந்து விடுகிறது, அவரது காது மற்றும் கண் தெரியாமல் போய் விட்டது.(refer to Sibi’s profile). இத்துடன் சங்க உறுப்பினர்களும் பயந்து போய் ஒவ்வொருவராக எஸ்கேப் ஆக, சிபி கோபத்தோடு கைப்புவின் எறும்பை எடுத்து பொன்ஸின் யானை மீது போட்டுவிட்டு “அவன அமுக்கிக் கொல்லுடா மாப்ள…” என்று கத்தத் துவங்க.. கைப்புவும் எஸ்கேப்..

.... இங்கே பதியப்பட்டது பொன்ஸ் | Leave a Comment »

சங்கம் சாராத பதிவர்களுக்கு ஒரு மடல்

பதிந்தவர் vavaasangam மேல் ஜூன் 5, 2006

நண்பர்களே..

வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்னும் சங்கத்தை ஆரம்பித்து இத்துடன் 30 பதிவுகள் ஆகி விட்டன. முதல் பதிவு ஆரம்பித்தது ஏப்ரல் 2006 இறுதியில்.

சங்கத்தின் கொள்கை என்று நாங்கள் சொன்னது கைப்புவைக் கலாய்த்தல் என்பது தான் என்றாலும், கைப்புவைத் தவிர, எங்கள் சங்கத்தில் சேரும் எல்லாரையும் கலாய்ப்பது எங்களின் பொழுதுபோக்காகிவிட்டது.

தமிழகத் தேர்தல் நேரத்தில் ஆரம்பித்த சங்கமாதலால், ஆரம்பத்தில் பல்வேறு தேர்தல் கால கேலிக் கூத்துகளைக் கிண்டல் செய்து தான் எங்கள் செயல்பாடுகள் இருந்தன.

கொஞ்சம் கொஞ்சமாக சில தமிழ் சினிமா ஸ்டன்டுகளையும் கிண்டல் செய்தோம். இப்போது உதைபந்து விதிகளைக் கலாய்த்துக் கொண்டு இருக்கிறோம்.

இதுவரை எங்கள் பதிவுகள் யாரையும் மனதறிந்து கேலி செய்பவை அல்ல. ஏதேனும் மறைமுக கிண்டலையோ பதிவுலக அரசியல் உள்குத்துகளோ இல்லாத பதிவுகளாகத் தான் அவை இருப்பதாக நாங்கள் எண்ணுகிறோம். மிகத் தீவிரமாக எழுதும், எழுதுவதை வாழ்க்கைக் கடமையாகக் கருதி எழுதும் யாரும் பொதுவாக எங்கள் சங்கத்துப் பக்கம் வருவதில்லை. அப்படியே வந்தாலும் அவர்கள் சும்மா எட்டிப் பார்ப்பதோடு சரி.

இந்த சுய விளக்கம் எதற்கு என்று கேட்பவர்களுக்கு:

இந்தப் பதிவின் ஒரே நோக்கம், எங்களைச் சுயபரிசோதனைக்கு உட்படுத்துவது தான்.

எங்கள் பதிவுகள் நகைச்சுவையைத் தாண்டி வேறு யாரையேனும்/ எதையேனும் மறைமுகமாகவோ நேரடியாகவோ கேலி செய்வதான தோற்றத்தை ஏற்படுத்துகின்றனவா?

பதிவுகள் அளவுக்கு மீறிய நையாண்டியாக இருக்கின்றனவா?

வ.வா.சங்கத்தினரைத் தவிர்த்து மற்றவர்களின் பதிலை மட்டும் இதற்கு எதிர்பார்க்கிறோம். உங்கள் பின்னூட்டங்கள் எங்களைச் செம்மைப் படுத்திக் கொள்ள உதவும்.

இந்தக் கேள்விகள் எழும்பக் காரணமான அனானிக்கும் இங்கே நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

.... இங்கே பதியப்பட்டது பொன்ஸ் | Leave a Comment »

இந்தப் பதில் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?

பதிந்தவர் vavaasangam மேல் ஜூன் 4, 2006

1. உங்கள் பதிவு ப்ரொபைலில் இருக்கும் அந்தப் பொன் குவியலை நீங்கள் எப்படி சம்பாதித்தீர்கள்? சங்கத்தில் களவாடிய நிதியா? இல்லை சங்கம் பெயரைச் சொல்லி நீங்கள் ஊழல் செய்த நிதியா?
சங்கத்துக்காகவே உழைத்து உழைத்து உணவு சமைக்கக் கூட நேரம் இல்லாமல் காய்ந்து போன பர்கரையும் உப்பு சப்பில்லாத பிஸ்ஸாவையும் சாப்பிட முடியாமல் முழுங்கும் என்னைப் பார்த்து, களவாடிய நிதியா, ஊழல் செய்த சதியா என்னும் கேள்வியைக் கேட்டது யார்?!!! யார்?!!!
யார் கேட்ட போதும் கேள்வி என்று ஒன்று வந்து விட்ட காரணத்தால், சட்டத்துக்கும் நீதிக்கும் கட்டுப்பட்ட என்னுடைய பதில் இதோ: அட்சய திருதீயை அன்னிக்கு எல்லார் வீட்டுக்கும் போய் வந்துகிட்டு இருந்தேனா, எல்லார் வூட்லயும் கொஞ்சம் தங்கம் வாங்கி வச்சிருந்தாங்க.. அங்கங்க ஒரு காசு எடுத்ததுல இம்புட்டு சேர்ந்து போச்சு. (சங்கத்துல அப்படியே நிதி இருந்துட்டாலும்!! ம்கும்)

2. பலப் பதிவுகளிலும் உங்களை சின்னப் பெண் எனக் கூறும் நீங்கள்.. உங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி சகப் பதிவாளர்களை மிரட்டி உங்களை அக்கா எனக் கூறுமாறு தொடர்ந்து பயமுறுத்துகிறீர்களாமே? இது சரியா?
இது சதி.. உங்களை யாருய்யா கூப்டச் சொன்னாங்க?!! ரொம்ப தான். நான் சொன்னேனா?, நான் சொன்னேனான்னு கேக்குறேன்.. கைப்புவை அண்ணான்னு சொன்னேன்.. அவரு தங்கச்சின்னு சொல்லிட்டாரு.. கார்த்திக்கை பாசமலர்னு சொன்னேன்.. அவரு அக்கான்னு சொல்றாரு!! நானா கூப்பிடச் சொன்னேன்?!!! ம்ஹும்..
தம்பி தேவு.. அக்காவுக்கு ஒரு சோடா எடுத்தா.. தொண்டைத் தண்ணி தீர்ந்து போகுது கத்திக் கத்தி… !!!

3. தேர்தல் நேரத்தில் சங்கத்து வேட்பாளர்களுக்கு ஆதரவாக எங்குமே பிரச்சாரம் போக மறுத்து விட்டு… இப்போது மட்டும் அயல் நாட்டு சங்க வளர்ச்சி திட்டம் என்று புதிய திட்டம் வகுத்து அயல் நாடு சென்று டாலர் தேத்துவது நியாயமா?
ஐயகோ.. என்னைப் பார்த்து என்ன ஒரு கேள்வி.. இதைக் கேட்க யாருமே இல்லையா?? புதிய பூமியே.. பழைய வானமே.. உனக்குமா தெரியவில்லை என் அருமை!!!!
சரி.. நான் வந்தேன்!! அதை விடுங்க.. நான் இங்க வந்ததும், சங்கத்துல எத்தனை அயல் நாட்டுக்காரங்க புதுசா சேர்ந்திருக்காங்க தெரியுமா?!! மகேஸ், சுகா, மனதின் ஓசை இவங்க எல்லாம் புது வரவு.. இங்க நான் வந்த நேரம் தான் இவங்க எல்லாம் நம்ம சங்கத்துல சேர்ந்திருக்காங்க.. ஏன், சூடான் சிவா கூடத் தான்..
கணக்கு கேட்கும் சங்கத் தலைமையே..
இந்தக் கணக்கையும் பார்!!!
கண்களைத் திறந்து பார்..
கண்ணாடியைத் துடைத்துப் போட்டுப்பார்!!!
இன்னோரு முறை கேட்டுப் பார்!!

4. புதரகத்தில் நீங்கள் மேற்கொண்டிருக்கும் அரிசி சோறு வடிப்பான் கருவி ஊழல் உண்மையா? தேவையின்றி சோறு வடிக்கும் சிறுப் பிரச்சனையைப் பெரிதாக்கி சங்கத்தாரின் பொன்னான நேரத்தை வீணானச் சோற்றுப் புராணப் பதிவுகளில் ஈடுபட வைப்பது மாபெரும் துரோகம் ஆகாதா?
என்னைய்யா துரோகம், பொல்லாத துரோகம், என்னைக் கேட்டுகிட்டா தல புட்பால் ஆடப் போனாரு?!! புட்பால் ஆடத் தல போறாருன்னு சொன்னீங்க.. அதான் புட் பத்தின பதிவா போட்டேன்!!!.. அதான்யா, food – உணவு.. அது பத்தின பதிவா போட்டு கிட்டு இருக்கேன்.. “சக்கரை இல்லாமல் காபி போடுவது எப்படி ?” அடுத்த பதிவு, பால் பத்தி.. காத்திருங்கள்!!

5. சங்கத்தில் உங்களுக்கு பிகுலு பட்டத்துடன் வழங்கிய பிகுலைத் தலக்கு எதிராகவே பயன்படுத்துவது.. அதாவது தல உதை பந்து விளையாடும் இடங்களில் ஒருவனைக் கூடவே தலப் பின்னால் ஓட விட்டு தலக் கைப்பு பந்து எடுக்கும் போதெல்லாம் அவன் பிகுல் அடிப்பதைப் பார்த்து மகிழ்வது.. இது குற்றமல்லவா?
என்ன இது?!! சிறுபிள்ளைத்தனமால்ல இருக்கு?!! பந்தை எசகுபெசகா எடுத்து, தலக்கு அடிகிடி பட்ருச்சுன்னா, பாதுகாப்பா இருக்கட்டுமேன்னு பின்னாடியே ஒருத்தனை ஓட விடறேன்.. சரியாப் பாருங்கைய்யா.. அது வேற யாரோ இல்லை.. நானே தான். நானே தான் தலைக்கு பாதுகாப்பு வளையமா பிகிலோட கூட ஓடிகிட்டு இருக்கேன்.. என்னோட தியாகத்தை மெச்சாம, இப்படி போட்டு மொத்துறீங்களே?!! பசங்க எல்லாம் சேர்ந்துகிட்டு!!!

6. கைப்பொண்ணுவை வா.வ.சவில் ( சரியாகப் பார்க்கவும் வரு.வா.ச அல்ல) வா.வ.ச… இணையச் சொல்லி மிரட்டியது.. கைப்பொண்ணுக்கு மீசை முளைக்க வைத்தது.. அதற்கு விளக்கெண்ணெய் தடவியது எனக் கொடுமைகள் இழைத்தது சரியா?
இது ஆதாரம் இல்லாத குற்றச் சாட்டு.. அவதூறு பரப்பும் வேலை.. நெக்ஸ்ட்!!!

7.சங்கத்துக்கு மிகவும் நெருக்கமானப் பின்னூட்ட சூப்பர் ஸ்டார் இலவசங்களின் இமயம் வாக்குறுதிகளின் வங்கி இலவசக் கொத்தனார் மீது சங்கத்திலிருந்து தட்டு முட்டுச் சாமான்களை லவட்டிச் சென்றதாய் குற்றம் சாட்டி மிரட்டியது.. இப்போது சாதம் வடிப்பது போன்ற சுமாரான சமையல் குறிப்புக்களைக் கொடுத்துவிட்டு பரோட்டாப் போடுவது எப்படி என்ற மாபெரும் சாதனைப் பதிவுப் போட்டு மீன்கொத்தி அன்பர்களின் அமோக ஆதரவு பெற்று அமைச்சரான கொத்தனாரின் உணவுத் துறை இலாகாவைக் கைப்பற்ற நீங்கள் சதி செய்கிறீர்களாமே?
கொத்தனாரின் உணவுத் துறை ஒரு காய்ந்து போன பரோட்டா! ஊசிப் போன சால்னா! அதை ஒருத்தர் கைப்பற்ற வேற பற்றணுமா??!! நம்ம எங்கயோ அடுத்த கிரகத்துல சாதம் வடிக்கிறதப் பத்தி ஹைடெக்கா யோசிச்சிகிட்டு இருக்கோம்.. அவரு இப்போ தான் தரமா வெண்பா எப்படி வடிக்கிறதுன்னு பதிவு போடறாரு பதிவு.. அதுக்கு ஒரு சதி வேறயா?!! நம்ம காரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்கறாங்களே!!

8.வெண்பாவைக் கட்டாயக் கல்வியாக்கி வருத்தப் படாத வாலிபர்களின் நெஞ்சில் வேல் பாய்ச்சியது மிகப் பெரியக் குற்றம் அல்லவா?
இந்தக் கேள்விக்கு கொத்தனாரும் ஜீவாவும் பதில் சொல்வது தான் பொருத்தமாக இருக்கும்.. என்னைப் போன்ற அறியாச் சிறுபெண் இதற்கெல்லாம் என்ன கூறுவது??!!

9.கீதா அக்காவின் ஆறு லட்சம் ரசிகர் மன்றங்களைக் கலைத்தது… இன்னும் அவருக்கென் இருக்கும் சில நூறு மன்றங்களையும் பின்னூட்டமிட்டு கலவரப் பூமியாக மாற்றுவது என பெரும் சதி திட்டம் தீட்டி வருகிறீர்களாமே?
ஆறு லட்சம் ரசிகர் மன்றம் எந்த ஊர்லங்க இருந்துச்சு?!! ஆறு பேர் கூட இல்லை அந்த ரசிகர் மன்றத்துல.. அவங்க கூட “என்னை இங்கேர்ந்து விடுவி.. காப்பாத்து!!”ன்னு கெஞ்சிகிட்டு இருந்தானுங்க!! நான் தான் போய் அவங்களை எல்லாம் விடுதலை செஞ்சி கூட்டியாந்தேன். இதோ இப்போ சங்கத்து சார்பா மன நல மருத்துவமனைல சேர்த்துட்டு வந்தோமே, அந்த ஆறு பேர்தான்!!

10. எல்லாவற்றுக்கு மேலாக உங்கள் மீது கூறப் படும் குற்றச்சாட்டு சங்கத்தின் உயர்வான…உயிரான… கொள்கையான வருத்தப் படாமல் இருப்பதை மீறியது.. உங்கள்த் தனி பதிவில் மட்டுமின்றி பிற பதிவுகளிலும் சென்று ‘வருத்தப்படுவதாய்’ பிரகடனம் செயதிருப்பது உங்கள் இயக்கத்திற்கு இழைக்கும் கொடுந்துரோகம் என்று நீங்கள் நினைக்கவில்லையா?
வருத்தப்பட்டதாகச் சொன்னேன்.. ஏன் சொன்னேன்?!! எதற்குச் சொன்னேன்? நமது எதிரிகள் யார், நண்பர்கள் யார் என்னும் தெளிவு பிறக்க வேண்டுமென்று சொல்லப்பட்ட மதியூகமான வார்த்தைகள் அவை.
உங்களுக்கு இது புரியாமல் போனது வருத்தமில்லை என்ற போதும், கேள்வி கேட்டு இதைக் கொச்சைப் படுத்திய போது தான் மனம் ரணமாகிறது!!!

தங்கத் தம்பிகளே! ரத்தத்தின் ரத்தங்களே!! அன்பு உடன்பிறப்புகளே!!!
ஒரே கொடியில் நாம் அனைவரும் பூத்திருந்தால், கொடி தாங்காமல் உடைந்து விடக் கூடும் என்பதால், வெவ்வேறு கொடியில் பூத்த உடன்பிறவா சகோதர சகோதரர்களே!!!
நீங்கள் என்னைப் புரிந்து கொண்டது இவ்வளவு தானா?!! சங்கத்திற்காக வீக் என்டைக் கூட விலக்கி வைத்து விட்டு வியர்வை வழிய வேலை செய்து கொண்டிருக்கும் என்னை,
வெண்பா பாடவா என்று கூறி கொத்ஸும், வெ.வா. ஜீவாவும் அழைத்துக் கொண்டிருந்த போதும் சங்கத்தின் வெண்பலகையில் என் பெயர் கறுப்பு மையால் எழுதப்படக் கூடாது என்று எண்ணி விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கும் இவ்வேளையிலும்,
நமது சங்கம் புட்பாலுக்குப் பின் பேஸ்பாலுக்கும், பாக்கெட் பாலுக்கும், ஆவின் பாலுக்கும் ஆடி அடுத்தடுத்துச், சங்கத்தைச் சிறப்பாக்க என்ன செய்யலாம் என்பது தான் நான் அல்லும் பகலும் அனவரதமும் எண்ணிக் கொண்டிருப்பது என்பதை இங்கு சொல்லிக்கொள்ள விழைகிறேன் (அட, இளவஞ்சி வாத்தியாரை விட நீ…ளமான வாக்கியம் ;) )

இப்படிப் பட்ட என்னை நோக்கி, பத்து கேள்விகளை வீசியதல்லாது, அவற்றைப் பதில் சொல்லச் சொல்லி நாளொரு பின்னூட்டமும் பொழுதொரு குற்றச்சாட்டும் வைத்து இந்த ஒரு வாரமாக என்னை மிகுந்த மனவருத்தத்திற்கு ஆளாக்கி விட்டீர்கள்!!

=> இதில் சங்கத்துக்குச் சம்பந்தமில்லாத கட்டதுரையும் பார்த்திபனும் என்னைக் கெக்கலிகொட்டிச் சிரித்த போது அதைக் கண்டிக்க வேண்டிய தலைவர் எதுவுமே சொல்லாமல் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தது ஏன்?!!
=> ஒரு கொடியில் பூத்த இரு மலர் என்று அவ்வப்போது சொல்லிக் கொள்ளும் பேராசிரியர் கமிட்மென்ட்ஸ் கார்த்திக் இந்த விவகாரத்தில் தனக்கு ஒன்றும் தெரியாது என்பது போன்று மௌனம் காத்தது ஏன்?!!
=> கேள்விகளின் ஆழம் புரிந்தும், அதனால் கேள்விக்குள்ளாக்கப் படும் எனது கட்டுரிமை புரிந்தும் கேள்விகளைப் பற்றி ஒன்றுமே சொல்லாமல், பேரிச்சம் பழங்களைப் பற்றியே பேசி இந்தக் கொடுமையைத் தளபதி சிபி கண்டிக்காமல் விட்டது ஏன்?
=> இந்த நிகழ்வைக் கண்டித்து “தீக் குளிக்கிறேன்!! தீக் குளிக்கிறேன்!!” என்று கொதிப்பதாகச் சொல்லிய ஜொள்ளு பாண்டி, ஒரு டீக் கூட குடிக்காதது ஏன்?
=> மற்ற தம்பிகள் எல்லாம் இது மாதிரி குற்றச்சாட்டுகளுக்கு ஆளான போது, ஓடோடி வந்து கைக் கொடுத்த தலைவலி கீதா இப்போது இந்தப் பிரச்சனையில் ஒன்றுமே சொல்லாதது ஏன்?

இத்தனை கேள்விகள் இப்போது எழுகின்றன.. கைப்பொண்ணு காணாமல் போனதற்கும் இப்போது சங்கத்துக்காக, ஒட்டகம் போல் உழைத்த என்னை(நாய், கழுதைன்னு எத்தனை நாள் சொல்றது?!!) ஓரம் கட்ட முயல்வது.. இவை எல்லாம் எதற்காக?!!

* மகளிர் அணியை ஒரே நபர் கட்டி ஆள வேண்டும் என்னும் பேராசையால் எழுந்த பொறாமைக் கடிதமா?
* வட அமெரிக்காவில் கொள்கை பரப்ப நான் வந்து விட்டேன் என்று அஞ்சி தோசை சுடும் பேராசிரியரின் பெரிய சதியா?
* தளபதி தலை மறைவாய் இருந்த போது தலையெடுத்து பொறுப்புடன் கட்சியைப் பார்த்துக் கொண்டேனே, அதற்கு அவர் செய்யும் கைம்மாறா?
* கழகப் போர்வாள், தலயின் கை என்று சொல்லப்படுபவர் எங்கே கைக்கு போட்டியாக, தலயின் மூளையாக நான் வந்துவிடுவேன் என்று எண்ணிக் கிளப்பிய பழியா?

இத்தனை கேள்வியும் எழுந்தாலும், எதுவும் நான் கேட்கும் கேள்வி அல்ல!! இதைக் கேட்பது எனக்காக உயிரையும் தரத் தயாராய் இருக்கும் என் அருமைத் தொண்டர்கள்..
அவர்களுக்கு நியாயமான பதில் சொல்லக் கட்சித் தலைமை கடமைப்பட்டுள்ளது.. சீக்கிரத்தில் இதற்கொரு பதில் தெரியவில்லையெனில், சோழங்க நல்லூர் சந்திப்பில் அஜன்டாவில் இல்லாமல் விவாதிக்கப்பட்ட விஷயங்களை வெளிவிட வேண்டியதாகிவிடும்!!!

.... இங்கே பதியப்பட்டது பொன்ஸ் | Leave a Comment »

அரிய வாய்ப்பு!!!!!!

பதிந்தவர் vavaasangam மேல் மே 27, 2006

வருத்தப் படாத வாலிபர் சங்கம் என்னும் சங்கம் கண்டு,

அதை கல்கி கண்ட சங்கமாக்கி,

இந்தியா, சூடான், துபாய், பெரு, அமெரிக்கா என்னும் ‘கண்டங்கள்’ கண்ட கண்டமாக்கிய சாரி, சங்கமாக்கிய

என் அன்பிற்கும் மரியாதைக்குமுரிய சிங்கங்களே!!!!!

இப்போது வந்திருக்கிறது ஒரு அரிய வாய்ப்பு.. இதுவரை வலைப்பூக்களில் மக்களின் முகமகிழ்ச்சிக்காக மட்டுமே எழுதிக் கொண்டிருந்த நம்மையும் ஆராய்ச்சி செய்கிறேன் என்று மதுமிதா கிளம்பியுள்ளார்..

உடலை ஆராய்ச்சிக்குத் தந்து ஏனையோரின் உயிர்காக்கும் மருத்துவப் பணிக்கு உதவும் அளவுக்கு பரந்த மனப்பான்மை கொண்ட இவ்வுலகில், நம்ம மதுமிதா கேட்பது என்ன? என்ன?? என்ன???

அட, என்னங்க மது? என்ன கேட்டீங்க? மறந்து போச்சே!!

ஆங்.. மதுமிதா கேட்பது வெறும் விவரங்களைத் தான்.. பதிவர்களின் விவரங்களை..

என்ன விவரங்கள்?!! எல்லாம் தெரிந்தவை தான்..

அட, உங்களுக்குத் தெரிந்தவை, மற்றவர்களுக்கு அதிகம் தெரியாதவை..

“கேள்வி கேட்கத் தான் தெரியும், பதில் சொல்லத் தெரியாது” என்று சொல்லும் சங்கத்தின் சிங்கங்களே, என்ன செய்ய?!!! , “கேள்விகளை நீ கேட்கிறாயா? அல்லது நான் கேட்கட்டுமா?” என்று நம்ம மது கேட்காமல் விட்டு விட்டார்களே!!

என்னென்ன கேள்விகள் என்பதை இந்தச் சுட்டிக்குச் சென்று தெரிந்து கொள்ளலாம்..

என்னென்ன பதில் சொல்லலாம் என்று ஒரு மாதிரிக்கு, நம் சங்கத்தில் இந்தச் சோதனையை ஏற்கனவே கடந்து வந்த கண்மணிகளின் வீட்டுக்குச் சென்று பார்த்து, (காப்பி அடிக்காதீங்கப்பூ… அப்படியே அடிச்சாலும் பேரு ஊராவது யோசிச்சிப் போடுங்க, அப்படியே வெட்டி ஒட்டாதீங்க தம்பிகளா :) ) எழுத கைடு:

1. சித்தூர்காட் சிறுத்தை தல கைப்பு
2. புதரகம் போய் (ஆற்றிக் குடிக்கக் காப்பி கிடைக்காவிட்டாலும்) சங்கப் பணியைத் தவறாது ஆற்றும் பொன்ஸ்
3. நாகை மாவட்ட கொ.ப.செ. சூடான்(ன) சிவா
4. வட அமெரிக்க மேற்குக் கிளைச் செயலாளர் சந்தோஷ்

ஆகவே கண்மணிகளா, எழுதி முடித்த விடைத்தாளை இன்விஜிலேட்டர் கிட்ட கொடுக்காம அப்படியே வந்துருவீங்களே, அது மாதிரி இல்லாமல், இதை எழுதி முடித்தபின், மதுமிதா அக்காகிட்ட பத்திரமாக் கொண்டு போய்ச் சேர்த்துட்டு, அப்புறம் நம்ம சங்கப் பலகைலயும் ஒருவார்த்தை போட்டுடுங்க.. அப்போத்தான் நம்ம சங்க மக்கள் வந்து பார்த்து ஆதரவு கொடுக்க வசதியா இருக்கும்!!!

இத்துடன் சோடா குடிக்கும் வழக்கம் இல்லாததால், நல்லா ஐஸ்போட்டு ஒரு பாதாம் பால் (சிக்கனமா ஒரு 10 டாலரில் போதும், குங்குமப்பூ, பனங்கற்கண்டு எல்லாம் போட்டிருந்தாலும் பரவாயில்லை) கொண்டுவருமாறு சொல்லிக் கொண்டு, என் சிற்றுரையை முடித்துக் கொள்கிறேன்..

பின் குறிப்பு (அதாங்க, மைக்கைப் பிடுங்கினதுக்கு அப்புறமும் பேசினது): வ.வா.சங்கத்தின் உறுப்பினர்கள் மட்டும் தான் என்பதில்லை,
க.பி.க. கழகத்தினர்,
வா.வ.ச வினர்(அட, கவிதா, நீங்களும் நானும் மட்டும் இருக்கோமே, அந்த சங்கம் தான்) ,
ப.ம.க வினர் மற்றும்
எங்கள் சங்கத்துக்கு அடிக்கடி எட்டிப் பார்த்து
ரசித்து விட்டு மட்டும் போகும் (அட ஒரு நெனப்புத்தாங்க!! ) மற்றவர்களும்
மதுமிதாவுக்குப் பதில் சொல்லலாம்…

(கைப்பு ஸ்டைலில் படிக்கவும்) : அவங்க ரொம்ம்ம்ம்ம்ம்ப நல்லவங்க.. யார் எத்தனை பதில் சொன்னாலும் தாங்குவாங்க!!!

தனிக் குறிப்பு: பெருசு: இது உமக்குத் தான்.. அப்படியே கனாக் கண்டுகிட்டு வெண்பாடிகிட்டு இருக்காதீர்.. சீக்கிரமா, ஜூன் 10க்குள்ள முடிச்சி கொடுங்க!!

.... இங்கே பதியப்பட்டது பொன்ஸ் | Leave a Comment »

கல்கி கண்ட ‘தல’

பதிந்தவர் vavaasangam மேல் மே 17, 2006

மேல் விவரங்களுக்கு இந்தப் பதிவைப் பார்க்கவும்

.... இங்கே பதியப்பட்டது பொன்ஸ் | Leave a Comment »

கல்கியில் கைப்பு!!!!!

பதிந்தவர் vavaasangam மேல் மே 15, 2006

இதனால் தமிழ் வலைப்பதிவு உலகத்தில் இருக்கும் அனைத்துக் கட்சியினருக்கும் அறிவிக்கப்படுவது என்னவென்றால், தமிழ் வலைப்பதிவு நாட்டில் மட்டும் கொடி நாட்டி ஆட்சி நடத்திக் கொண்டிருந்த எங்கள் சங்கத்தின் சிங்கம், முன்னாள் மால்கேட் மாணிக்கம், இந்நாள் சித்தூர்காட் சிறுத்தை, அண்ணன் கைப்புவின் சங்கமும், அவர்தம் பெருமையும் தமிழகத்தில் அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் நிறைந்துள்ளது..

இதை, ஜொ.பாண்டியின் உற்ற நண்பரும், நமது தோழமைக் கட்சியான க.பி.கவின் தலைவருமான பால பாரதி சொன்ன போது நானும் நம்பவில்லை.. அவர் சொன்னது போல், இந்த வார கல்கி இதழ் வாங்கிப் பார்க்கும்போது தான் அண்ணனின் பெருமையை அறிந்து மனம் பெருமிதத்தால் விம்மியது என்று சொன்னால் அது மிகையாகாது.

கல்கி இதழில் “ஸர்ச் இன்ஜின்” பகுதியில் அண்ணன் கைப்புவின் மாண்மையும் வலைப்பதிவின் நோக்கமும் தெளிவாக, சந்தேகத்துக்கு இடமின்றி விண்டு விண்டு வைக்கப் பட்டுள்ளது.

கல்கி சொல்வது யாதெனில்:

கைப்புள்ள கட்சி (கட்சி பேரத் தான்யா மாத்திப்புட்டாய்ங்க!!!)

(எங்கள் தலைவர் கைப்பு தலைமையில் உருவான லட்சிய கட்சி இது. கட்சியின் கொள்கை: கைப்புவைக் கலாய்த்தல்.)

கே: தேர்தல்ல உங்க வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு?
ப: செயிச்சாச்சுன்னு எழுதிக்க…ஒரு மூணு பக்கத்துக்கு தமிழ் நாட்டுல்ல வ.வா.ச… அ.உ.ஆ.சூ.கு.க… மல்லிகை கூட்டணிப் போட்டிப் போடற தொகுதில்ல எல்லாம் எங்க கூட்டணி வேட்பாளர்கள் பேரை ஹைலைட் பண்ணி இவிங்க எல்லாம் செயிச்சுப்புட்டாயங்கன்னு போட்டுக்க…

கே: மால்கேட்ல்ல அப்படி என்ன பண்றீங்க?
ப:பில்டிங் கான்டிராக்ட்ன்னு ஊருக்குள்ளே கவுரமாச் சொல்லி வச்சுருக்கேன் நீயும் அதையே மெய்ன்டேன் பண்ணு அது தான் உனக்கும் நல்லது… எனக்கும் நல்லது…

கே:நீங்க ஆட்சிக்கு வந்தா என்னப் பண்ணுவீங்க?
ப: என்ன கேள்வி இது ராஸ்கல்… ஆட்சிக்கு வந்தா ஆட்சி பண்ணுவோம்ய்யா… வென்று…

கண்ணுகளா, எங்ஙனயோ பார்த்தமாதிரி இருக்குதா? எல்லாம் நம்ம கழகப் போர்வாள், சென்னை சுனாமி, சீவலப்பேரி பாண்டியான அண்ணன் தேவின் “கைப்புள்ள பேட்டி” யின் பகுதி தான்..

எனவே சங்கக் கண்மணிகள் தமிழ்நாட்டுக்கே அண்ணனான ‘கல்கி கண்ட தல’ கைப்புவுக்கு பெரிய வெடிசூட்டு விழாவை, ஆங், டங் ஆப் தி ஸ்லிப்புங்கோ, முடி சூட்டு விழாவை சீக்கிரம் ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விழாவில் அண்ணன் புகழைத் திக்கெட்டும் பரவச் செய்த கழகப் போர்வாள் தேவுக்கு தங்க வாள் தர கட்சியின் நிதி நிலைமை இடம் கொடுக்காததால், ஒரே ஒரு வாளை மீன் போட்டு செய்த மீன் குழம்பையும் அளிக்க ஏற்பாடாகி இருக்கிறது. இந்த நல்ல செய்தியைச் சங்கத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்த பாலபாரதி ஐயாவிற்கும் சங்கத்துச் சார்பாக பொற்கிழி காத்திருக்கிறது.. (அடியில் கிழிந்திருந்தால் சங்கம் பொறுப்பல்ல!)

அனைவரும் வாரீர்.. எதிரிக் கட்சித் தலைவரும் தொண்டர்களும் வரலாம், ஆனால், முகமூடியைக் கழற்றிவிட்டு வந்தால் மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.

.... இங்கே பதியப்பட்டது பொன்ஸ் | Leave a Comment »

கோர்ட்டில் பார்த்தீபன்… குமாஸ்தா ஓட்டம்..

பதிந்தவர் vavaasangam மேல் மே 13, 2006

பார்த்திபன், வ.வா.சங்கத்தினருக்கு அவதூறு ஏற்படும் வகையில் செய்தி வெளியிட்டதால், அதனை எதிர்த்து அவதூறு வழக்குப் பதிவு செய்யப் பட்டது. கோர்ட்டில் நடந்த விபரங்கள் பின்வருமாறு:

வக்கீல் வீராச்சாமி: யுவர் ஹானர், இந்த வழக்கு சம்பந்தமாக ‘குண்டக்க மண்டக்க’ பார்த்திபனைக் நெடுக்கு விசாரணை செய்யவேண்டும் (எவ்வளவு நாள் தான்யா குறுக்கு விசாரணை செய்யறது?!!)

ஜட்ஜ் கருத்து கந்தசாமி: Mர். வீராச்சாமி, ப்ளீஸ் ப்ரோசீட்

டவாலி: ‘குண்டக்க மண்டக்க’ பார்த்திபன்!
‘குண்டக்க மண்டக்க’ பார்த்திபன்!!
‘குண்டக்க மண்டக்க’ பார்த்தீபன்!!!

குமாஸ்தா: ம்ம்.. சொல்லுங்க: “நான் சொல்வதெல்லாம் உண்மை.. உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை..”

பார்த்தி: அது எப்படிங்க உண்மை சொல்ல முடியும்? இப்போ நான் கேக்கறேன்.. இந்த ஜட்ஜ் ஏன் கண்ணாடி போட்ருக்காருன்னு!! கண்ணு தெரியலை, போட்ருக்காருன்னு நீ சொல்லமாட்ட.ஏன்னா அது தான் உண்மை.. வெயிலுக்குப் போட்ருக்காருன்னு தான் நீ சொல்லுவ.. இல்லைன்னா உனக்கு வேலை போய்டும்ங்கறது உண்மை.. அந்த உண்மையச் சொன்னா, உனக்கு வேலை இல்லைங்கற உண்மைய உன்னால உண்மையா ஒத்துக்க முடியுமா?

குமாஸ்தா: (தொப்பியை எடுத்துவிட்டு தலையைப் பிய்த்துக் கொள்கிறார்).. ஏதோ குத்துமதிப்பா சொல்லும்மையா..

பார்த்தி: குத்துக்கு மதிப்பு இருக்கா? இந்தக் குத்துக்கு என்ன மதிப்பு? (என்று முஷ்டியை மடக்குகிறார்)

குமாஸ்தா: (ஜட்ஜைப் பார்த்து) ஐயா ஆளை விடுங்க.. இந்த ஆள் வெளியே போனதும் நான் திரும்பி கோர்ட்டுக்கு வர்றேன். எனக்கு ரெண்டு வாரம் சி. எல். குடுத்துடுங்க..

(ஜட்ஜ் பதில் சொல்லுமுன்னே குமாஸ்தா, தலை தெறிக்க வெளியே ஓடுகிறார்)

வக்கீல் வீராச்சாமி: யுவர் ஹானர், இப்படி எல்லாம் இவர் செய்வதால் தான் எங்கள் கட்சிக்காரர் கைப்பு வெளியே தலை மறைவாக இருக்கிறார்.

இன்னும் வரும்.. இப்போதைக்கு பார்த்தியைச் சமாளிக்க இத்தோட நிறுத்திக்கிறேன்.. மேலும் நடந்தது என்ன என்று அறிய வ.வா.சங்க நோட்டீஸ் போர்டை அடிக்கடி பாருங்கள் :)

.... இங்கே பதியப்பட்டது பொன்ஸ் | Leave a Comment »

சங்கம்.. சிங்கம்… கைப்பு..

பதிந்தவர் vavaasangam மேல் மே 3, 2006

சங்கம்.. சிங்கம்… கைப்பு..

— தளபதி சிபிக்காக..

தொண்டரடிப் பொடி உறுப்பினர் பொன்ஸ்

எங்க வருத்தப் படாத வாலிபர் சங்கத்தைப் பற்றி இன்னும் நிறைய பேரு தெரிஞ்சிக்கனுக்கறதுக்காக வேண்டி இந்த அறிமுக மற்றும் கொள்கை விளக்க குறும்படத்தை வெளியிட்ட சங்கத்தின் கொ.ப.செ பொன்ஸ் அவர்களுக்கு நன்றி.

- நாமக்கல் சிபி

.... இங்கே பதியப்பட்டது பொன்ஸ் | Leave a Comment »

புதுசு கண்ணா புதுசு..

பதிந்தவர் vavaasangam மேல் மே 1, 2006

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விவசாயி இளா
இளமைச் செறிவுடன் வடிவமைத்த புது போஸ்டர் :)


சங்கக் கண்மணிகளே.. !!!!!
புது போஸ்டரில் புது குழுமத்தின் பெயர் பாருங்கள்..!!


வந்து சேருங்கள்.. !!!!

– தலைவர் சொல்படி
கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொன்ஸ்…

.... இங்கே பதியப்பட்டது பொன்ஸ் | Leave a Comment »