வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்

100% சிரிக்க

‘தேவ்’ பகுப்புக்கான தொகுப்பு

க்ரேக் கைப்புள்ள – SCOOP NEWS

பதிந்தவர் vavaasangam மேல் ஏப்ரல் 11, 2007

கடந்த மாதம் உலகக் கோப்பைக் கிரிக்கெட் விளையாட வெஸ்ட் இன்டீஸ் போறோம்ன்னு இதே சங்கத்தைச் சேர்ந்த மக்கள் கிளம்பியதும் அதன் பின் அவர்கள் அலட்டலாகப் பேட்டிக் கொடுத்ததும்.. சிறப்பு பயிற்சி என்று கும்மாளம் அடித்ததும் உங்களுக்கு நினைவிருக்கும்..

விளையாடச் சென்ற அணி… என்னவானது என்று விசாரிக்க நம் பதிவுலக சிறப்பு புலனாய்வு குழு முயற்சிகள் மேற்கொண்டதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகி உள்ளன…

கிரிக்கெட் விளையாடச் சென்ற இடத்தில் அணியின் மூத்த வீரர்கள் நடந்துக் கொண்ட முறை குறித்து பயிற்சியாளர் க்ரேக் கைப்புள்ள அனுப்பிய எஸ்.எம்.எஸ்கள் அமுக்கப் பட்டுள்ளன…

அந்த எஸ்.எம்.எஸ்களில் அப்படி என்ன இருந்தது…அதையும் பாருங்க…

“மந்திராப் பேடியை தனக்கு துணைப் பயிற்சியாளராய் கேட்டுத் தான் கதறியும் செவி மடுக்காத பதிவுலகக் கிரிக்கெட் போர்ட் பற்றி மனம் வெதும்பியுள்ளார் கைப்பு..
வெக்கத்தை விட்டு தன் சம்பளத்தில் முக்கால் பகுதியை மந்திரா பேடிக்கு விட்டுத் தருவதாய் கூறியும் போர்ட் அதை ஏற்க மறுத்து பினாத்தும் நபரை சிறப்பு பயிற்சியாளராய் நியமித்துத் தன்னைச் சிறுமைப் படுத்தியதாய் கைப்புக் கண்கலங்கி உள்ளார்”

காலைத்தோறும் தன் கையால் நாலு வீதித் தள்ளி இருந்த மாட்டுப் பண்ணைக்குச் சென்று தானே கறந்து வீரர்களுக்கு ஊட்டச் சத்து வழங்க வைத்திருந்த பசும் பாலின் க்ரீமி லேயரை கேப்டன் என்ற ஆணவத்தில் கொத்தனார் எடுத்துக் குடித்து விட்டு குப்புற படுத்து குறட்டை விட்ட நிகழ்வுகளை ரிங் டோனாக நண்பர்களுக்கு பார்வர்ட் செய்துள்ளார் க்ரேக் கைப்புள்ள..

விளக்கு வைத்தப் பின் விளையாட மாட்டோம் என்று அடம் பிடித்த சீனியர் பிளேயர்களும்… கடும் வெயிலில் ஆடினால் காம்ப்ளெக்ஷ்ன் கருத்து விடும்.. அவ்வளவாக விளம்பரங்கள் வராது என்று அடம் பிடித்த இளம் வீரர்கள் என அல்லல் கதைகளை இ மெயிலை இறைத்துள்ளார் கோச் கைப்புள்ள..

‘சுமா’ராக தான் பயிற்சி செய்வேன்.. சு(ம்)மா சு(ம்)மா எல்லாம் பயிற்சி செய்ய முடியாது… நீ சு(ம்)மா சு(ம்)மா என்னை மிரட்டுனே என் ஆறு கோடி ரசிகர்களுக்குப் பதில் சொல்ல வேண்டியிருக்கும் என பல்டி அடித்த வெ(ற்)றி வீரர் கொடுத்த டார்ச்சர் என அவர் டைரியின் கண்ணீர் பக்கங்களூம் நம் கையில் சிக்கி உள்ளன…

மேட்ச் பிராக்டீஸ் பார்க்க வந்த இளம் ரசிகைகளின் யாகூ/ஜி-மெயில் ஐடி வாங்கி கடலை சாகுபடி செய்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்த அந்த மீனாட்சி நகரின் வீரர் தன் லாப்டாப் புடுங்கி வைத்து அசிங்கப்படுத்திய நிகழ்வையும் பதிவாகப் போட்டுள்ளார்..

இன்னும் ரகசியங்கள் நிறைய உள்ளன…

உயிருக்குப் பாதுகாப்பற்ற நிலையிலும் மக்களுக்கு உண்மைச் சொல்லக் கடமைப் பட்டு சங்கத்தின் போர்வாள் ஐடியைக் கைப்பற்றி இந்தப் பதிவை அவ்ர்கள் சங்கத்திலேயே வெளியிடுகிறோம்…

பதிவுலக மக்களே எங்கள் உயிரை இந்த சங்கத்துச் சிங்கங்கள் பிராண்டாமல் பாதுகாத்து கொடுங்கள்…

இவ்வளவு விசயங்களை விசும்பிய க்ரேக் கைப்பு இப்போ எங்கே? அதையும் தைரியமா உங்களுக்குச் சொல்லுறோம்.. கீழேப் போங்க.. படத்தைப் பாருங்க….

இந்தப் படத்தில் கீழ் நோக்கிப் பாய்வது யாருன்னு நான் உங்களுக்குச் சொல்லணுமா….

தள்ளி விடுறவங்களை உங்களுக்கு அடையாளம் தெரியுதா?

இதற்குப் பின்னால் பெரும் சதி இருக்கும் போல் உள்ளது..

முன்னணி கிரிக்கெட் பதிவர்களான மணிகண்டன், பாஸ்ட் பவுலர், அவந்திகா உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சி பற்றி எதுவும் சொல்லாதது பெரும் அதிர்ச்சியாக உள்ளது….

பதிவுலகம் க்ரேக் கைப்புள்ளயை மறந்து விட்டதா என்ன?

.... இங்கே பதியப்பட்டது தேவ் | 38 மறுமொழிகள் »

சங்கம் RECRUITMENT

பதிந்தவர் vavaasangam மேல் ஏப்ரல் 5, 2007

வழக்கமா கம்பெனிக்குத் தான் ஆள் வேணும்ன்னு விளம்பரம் கொடுப்பாயங்க…

உலக வரலாற்றில் முதல் முறையாக ஒரு குழு வலைப்பதிவிற்கு பதிவுகள் எழுதவும், வார்ப்புரு மேம்படுத்தவும் ஆட்கள் தேடி வரும் விளம்பரம் இது….

வயது எல்லாம் தடையில்லங்க.. வாலிப வயசுன்னு நினைக்கிறவங்க யாரும் எழுதலாம்..

பதிவுல்ல JEWELTASTE கண்டிப்பா இருக்கணும்… அடுத்தவங்களை புண்படுத்தாத JEWEL TASTE..

யார் வந்து கலாய்ச்சாலும் தாங்குற அளவுக்கு நல்லவனா.. இல்லை ரொம்ப நல்லவனா இருக்கணும்…

ஆண் / பெண் பேதம் இல்லை.. எல்லோரும் விண்ணப்பிக்கலாம்

வார்ப்புருவின் மூலம் JEWELTASTE கொடுக்க முடியும்ன்னு நினைக்கறவ்ங்களும் விண்ணப்பிக்கலாம்

இதுக்கெல்லாம் எவ்வளவு டாலர் சம்பளம்ன்னு கேக்கறவ்ங்களுக்கு கிலோ கணக்குல்ல அல்வாவை அன்புங்கற பேர்ல்ல கொடுப்போம் சிரிச்சுகிட்டே வாங்கிக்கணும்… ரொம்ப திறமைசாலிகளுக்கு சங்கம் வாங்கிய ஆப்புக்கள் சரி சமமாகப் பிரித்து அளிக்கப் படும்.

‘SANGAM IS AN EQUAL OPPORTUNITY FAIR PLAY GROUP ‘

நேரமும்…. நாலு பேரைச் சிரிக்க வைக்கணும்ங்கற மனசும் உள்ளவங்க வாங்க…

உங்களைப் பத்தி சிறிசா ஒரு பின்னூட்டம் போடுங்க… அதுல்ல உங்க சுட்டியைக் கொடுங்க…

சங்கத்துக்கு வாங்க.. சிரிக்க வைச்சு சரித்திரம் படைங்க…

.... இங்கே பதியப்பட்டது தேவ் | 27 மறுமொழிகள் »

ஏலேய் கழுகு ராஸ்கோலு…

பதிந்தவர் vavaasangam மேல் மார்ச் 15, 2007

கடும் கடுப்புடன் கைப்புள்ள சங்கத்து திண்ணையில் ஏறி நின்று எட்டப் பார்த்துக் கொண்டிருந்தார்..

ஒரு பயலைக் காணும்.. அம்புட்டு பயலும் பாண்டி பொறந்த நாளுக்கு பீரும் கறி சோறும் தின்னுபுட்டு சேறும் சக்தியுமா எங்கிட்டுப் படுத்துக் கிடக்கானவளோ… என் கைப்பொண்ணு என்னைக் கைவிட்ட நாள்ங்கற ஒரே காரணத்துக்காக நேத்து தான் விருந்துக்குப் போகல்ல.. தலயாச்சே ஒத்த கிளாஸ்ல்ல ஒரு நாலு மடக்கு.. ஒரு நாலு லெக் பீசு.ன்னு பார்சலாவது போட்டு அனுப்பியிருக்கலாம்..

விளக்குமாத்துக் கூட்டத்துக்குத் தலயா வாழுறதை விட எங்கனயாவது பெருக்குமாறா வாழ்ந்து இருக்க இடத்தைச் சுத்தம் பண்ணலாம்ய்யா…

“ஏலேய் தேவ்.. இங்கண வா.. “

நான் பம்மி கைகட்டி நிக்க…தல என்னைச் சுத்தி வந்து பாத்தார்.

“நேத்து பலமான சரக்கோ… நல்ல தீனியா… தொண்டைக் குழி வரைக்கும் தின்னுருப்பப் போலிருக்கு. வாயைத் திறந்தா ஏப்பம் வந்துரும்ன்னு வாய்க்கு ஜீப் வச்சா மாதிரியே நிக்குற… நல்லாயில்ல..”

நான் எதுவும் பேசவில்லை…தலையைக் குனிஞ்சுகிட்டேன்..

“ஏன்டா..எனக்கு சங்கம் வைக்க சப்பான்ல்ல சாக்கிசான் மச்சினிச்சி வந்தப்போ வேணாம்ன்னு சொன்னேன்… அமெரிக்காவில்ல மைக்கேல் ஜாக்சன் கேர்ள் பிரண்ட் கேட்டப்போ நோன்னு சொன்னேன்.. லண்டன்ல்ல பாப் பாடுமே அந்தப் பிள்ள.. ஆங் பேர் கூட பட்டாணி பியர்ஸ்…

“தல அது பிரிட்டனி ஸ்பீயர்ஸ்”

“எதோ ஒண்ணு.. வருத்தமாப் பேசிகிட்டு இருக்கேன் திருத்தமாச் சொல்லுர நீயு.. மொகத்துல்லயே குத்திப் புடுவேன்… அந்தப் பிள்ளயப் பெத்த ஆன்ட்டி வந்து சங்கம் வைக்கிறேன்ன்னு ஸ்மைல் விட்டப்போக் கூட நான் சிலிப் ஆகல்லயே.. உனக்குத் தானே அந்த வாய்ப்பைக் கொடுத்தேன்.. இப்படி எனக்குத் துரோகம் பண்ணிட்டு வந்து நிக்குறீயே நல்லாயிருக்கா?”

“நான் என்ன தல பண்ணேன்….”

“பேசாதே நீ பெயிண்ட் அடிச்சு விட்ருவேன் உனக்கு.. ஆமாச் சொல்லு கத்தி பாத்திறுக்கீயா நீயு…”

“உங்களுக்கு தேவைப்பட்டா நறுக்க சங்கம் செலவுல்ல வாங்குனோமே அது தானே?”

“என்னது என்னிய நறுக்கவா? இது வேறவா?”

“அய்யோ தல ஆப்பிள்.. கொய்யான்னு உங்களுக்குத் தேவைப்பட்டா பழ்ம நறுக்கன்னு சொல்ல வந்தேன்..”

“சொல்ல வந்தாச் சொல்லணும்ய்யா வென்று… சொல்லாமா இருந்தா என்ன அர்த்தம்.. ஆமா கத்தியேப் பழம் நறுக்கப் பாத்து இருக்க நீயு… போருக்கு போயிருக்கீயா நீயு..”

“இல்ல தல”

” அப்புறம் உனக்கு போர்வாள்ன்னு பேரு வேற… எப்படி வந்துச்சு அந்தப் பெயர்?”

“எல்லாம் நீங்களும் சங்கமும் கொடுத்தது தல”

“வார்ததையிலே வெல்வேட் ஷாம்பூ வழிஞ்சாப் போதாது… மனசுல்ல இருக்கணும்.. மனசுல்ல இருக்கணும்ய்யா”

“இப்போ என்னத் தல ஆச்சி.. ஏன் இவ்வளவு டென்சன்…?”

“ப்ங்சனுக்கு என்னியக் கூப்பிட்டாங்களாய்டா.. டென்சன்னு மட்டும் சொல்லுங்கடா.. நேத்து அம்புட்டு பயலும் குடியும் கூத்துமா இருந்து இருக்கீய,….ஊரைச் சுத்திப் பாக்க வந்த வெளிநாட்டுப் புள்ளக இடுப்பைப் புடிச்சுகிட்டு டான் ஸ் எல்லாம் ஆடியிருக்கீங்க… என்னையக் கூப்பிடணும்ன்னு தோண்ல்ல உஙக்ளுக்கு” தலக் கண் கலங்க ஆரம்பித்தது..

” தல அப்படி டான் ஸ் எல்லாம் எதுவும் நடக்கல்ல… நம்ம பயல்வ ஆளுக்கு ஒரு பக்கம் ஆபிஸ்ல்ல ஆணி புடுங்குனதுல்லயே குவார்ட்டரை ஒரே கல்புல்ல குப்புற கவுத்த மாதிரி கவுந்து தான் விருந்துக்கே வந்தாயங்க… இதுல்ல டான் ஸ் எல்லாம் டூ மச்.. “

“பேப்பர்ல்ல போட்டோவோட போட்டிருக்கானேப்பா.. நம்ம டவுசர் பாண்டி சொன்னானே”

“டவுசர் பாண்டி நேத்து நாலு ரவுண்ட் பிரியாணி தின்னுப்புட்டு இன்னும் கொஞ்சம் பிரியாணி போடுங்கய்யான்னு பண்ண அலம்பல் தாங்கமா.. நம்ம ராயல் பிரியா ஆணி தானேடா வேணும்ன்னு அவன் உக்கார இடத்திலே நாலு ஆணியை எடுத்து வச்சுட்டான்.. பின்னாலே பாதிக்கப்பட்ட டவுசர் பாண்டி.. உங்க கிட்டத் தப்பா வத்தி வச்சிருக்கான்ய்யா”

“பாண்டி பொறந்த நாளுக்கு உன் கச்சேரியிலே பெரிய வெளம்பரம் எல்லாம் வச்சியே என பொறந்த நாள் என்னிக்குன்னு உனக்குத் தெரியுமாடா..பாண்டி பிகரை இன்ட்ரோ பண்ணுவான் பிக் அப் ஆயிரலாம்ன்னு கணக்குப் போட்டுத் தான் நீ இப்படி செஞசு இருக்கீயாம்… இளா குறுஞ்செயதி அனுப்பி உன் குட்டை உடைச்சுட்டார்ல்லே…”

“ஆகா பாசத்துல்ல பண்ண பலகாரத்தை இப்படி பரிகாசம் பண்ணலாமா தல… நம்ம புலிக்குட்டி பொறந்த நாளுக்குக் கூடத் தான் நான் வெளம்ப்ரம் வச்சேன் அதையும் விவகாரம் ஆக்கிருவீங்கப் போலிருக்கே”

“அந்தச் சண்டாளனைப் பத்தி பேசாதே.. அவனைத் தான் தேடிக்கிட்டு இருக்கேன்..சூடான்னுக்கு போனப் பொறவு அவன் பிரெயின் குடோன் தப்பா வேலைச் செய்யுது…”

“தல அவன் நம்ம பய தல.. ஏன் இந்தக் கொலவெறி..”

“பேசாதே… அவன் பண்ணக் காரியத்துக்கு அவனை…”

“அப்படி என்னப் பண்ணான் தல….நாகையின் அடுத்த ச.ம.உ நான் தான் சொல்லிட்டானா? அது சும்மா அவிங்க ஊர் சின்னப் புள்ளகலைக் க்ரெக்ட பண்ண அவன் போடுற பிட் அதைப் போய் பெரிசா எடுத்துகிட்டு.. விடு தல…”

” ம்ஹூம் நீங்க ஒரு பயலும் சரியில்ல… அவன் அவன் தனக்குத் தானே சுய வெளம்பரம் செஞ்சுகிட்டு திரியுறீங்க…. “

“சங்கத்தைப் பத்தி அந்த கழுகு எழுதுனதுல்ல டென்சன் ஆகிட்டாங்களா தல…”

ஒரு வழியாத் தலயின் கோவத்துக்கான காரணத்தை நான் கண்டுபிடிக்க…தல மெல்ல கனைத்தார்..

“முன்னாடி சாம்புன்னு ஒரு குரூப் கிசுகிசுப் போட்டாயங்க.. அவிங்களும் சங்கம் பத்தி எழுதுனாயங்க பொறுத்துகிட்டேன்.. இப்போ இந்த கழுகும் கன்னாபின்னான்னு எழுதுது.. என்னாலே பொறுக்க முடியாது.. சங்கத்துப் பயலுக நீங்க எதாவது செய்வீங்கன்னு நான் சும்மா இருந்தா நீங்க என்னன்னா பிரச்சனையை விட்டுட்டு அவனுக்குப் பொறந்த நாள்.. இவனுக்கு கல்யாண நாள்… டெவிலுக்கு ஷோக் காட்டுறோம்ன்னு சல்லித் தனமாத் திரியுறீங்க.. அதான் நானே களத்துல்ல இறங்கிறதா முடிவு பண்ணிட்டேன்….”

” சொல்லுங்க தல என்னப் பண்ணனும்…”மொத்த சங்கமும் தல முன்னால் தீடிரென ஆஜராகி கைக் கட்டி நின்னோம்.

சங்கத் திண்ணையில் ஏறி நின்ன தல.. வானத்தைப் பார்த்தார்.. அங்கே சிறிசும் பெருசுமா வட்டமிட்ட கழுகை கைத் தட்டிக் கூப்பிட்டார். அவை தலயைக் கண்டு கொள்ளாமல் தன் ரவுண்ட்ஸில் கவனமாக் இருக்க தலக்கு அசிங்கமாப் போனது.. அதை அவர் வெளியே காட்டாமல் ( எப்போக் காடியிருக்கார்)

ம்ம்ம்.. நல்லாக் கேளுங்க…
ஏ! கழுகு ராஸ்கோல் உனக்கும் தான்…
உன் பதிவுல்ல என்னையப் பத்தியும் கிசு கிசு வரணும்..

நான் அகமதாபாளையத்துல்ல ரெண்டு சேட்டு வீட்டு புள்ளகளை உஷார் பண்ணி செட்டில் ஆயிட்டேன்..

இல்ல இந்த நமீதா புள்ளக்கு அகமதாபாளையம் பக்கத்து ஊர் தானமே.. அந்தப் புள்ளக்கும் எனக்கும் லவ்ஸ்..

சிம்புவைப் பிரிஞ்ச நயந்தாரா இப்போ என் ஓதட்டைக் கடிச்சு போஸ் கொடுக்கணும்ன்னு அடம் பிடிக்குது இப்படி எது வேணுமோ எழுது… ஆனா எழுதணூம்…

“இந்தக் கிசுகிசுல்ல பேர் வரமா ஒரு பய மதிக்கமாடேன்கிறான்…”ஒரு விதக் கெத்துடன் எங்களைப் பாக்க….

“இதெல்லாம் ஒரு பொழப்பான்னு ” நாங்க அவருக்கு லுக் விட

வழக்கமானப் பாணியில் வழி விடு வழி விடு தலக்கு நிறைய வேலை இருக்கு.. பேக்கு மாதிரி பராக்கு பாக்காமப் போய் வாங்குற சம்பளத்துக்கும் போனஸ்க்கு ஒழுங்கா ஆணி புடுங்குடா அப்ரசெட்டுக்களான்னு கிளம்பி போயிட்டார்…

.... இங்கே பதியப்பட்டது தேவ் | 15 மறுமொழிகள் »

சங்கம்-150. விஜயவீராச்சாமியின் "அரட்டை அரங்கம்"

பதிந்தவர் vavaasangam மேல் பெப்ரவரி 12, 2007

சிகப்பு சட்டையும் மஞ்ச பேண்ட்டும் போட்டு பளபளன்னு தலையிலே பிரவுன் ஜெல் டாலடிக்க டகால்டியா சங்க அரங்கம் உள்ளே வர்றார் அண்ணன் வீராச்சாமி!!!

அரங்கத்துக்கு மேல கொட்டை எழுத்திலே
சங்கம் ஆரம்பிச்சது பொழப்பத்த வேலை..
சங்கம் ஆரம்பிச்சது போக்கத்த வேலை…
சங்கம் ஆரம்பிச்சது கிறுக்கு வேலை…
சங்கம் ஆரம்பிச்சது அதையும் தாண்டி மகா வெட்டி வேலை..

வணக்கம் வீராச்சாமி படத்தைப் பார்த்துட்டுப் பாதி ராத்திரியிலேத் தூக்கம் கெட்டு ஏக்கமா என் வீட்டு பக்கம் வந்து.. படம்ன்னா இது படம்ன்னு சொல்லி கையப் பிடிச்சு கதறி அழுதப் பாசமுள்ள தங்கச்சி கைப்பொண்ணு கேட்டுகிட்டதால்ல அடுத்த வந்த ஹாலிவுட்காரனை “சிம்புவை வச்சு இப்போதைக்குப் படம் எடு…! எனக்கு சங்கத்துல்ல வேலை இருக்கு! என்னை ஆளை விடு!!” ன்னு சொல்லிட்டு அவசரமா வந்து இருக்கேன்..

“இன்னும் வீராச்சாமி வெற்றி கொடுத்த டயர்ட் எனக்கு போகல்ல..!
அடுத்த சூப்பர் ஸ்டார் என் பையன் சிம்பு தான் அந்த நம்பிக்கை வீண் ஆகல்ல.. !”

“கைம்பொண்ணா.. என்ன மேட்டர் அது?” ஜொள்ளு மைல்ட்டா டவுட் ஆக.. பாண்டி டி.ஆர்க்கு தங்கச்சி சென்டிமென்ட் ஓர்க் அவுட் ஆகும்ன்னு நான் தான் தலக்கு தசாவதாரம் மேக் அப் மேனை கடனா வாங்கி கைப்பொண்ணா டேக்கரேட் பண்ணி அனுப்பி வச்சேன்..”ன்னு ராயல் காதை கடிக்க ‘தல’ இருக்கும் பக்கம் பாண்டி லுக் விட.. தலயின் கண்ணுல்ல லிட்டர் லிட்டரா தண்ணி…

” முடியலடா..! அவரை கூப்பிட போன என்னை ஓம்பது மணிக்கு ஆரம்பிச்சு விடிய விடிய மூணு மணி வரைக்கும் முக்கா கொயர் நோட்ல்ல எழுதுன அம்புட்டு தங்கச்சி பாச டயலாக்கயும் என் காது ஜவ்வு அந்து அந்தரத்துல்ல தொங்குற வரைக்கும் பேசுனார்.. முத்திரச் சந்துல்ல கட்டத்துரை குருப் கழுதையை விட்டு பின்னாலே கடிக்க வைக்கும் போது கூட அசராத என்னைய அச்ர வச்சுட்டார்ய்யா வீராச்சாமி… “

அவ்வ்வ்வ்வ்வ்வ் கண்ணாலே தல கதறுனது பாண்டிக்குக் கேட்டுருச்சு.

சங்கம் தொட்டாச்சு 150 போஸ்ட்
அதுல்ல கிட்டத் தட்ட எல்லாமே வேஸ்ட்
மட்டனை விட சிக்கன் தான்டா டேஸ்ட்
இந்த பரட்டை அரங்கத்துக்கு உங்க டி.ஆர் தான் ஹோஸ்ட்


“என்னய்யா சங்கம் போஸ்ட் எல்லாம் வேஸ்ட்ங்கறார்.. சொ.செ.சூவா?ன்னு இளா காதைக் கடிக்க..

சிபி எழுகிறார். பாக்கெட்டில் இருந்து… பாம் டாப் எடுத்து அவசரமாய் கலாய்த்தல் திணை ஓப்பன் பண்ணி அதில் வீராச்சாமியைக் கலாயத்த அனைத்துப் பதிவுகளின் தொடுப்பையும் கொடுக்கிறார்..அதை விட அவ்சரமாய் டி.ஆர்க்கு 10 கேள்விகள் என்ற அடுத்தப் பதிவையும் வெளியிடுகிறார்.

“ராம் எதையும் தாங்குற சிங்கம் ஆனா நம்ம தலயே கேப் இல்லாம கதறுராருன்னா நானு ராமு எல்லாம் பச்சப்புள்ளங்க தாங்க மாட்டோம்.. பரீட்சைக்கே நான் எல்லாம் ஜூரம் வந்து படுத்துருவேன், இது விஷப் பரீட்சை’லேன்னு பாண்டி பரிதாபமா முழிக்க..!

அண்ணன் வீராச்சாமி அரங்கத்தை ஆரம்பிக்கிறார்.

“அதாவதுங்க,பொழப்புங்கறது என்ன? அது ஒரு சொல்,வேலைங்கறது என்ன? அதுவும் ஒரு சொல்.. இந்தச் சொல்லுக்கும் அந்தச் சொல்லுக்கும் அர்த்தம் ஒண்ணுதானே.. ஒன்றான சொல் வேறாக முடியுமா…? என்னப் பொழப்பு இது யார் கிட்ட வேலைக் காட்டுறீங்க விட்டுருவோமா..?” கொத்தனார் முதலில் பேச விசில் பறக்கிறது.

“நாட்டுல்ல நடக்கிறது இலவச அரசு
நெட்ல்ல ப்ரீயா விடச் சொல்லுறது கொத்ஸ் ரவுசு”

பஞ்ச் அடித்து விட்டு மைக்கை மூணாவது ரோவுல்ல உக்காந்து இருக்க செந்தழல் ரவியிடம் நீட்டுகிறார் வீராச்சாமி. “வேலைன்னு தலைப்பைப் பார்த்து இங்கிட்டு வந்தேன்.. அப்படியே நம்ம பக்கத்துல்லயும் விளம்பரம் கொடுத்துட்டு வந்து இருக்கேன்…! பொழப்பத்தா என்ன?போக்கத்தா என்ன?? அட கிறுக்குதான் புடிச்சா என்ன?? அண்ணே வெட்டியா இருந்தாலும் வேலை வேணும்ண்ணே… !!என்னண்ணே நான் சொல்லுறது ரைட்டா… நீங்கக் கூட உங்க அடுத்தப் படத்துல்ல எல்லா வேலையும் நீங்களே செய்யாம ஒதுங்கிட்டு மத்த வேலைகளை நம்ம பசங்க கிட்டக் கொடுத்துருங்க… நல்லா செய்வாங்கண்ணா.. ரெஸ்யூம் அனுப்பவா?”

“ஆ டண்ணக்க டனுக்கு நக்கா!! எனக்கே ஆப்பா!!
ரவி நீ மைக்கை கொடுத்துட்டுப் போப்பா..!”

அடுத்து மைக் கவிதா அக்காவிடம் போகிறது..

“ஏனுங்க.. வீராச்சாமிண்ணே ஒங்களுக்கு எதாவது வேலைன்னு ஒன்னு இருக்கா இல்லையா???”

“பொண்ணுங்க கட்டுறது சேலை.. எனக்கோ தலைக்கு மேல வேலை!”

“ஆமாங்க அண்ணா.. நீங்க எப்பவுமே நேரா பேசாம ஏன் அடுக்கி அடுக்கி பேசுறீங்க?”

“தேளுக்கு இருக்குது கொடுக்கு.. எனக்குத் மொழியிலே புடிச்சது அடுக்கு”

மவனே நீ கொஞ்சம் அடக்குன்னு ஆத்திரமா எழும்புன புலிக்குட்டி சிவாவை நான் (தேவ்) கஷ்ட்டப்பட்டு சமாதானம் பண்ணி உக்கார வைக்க வேண்டியதாப்போச்சு.

“நயந்தாரா சிம்பு போட்டோ செய்திப் பத்தி உங்க கருத்து”

“அந்தப் போட்டோ நவீன காதலுக்குக் கட் அவுட்
அது புரியாத எல்லாரும் கெட் அவுட்…”

“போர்வாளு! அக்கா அரங்கத்துக்கு வந்துட்டு சைலண்ட்டா கேப்பக் கஞ்சி காய்ச்சு வீராச்சாமிக்கு ஊத்திகிட்டு இருக்காங்க… விட்டாப் பதிவு பேரை கேப்பக் கஞ்சி வித் வீராச்சாமின்னு மாத்த வேண்டி வரும் ஆமா”ன்னு அணில் குட்டி அலர்ட் கொடுக்க நாம் உஷார் ஆகி மைக் அடுத்து நம்ம ஜி.ரா கிட்டக் கொடுத்தேன்.

தண்ணியில் இருந்த தரையில் விழுந்த மீன் போல் தவித்தவரை.. வீராச்சாமி அண்ணன் பாசத்தோடு நெருங்கினார்.

“ஊருக்குள்ள வாழுது சாதி சனம்
பதிவுலகம் எதிர்பாக்கிறது உங்க வீராச்சாமி விமர்சனம்..
ஏங்குது என் மனம்” ந்னு வெட்டி உசுப்பேத்த…

படு டென்ஷனாய் ஜிரா வெட்டியை ஒரு மொறைப்ப மொறைத்து விட்டு பாஸ் என்று மைக்கை அவருக்குப் பக்கத்தில் இருந்த வெட்டியிடம் கொடுத்தார்.

“என்ன தல நீ வைக்கிற குயிஜ்’க்கு பதில் தெரியல்லன்னா நான் சொல்லுற பதிலை இல்ல ஜி.ரா சொல்லுறார்.. அரட்டை அரங்கம் ரூட் ராங்க் ரூட்டால்ல போகுது” என ராம் பதற…

வெட்டி கம்பீரமாய் மைக் பிடிக்கிறார்..

“வீராச்சாமிண்ணே..! பெங்களூர்ல்ல தமிழ் படத்துக்கு தடையை விலக்கினா கண்டிப்பா உங்க படத்துக்கு ஜிரா விமர்சனம் எழுதுவார்!அதுக்கு நான் கியாராண்டி..!

“அடேய் வெட்டி! காவிரி ஆத்தா உன்னிய மன்னிக்கவே மாட்டா”ன்னு ஜி.ரா சொன்னது எங் காதுல்ல விழுந்துச்சு..

“அண்ணே வீராச்சாமிண்ணே.. கடைசியாப் போட்டிருக்க மாதிரி சங்கம் ஆரம்பிச்சது வெட்டி வேலைங்க.. அந்த டைம்ல்ல நான் பிளாக் பக்கமே வந்தது இல்ல.. அநியாயமா எனக்கு வெளம்பரம் கொடுக்க நம்ம பாசக்கார பய ராமும் பாண்டியும் தான் இப்படி ஒரு ஏற்பாடு பண்ணியிருக்காங்கன்னு நினைக்கிறேன்”னு வெட்டி சொல்லவும்

“அடேய் நெல்லிக்காய் மண்டையா இன்னும் நீ திருந்தலயா??.. ஓனக்கு இன்னொரு டெவில் ஷோ போடணும் போல இருக்கே.. இந்த வெளம்பரம் வெங்காயம் எல்லாம் ஓனக்கு தேவையா??”ன்னு எங்கிருந்தோ கவுண்டர் குரல் அலறலாய் கேட்கிறது….

வெட்டி மைக்கை இளாவிடம் கொடுக்கிறார்..

இளா “க்குத் தனம்… றுக்குத் தனம்.. கிறுக்குத் தனம்…” அப்படின்னு பார்த்தீபன் மாதிரி ஆரம்பிக்க,சிபி குஷியாகிறார். “விட்டா பார்த்தீபன் தான் சங்கம் ஆரம்பிச்சார் ..அவரோட கிறுக்கல்கள் இரண்டாம் பாகம் தான் சங்கம்’னு முத்திரை குத்திருவீங்கப் போலிருக்கு.. பை த பை அடுத்த மாசம் சங்கத்துக்கு பார்த்தீபன் தான் அடுத்த அட்லாஸ் வாலிப்ரா வர்றார்.. நான் பேசிட்டேன் அதுக்கு நெக்ஸ்ட் மன்த் நீங்க தான் என ஒரே போடா போட…

பாண்டியும் சிவாவும் ஏங்கி ஏங்கி அழ ஆரம்பங்றாங்க..

அடுத்த மாசமும் அதுக்கு அடுத்த மாசமும் நமக்கு நாமே ஆப்பு திட்டமா? ராம் மெல்லியக் குரலில் தலயிடம் சொல்ல..

“அகமதாபாளையத்துல்ல அடியிலே அரை இஞ்ச்க்கு ஒரு ஆணி அடிக்கிறாய்ங்கன்னு அவசரப்பட்டு அரை நாள் லீவு போட்டு சங்கம் பக்கம் வந்தா அறுபது நாளுக்கு ஆறு அடிக்கு கடப்பாரையை கடவாப் பல்லுக்கு இடையிலே சொருவ இந்த விவசாயி வழிப் பாக்குறாரே.. ராம் விவசாயி ஆபிஸ்க்கு போனைப் போட்டு அவர் பிளாகருக்கு ஆப்பு வைக்க வழியைப் பார்… அந்தாளு டார்ச்சர் தாங்க முடியல்ல..”

வீராச்சாமி கண்கலங்கி…

கண்ணா தம்பி விவசாயி..
உனக்கு இருக்கது தங்கவாயி..
உனக்காக நான் ஆவுறேன் அட்லாஸ் பாயி..
எல்லாருக்கும் முக்கியம் அவன் அவன் தாயி…

இப்போ பாண்டியும் சிவாவும் வெட்டியும் தேம்பி தேம்பி அழு ஆரம்பித்து விட்டனர். இந்நேரம் உள்ளே வரும் ஜி… மைக் இல்லாம சத்தமா “யம்மாடி ஆத்தாடி… அண்ணே நீங்க ஒரு இந்தியக் கலாச்சாரக் காத்தாடி… அமெரிக்காவுல்ல உங்க படம் ரிலீஸ் பண்ண் விடாம புஷ் கடுப்படிக்கிறார் அண்ணே.”ன்னு கொளுத்தி போடுறாரு..

“ஏ புஷ்…
லிப் டூ லிப் சிம்பு அடிப்பான் கிஸ்…
கல்யாணம் ஆகாத எல்லாப் பொண்ணும் மிஸ்…
இந்த வீராச்சாமியை நீ எதித்து நின்னா தஸ்”

வீராச்சாமி டக்குனு காஸ்டீயும் மாறி வேட்டியை தொடைக்கு ரெண்டு இஞ்ச் மேல எத்தி கட்டி ஒரு காட்டாறு மாதிரி கிளம்ப… நம்ம சங்கக் கூட்டத்தை வேடிக்கைப் பாக்க வந்திருந்த தம்பி “யம்மா கரடின்னு அலறிகிட்டு தலயோட இடுப்புல்ல ஏறி உக்காந்துக்க, இடுப்பு உடைஞ்ச தல தம்பியைப் பார்த்து, “இது இடுப்புடா.. ஏன்டா இப்படி கடுப்பு கிளப்பிகிட்டு…”
“ஐ தல நீயும் அடுக்கு மொழி பேசுறியே”ன்னு இந்திய மண் மிதிச்ச களிப்புல்ல கப்பி ஆனந்தமாச் சொல்லுறான்..

“சின்ன வயசுல்ல சாப்பிட்டு இருக்கேன் பேரிக்கா
என் படத்தைக் காட்ட மாட்டேங்குது அமெரிக்கா..
பீச் ஓரமா இருக்குது நிறைய ராக்…
உன்னாலே சேதமாச்சு ஈராக்…
தமிழ் நாட்டுல்ல நல்லா விக்குது பான் பாராக்
புஷ்.. நீயும் ஒரு நாள் சொல்லுவே இந்த வீராச்சாமிக்கு பராக்கு பராக்கு..
இருக்கட்டும் ய்யா… என் படம் அமெரிக்கால்ல் ஓடல்லன்னு எனக்கு இல்ல கவலை
ஆனா அதை நினைச்சு என் ரசிகன் விடுறான் கண்ணீர் தினமும் நூறு தவலை….”
அப்படின்னு சொல்லிட்டு பயங்கர பீலிங்கா கழுத்தைத் திருப்பிச் சிலுப்பி அழுவ…

“அண்ணே என்னண்ணே நடக்குது???” இங்கே ஒரு ஓரமா இருந்து பரிதாபமா இமசை அரசி குரல் எழுப்ப…

” ஏ… டண்ணனக்கா.. டணுக்குனக்கா…. அடி ரா…
தட்டிப் பார்த்தேன் கொடடாங்குச்சி… பாட்டை வீராச்சாமி பாடவும் கூடவே ஆடவும் ஆரம்பிக்க.. சங்கம் கூரை கழண்டு கீழே விழுந்தது….

தம்பிங்களாஆ.. ( சங்க மக்கள் தான்) நீங்க எம் மேலக் காட்டுனது பாசம்..
அதுக்கு ஈடா இந்த அண்ணனும் தருவான் நேசம்…

“இந்தாங்க ஓங்க எல்லோருக்கும் என் வீராச்சாமி படத்துக்கு இலவச பாஸ்” பாண்டியும் சிவாவும் இதைக் கேட்டதுமே ப்யூஸ் போய் கீழே சரியுறாங்க) “இதை நீங்க எங்க வேணுமோ கொடுத்து எத்தனை தடவ வேணுமோ திரும்ப திரும்ப பார்த்து ரசிங்க…….!”

(இதைக் கேட்டதும் ராம்,தம்பி, கப்பி..இம்சை அரசி… இப்படி ஒரு குருப்பே அதிர்ச்சியிலே கரண்ட் கட் ஆகுது).

திரும்ப திரும்ப பார்த்து ரசிக்கலாம்’ன்னு TR சொன்னதை கேட்டதும் எங்கிருந்தோ டி.பி.ஆரின பதற்ற குரல் கேட்கிறது..ஐயோ திரும்பி பாக்கணுமா.. இந்த ஓண்ணு போதுமே என்னைய கோர்த்து விட்டுருவாயங்களே.. வீராச்சாமி ஓடி முடியற வரைக்கும் கோவாவுக்கே மறுக்க கன்வென்ஷன் போயிர வேண்டியது தான்….!) ருசிக்கலாம்’னு சொல்லிட்டு ஜி.ரா’வை கைக் காட்டி அவருக்கு மட்டும் ரெண்டு பாஸ் கொடுத்துருங்கன்னு கண் கலங்கச் சொல்ல…ஜி.ரா காவிரி ஆத்தாக் கவுத்திட்டீயேன்னு கன்னத்துல்ல கை வைக்க.. வெட்டி வீராப்பாக சிரிக்கறான்.

“பாசக்கார பயலே!!! வெட்டி…!!! வி.ஐ.பி எல்லாத்தையும் பாத்து என் படம் பத்தி் கேட்டு எழுதுனது நீ தானே.. அந்த ஒரு காரணத்துக்காக உனக்கு மட்டும் இனி வரப்போகும் எனனோட் படம்.. என் பையன் சிம்பு ஏன் அவன் தம்பி குறளரசன் 2010லில் ஹீரோவா அறிமுகம் ஆகற படம் வரைக்கும் இலவச பாஸ் கட்டாயம் உண்டுன்னு் சொல்ல.. ஜிரா முகத்தில் சந்தோஷம்..

“வினை விதைத்தவன் வினை அறுப்பான்னு” தமிழ் சங்கம் பாணியிலே பொன்மொழி எல்லாம் சொல்லி வெட்டியை விறைப்பாப் பார்த்தார்.. வெட்டியின் ரியாக்ஷ்ன் பின்னூட்டத்தில் காண்க

கொத்ஸ் மத்த ஆன்றோர் சான்றோர் எல்லாம் வந்த சுவடு தெரியாம எஸ் ஆகி விட.. தல இருந்த பக்கம் நான் பார்க்க… அவர் வாகனத்தில் வீராச்சாமியின் வீச்சுருவா சொருகியிருந்தது.. அப்புறம் என்ன நானு, தல, இளா’னு மூணு பேரும சேர்ந்து சும்மா ஒரு 150 கிலோ மீட்டர் வீராச்சாமியை வண்டியிலே வச்சு தள்ளிகிட்டுப் போய் ஊருக்கே வெளியே விட்டுட்டு அவர் கால்ல விழுந்து கெஞ்சி கதறி கூத்தாடி…

“அண்ணே வேணாம்ண்ணே தமிழங்க பச்ச மண்ணுங்க.. தாங்க மாட்டாய்ங்க.. இனியும் இந்த கெட்டப்பு!! வேணாம்ண்ணே..நிப்பாட்டிருக்கங்கண்ணே… ” அப்படின்னு கோரிக்கை வச்சுட்டு வந்துருக்கோம்….”

150 பதிவுகளாய் எங்களுக்கு நல்லாதரவு வழங்கி வரும் அனைவருக்கும் சங்கம் தலை வணங்கி நன்றி சொல்கிறது..

.... இங்கே பதியப்பட்டது தேவ் | 54 மறுமொழிகள் »

லக்கி லுக்… பிக் ஹிட்… பிக் சல்யூட்…

பதிந்தவர் vavaasangam மேல் ஜனவரி 31, 2007

நவம்பர் மாதத்தில் ஒரு நாள்.. ஒரு முறை நம்ம லக்கி லுக் கூட தொலைப்பேசியில் பேசியிருக்கேன்..

அப்புறம் புத்தகக் கண்காட்சியிலே ஒரு தரம் நேர்ல்ல பார்த்து ஒரிரண்டு வார்த்தைப் பேசிக்கிட்டோம்….

இப்போ எதுக்கு இந்தப் பில்டப்புன்னு கேக்குறீயளா?

இருக்கே.. போன மாசம் நம்ம சங்கத்து அட்லாஸ் வாலிபர் அவர் தானே….

பொதுவா அட்லாஸ் அப்படின்னா ஒரு திடகாத்திரமான ஆளு முதுகுல்ல டின் கட்டினாப்பல்ல் டன் கணக்குல்ல இருக்க ஒரு பாறையைச் சொமக்க வச்சிருப்பாயங்க…நம்ம சங்கத்துக்கு வர்ற அட்லாஸ்களும் அப்படித்தான்.. மக்களைச் சிரிக்க வைச்சு சந்தோஷப் படுத்தணும்ங்கற இமாலய வெயிட்டை முதுகுல்ல சங்கம் கட்டி விட்டுரும்… அவ்ங்களும் சளைக்காமச் சுமைய சுகமாச் சுமந்து மக்களையும் சிரிக்க வைப்பாங்க…

இதே கணக்கோடுத் தான் நம்ம லக்கியும் வர வச்சோம்.. ஆனாப் பாருங்க அவ்ர் வந்த நேரம் சங்கத்துக்கு மொத்தமும் ப்யூஸ் பிடுங்கி விட்டுட்டாயங்க பிளாகரைப் பெத்த புண்ணியவான்க..

லக்கி வரும் போது… கூட நின்னு கும்மி அடிக்க ஆரும் இல்ல.. என்னடாக் கூப்பிட்டாயங்க… வந்துப் பார்த்தா வெறிச்சோடி கிடக்கே.. ஒரு வேளை நம்மளை வச்சு காமெடி கீமெடி பண்ணுறாங்களோன்னு யோசிக்கமா… டகார்ன்னு சங்கத்துக்குள்ளே ஒரு விளக்கைக் கொளுத்தி வெளிச்சம் போட்டு… கூட்டி பெருக்கி சுத்தம் பண்ணி.. சொம்ம கலகலன்னு திருவிழா ரேஞ்சுக்கு ஒரு மாசமும் பட்டயக் கிளப்பிட்டார்…

நண்பா லக்கி.. சங்கம் மொத்தத்தையும் கிட்டத்தட்ட தனி ஆளாவே நின்னு ஒரு மாசமும் தோளில் தாங்கி.. மக்களையும் சிரிக்க வச்சு.. கலக்கிப்புட்டீங்க…

ஓவராப் பீல் ஆவுறோம்ன்னு பாக்குறீயளா.. சங்கத்துப் பயபுள்ளக தல சொல்லுற மாதிரி பாசக்காரப் பயல்வ…

லக்கிக்கு சங்கம் சார்பா மனமார்ந்த வாழ்த்துக்கள்.

.... இங்கே பதியப்பட்டது தேவ் | 10 மறுமொழிகள் »

மகா ஆப்பு போட்டிக்கு வாங்க…வாங்க…

பதிந்தவர் vavaasangam மேல் ஜனவரி 26, 2007

ஓலக வரலாற்றில் முதன் முறையாக தனி ஒரு மனிதனைக் கலாய்க்க உங்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு…

வாங்க மக்களே அலுவலக டென்ஷன்… லவ்ஸ் டென்சன்… வாழக்கை டென்சன் இன்னும் இதர பிற டென்சன் எல்லாத்தையும் கொஞ்சம் ஓரம் கட்டி வச்சிட்டு களத்துல்ல ரவுண்ட் கட்ட வாங்க…

டிசைன் டிசைனா ஆப்பு ரெடி பண்ணுங்க…லோட் லோடாக் கொண்டு வந்து இறக்குங்க…

இம்போர்ட் எக்ஸ்போர்ட் எது வேணுமோப் பண்ணுங்க…

குரூப்பா வாங்க!!!
தனியா வாங்க!!!
ஜோடியா வாங்க!!!

ஆனாக் கண்டிப்பா கையிலே ஆப்பு மட்டும் இருக்கணும்… அப்போத் தான் அலவுட் சொல்லிப்புட்டோம்…

‘தல’ ஓலகமெல்லாம் சுத்தி சும்மா ஜல்லிக் கட்டுல்ல இருந்து தெறிச்சு வந்த காளை மாதிரி இந்தா நிக்குறார் பாருங்க…

உங்களுக்காகவே நம்மத் தல ஒரு மாபெரும் போட்டியை அறிவிச்சுருக்கார்…

ஆமாங்க தலக்கு ஆப்பு வைக்கிற போட்டி

ஒருத்தர் எத்தனை ஆப்பு வேணும்ன்னாலும் வைக்கலாம்..

சிறந்த ஆப்புக்கு பரிசுக் கட்டாயம் உண்டு….

விதி.. ஆப்புக்கள் சுத்தத் தமிழில் இருப்பது அவசியம்.

ரெடி ஜுட்டா

ம்ம் இன்னும் என்ன அமைதி தாரைத் தப்பட்டைகளைக் கிழித்துத் தொங்க விடுங்கள்.. கிளப்புங்கள் பட்டய…

.... இங்கே பதியப்பட்டது தேவ் | 30 மறுமொழிகள் »

சங்கம் ஸ்டார் நைட்

பதிந்தவர் vavaasangam மேல் டிசம்பர் 19, 2006

தல மூக்குலே மூணு அங்குல நீளத்துக்கு வெளிநாட்டு மருந்துக் கம்பெனிகாரன் விளம்பரத்துக்குக் கொடுத்த பேண்டேஜ் போட்டு உக்காந்து இருக்க.. சுத்திலும் சங்கத்துச் செல்லங்கள் உட்கார்ந்திருந்தார்கள்.

பாண்டி பக்காவா ஜீன்ஸ் போட்டு ரேபான் கிளாஸ் அப்புறம் டிக் மார்க் போட்ட டீ ஷர்ட் எல்லாம் போட்டுகிட்டு சங்கத்துக்குள்ளே நுழைந்தான்.

சங்கத்து வாசல்லே சீசனுக்கு ஏத்தாப்புல்ல ஸ்டார் கட்டித் தொங்கவிட்டுகிட்டு இருந்த வெட்டி டக்கென்னு பாண்டியப் பார்த்து ஷாக் ஆகி நின்னான். பாண்டி கையிலிருந்த கௌபாய் ஹேட் எடுத்து படு ஸ்டைலா சுழற்றி தலையில் மாட்டவும் ராயல்,பாண்டி புதுசா எதோ கரகம் ஆடப் போறான்னு அடுத்தப் பதிவுப் போட கையிலே நோட் பேட் எல்லாம் எடுத்து வச்சிகிட்டான்.

“ஹாய் கைஸ்.. என்னது இது நியூ இயர் ரவுண்ட் த கார்னர்.. இப்படி சோகமா உக்காந்து சுவத்தைப் பாத்துகிட்டு இருக்கீங்க…பாண்டி பாதி இங்கிலீஸ்ல்லயும் மீதி எத்திராஜ் காலேஜ் பொண்ணுங்கப் பேசும் தமிழிலும் கேட்க..

சங்கத்துச் செல்லங்கள்.. லைட்டாக் கண்கலங்கி விட்டனர். ரேபான் கிளாஸைத் தல கைப்புள்ளயின் மூக்குக்கு நேராச் சுழட்டி மீண்டும் மாட்டிய பாண்டி
“ஆர் மேன் இது பெக்கர் பெல்லோ தல சீட்லே உக்காந்து இருக்கான்…”அப்படின்னு ஒரு நக்கல் கேள்வி கேட்க….

தலயின் கோபம் உச்சிக்குச் சென்று மூக்கு வழியாகக் கொப்பளித்த கொப்பளிப்பில் பேண்டேஜ் சங்கத்துக் கூரையைப் பிச்சிகிட்டு எங்கியோ போய் விழுந்துச்சு…

“ஏலேஏஏஏஏஏஏஏய் பாண்டி…. நானாடா பெக்கர் பாய்… படுக்க பாய் இல்லன்னு நீ வந்தப்ப… எதிர்த்த வீட்டு ஆயாகிட்ட எவர்சில்வர் கரண்டியால அடி வாங்கிட்டு ஆயா படுத்திருந்தப் பாயை உருவுகிட்டு ஓடி வந்து கொடுத்த இந்தக் கைப்புள்ளயை உனக்குத் தெரியல்லயா….
பேகி பேண்ட் போட்டாத் தான் நாலு பிகராவது என்னையப் பாக்கும் தலன்னு நீ பிலீங் விட்டப்போ.. நம்ம தெரு மளிகைக் கடை சாக்குத் துணி களவாண்டு உனக்குப் பேகி போட்டு அழகு பார்த்த இந்த அண்ணன் கைப்புள்ளய உனக்குத் தெரியல்லயா?”

“ஏய் நிப்பாட்டு.. இப்படி வாய்ஸ் மாடுலேஷன் பண்ணி உன் பாடி லேங்குவஜைக் கண்ட படி யூஸ் பண்ணி இந்த யூத்தை இன்னும் எத்தனை நாளைக்கு கன்ப்யூஸ் பண்ண முடியுமின்னு நினைக்குற கைப்புள்ள?”

சொல்லி அடிப்பார்… சொல்லி சொல்லி அடிப்பார்… அப்படின்னு சங்கக் கூரை எல்லாம் அதிர பேக் கிரவுண்ட் மியூசிக் ஒலிக்க…

ரிபோக் ஷூ, சவுண்ட் கேக்க.. கையிலே 5 பவுன் பிரெஸ்லட் டாலடிக்க… லீ வைஸ் ஜீன் தோய்ச்சு வருச கணக்கான எபெக்ட் கொடுக்க…வலை பனியனும் அதுக்கு மேல புல் ஓவரும் போட்டுகிட்டு செம ஸ்டைலா கைப்புள்ளயை நோக்கி அந்த ஆள் வந்தான்.

வந்து நின்னு கைப்பு மூக்க ஒரு உரசு உரச… சட்டுன்னு புடிச்ச தீயை அப்படியே நாக்குல்ல வச்சு….

தீ டா…. என்னப் பார்த்தா ஊருக்கே பீதீடா…ன்னு சொல்ல…. பாண்டி பலமாக் கையத் தட்டுகிறான்.

பின்னாடியே ராயலும் வெட்டியும் சேர்ந்து விசிலடிச்சு பே’தனமா சவுண்டே கிளப்புறாங்க….

ண்ணா சூப்பர்ங்கண்ணா… அப்படின்னு கூரைக் கேப்பல்லருந்து கட்டத்துரை அன்ட் பார்த்தி குரூப் கொரலு விடுது…

மூக்கு மீண்டும் காயப்பட்ட நிலையில் கைப்பு கோவமாய் பாண்டி, வெட்டி, ராயலை முறைக்க… மூவரும் புது ஆள் பின்னாடி பதுங்குறாங்க…

“ஆமா நீ யார்?.. ஓனக்கு ஏன் இந்தக் கொலைவெறி.. வேணும்ன்னா வந்து நாலு அப்பு அப்பிட்டுப் போயிகிட்டே இரு..அத விட்டுபுட்டு மூக்குல்ல முக்காடு போடற மாதிரி சின்னப்பிள்ள தனமா விளையாட்டு எல்லாம் வேணாம்…”.

“நான் யார்ங்கறது அப்புறம் இருக்கட்டும்… இக்கடச் சூடு…. விஸ்க்க்…விஸ்க்க்ன்னு அந்த ஆள் கையைச் சுழற்ற… புது கார்கோ பேண்டுகளும்.. லேட்டஸ்ட் பேஷன் ஆடை ஆபரணஙக்ளும் சங்கத்து மக்கள் மீது வந்து சேருகிறது…”

ஆத்தாடி… சரியான பொரளி வித்தக்காரனா இருப்பான் போலிருக்கு…. உசார் ஆயிரணும்…” “எங்களுக்கும் இந்த மாதிரி வித்தை எல்லாம் தெரியும்.. நாங்களும் காட்டுவோம் இல்ல…” என்று கண்ணை மூடி ம்ம்ம்ம்னு மந்திரம் ஜெபிக்கிறார் கைப்பு…

கண்ணைத் திறந்துப் பார்த்தால்… எதிரே அந்த ஆள் அப்பிடியே சிரிச்சிகிட்டு நிக்குறான்.. சங்கத்துச் சிங்கங்களில் புதிதாய் புலிக்குட்டியும் இணைந்திருந்தான்.. அவனும் அதே கார்கோ ஸ்டைல் டிரேசில்..

“என்னது நம்ம மந்திரம் வேலைச் செய்யல்ல போலிருக்கேன்னு” கைப்புள்ள தனக்குள் கலங்கிக் கொண்டிருக்க….

“என்ன தல வித்தக் காட்டுறேன்னுச் சொல்லிட்டு வித் அவுட்ல்லே நிக்குறீங்கன்னு” ராயல் பழைய பாசத்தில் பதற…

“ஆகா… கழட்டிட்டான்ய்யா… கழட்டிட்டான்ய்யா… வித்த வில்லங்கமா ஒர்க் அவுட் ஆகி வித் அவுட் ஆகிறுச்சேன்னு தல கதற..” பாண்டி பழைய பிலீங்க்கில் தன் தொப்பியைத் தானம் கொடுத்து தலயின் மானம் காக்கிறான்.

“எங்கேடா என் தளபதி..? போர் வாள்…?அப்புறம் என் பாசக் கண்மணி விவசாயி…? எங்கேடாப் போயீட்டீங்க…?? ஓங்க தலயின் அவல நிலையை தட்டிக் கேக்க கிளம்பி வாங்கப்பா”

“ஏய் கைப்பு…! மூடு உன் மவுத் பைப்பு….” டக்கென்ன்று அந்த ஆள் கையை நீட்ட கைப்பு வாயிலும் பிலாஸ்டர் ஓட்டுகிறது…

“தளபதி….. அவர் தசாவதாரம் படத்துல்ல கமலுக்கு இன்னும் அஞ்சு ஆறு கெட்டப் போட ஐடியா கொடுக்க அமெரிக்காப் போறதா ஏர்போர்ட்ல்ல வெயிட்டிங்கல்ல இருக்கார்… கமலை எப்படியாவது ரஜினி வேஷத்துல்ல நடிக்க வச்சி கலாய்ச்சுட்டுத் தான் தாய் நாடு திரும்புவேன்னு பூமி ஆத்தா மேல சவுண்டு விட்டு சரியா நயன் 10க்கு சத்தியம் பண்ணியிருக்கார்”

“போர்வாள் மொட்டைப் போட்ட ரஜினி படத்தை மட்டும் பார்த்தே விசில் அடிச்சு வாய் வலிச்சுப் போய் கச்சேரி கிரவுண்ட்ல்ல உக்காந்து இருக்கார்.. அவரும் வர மாட்டார்…”

“விவசாயி… ஆகா.. ஆகா.. அவர் வருவார்.. ஆனா வர மாட்டார்.. வந்தாலும் எதுவும் செய்ய மாட்டார்.. செஞ்சாலும் சொல்ல மாட்டார்.. சொன்னாலும் உனக்குப் புரியாது… ஏன்னா அவர் இப்போ லீவுல்ல… ஹாங்காக் போய் ஹாலிடேவை ஜாலி டேவாக் கொண்டாடிகிட்டு இருக்கார்…”

பிலாஸ்டரை பிச்சுகிட்டு பிளிறினார் தல…

“ஆய்யோகோ என்னடா கொடுமை இது.. ஒரு எட்டு பத்து மாசமா உங்களுக்காக எல்லாம் பக்கம் பக்கமா பிளாக் போட்டு.. கண்டபடி படமெல்லாம் புடிச்சு.. காடு மேடுன்னு பாக்காம… எந்தப் பாஷயா இருந்தாலும் புரிஞ்சமாதிரியே நடிச்சு…. உங்களுக்காக… உங்க நலம் மட்டுமே என் நலன்… என வாழ்ந்த வாழும் உங்கள் நண்பன்.. உங்கள் அன்பன் உங்க தல கைப்புள்ளய இப்படி பாடா படுத்துறாங்களே என்னிய காப்பாத்த ஆஆஆருமே இல்லயா………. நான் இப்படியே நோபடியாக நொந்துத் தான் போகணுமாஆஆஆஆஆ….”

“ஏஏஏய் என்ன மேன் ஓவராப் பேசுற?”

கைப்பு டக்குன்னு ஆப் ஆகிறார்.

“என்னது இவங்களுக்காக உழைச்சியா… போன வருசம் இவிங்களுக்குப் புது வருசத்துக்கு என்ன வாங்கிக் கொடுத்த?”

“குச்சி முட்டாயும் குருவி உருண்டையும்” மெல்ல முணுமுணுக்கிறார்.

“ஆமாங்க.. அதுல்ல கூட ஆப்பிரிக்கால்ல இருக்க அவரு கேர்ள் பிரண்டுக்கும் அந்தப் பொண்ணு அம்மாவுக்கும் கொடுக்கணுமின்னு சென்டிமென்டாப் பேசி எனக்குக் கொடுத்ததைத் திருப்பி வாங்கிட்டார்ங்க”பாண்டி கோபத்தில் கொதிக்க..

“அது மட்டுமா… விவசாயிக்குப் போன புது வருசத்துக்கு கொடுத்த நாலு கடலையையும் கெஞ்சிக் கதறி திருப்பி வாங்கியாட்டியாமே.. போர்வாள்க்கு கொடுத்த தேன் மிட்டாயை கூட அவர் அசந்த நேரம் அடிச்சிட்டுப் போய் பாண்டி பிகருக்குக் கொடுத்து சைட்ல்ல டிராக் ஓட்டியிருக்கே நீ.. உன்னியப் பத்தி ஊருக்குள்ளே… ஊருக்கு வெளியே எல்லாம் விசாரிச்சிட்டுத் தான் வந்துருக்கேன் “
புது ஆள் தன் லேப் டாப்ல்ல இருந்து புள்ளி விவரஙக்ளை எடுத்துச் சொல்ல.. கைப்பு மெல்ல அம்ம்ம்மா சவுண்ட் கொடுக்குறார்.

“ஒரு குரூப்ப்பாத் தான் கிளம்பியிருக்கான்வ போல… இனி குனிய வச்சு கும்மி அடிச்சு குத்த வச்சு குல தெயவத்துக்கு நம்மளைப் பொங்கிப் போட்டுட்டுத் தான் விடுவாயங்கப் போலிருக்கே”

“அது போன வருசமின்னு சொல்லி நீ தப்பிக்க நினைப்பே… அதுனாலக் கேக்குறேன் இந்த வருசம்.. இந்தப் புள்ளங்களுக்கு என்னத் தர்ற போறதா உன் திட்டம்”

“அது வந்து கேப்பக் கஞ்சியும் குழாபுட்டும்..” கைப்பு சொல்லி முடிக்கவும்…

“கைப்பு இந்த பச்சிளம் பாலகன் பாண்டி முகத்தைப் பார்… பீர் விட்டு கழுவி அழகு பாக்க வேண்டிய மொகத்துக்கு குழாபுட்டுன்னு குண்டு போடுறீயே.. அவ மனசு என்ன பாடு படும்..

இங்கிட்டு பார்.. ரம்மியமா இருக்க இந்த ராயல் முகத்தைப் பார்… ரம் கொடுத்து கம் சொல்ல வேண்டிய இந்த புள்ளக்கு கேப்பக் கஞ்சியா.. என்ன கொடுமை இது சரவணா…”

“பச்சிளம் பாலகனா.. பாண்டியா.. ரம்மியமான புள்ள ராயலா.. விட்டா தவழும் தம்பி தளபதி.. மழலை மொட்டு போர்வாள்.. தத்தும் மழலை விவசாயி..ன்னு வில்லங்கமாவே எபெக்ட் கொடுத்தேப் பேசுறானே அய்யோ நான் என்னப் பண்ணுவேன்.. இருக்க ஒரு ட்ரை சைக்கிளுக்கும் லாக் போட்டுட்டு போயிருவான் போலிருக்கே…. பரிதாபமாக கைப்பு கதற…

பதிலுக்கு சங்கத்தினர் கோபப் பார்வை பொங்க அனலாய் சவுண்டை அள்ளிவிட…
என்ன இம்புட்டு சவுண்டு’ன்னு கைப்பு மிரள…

“லேட்டஸ்ட் டெக்னாலஜி மூலமா இங்கே நடக்குறது மொத்தத்ததையும் லைவ் ரிலேவா பிசாபர்கர் டெலிவிசன் உலகம் முழுக்க காட்டிட்டு இருக்கு கைப்பு”
அதுக்காக நம்ம உதய் வேற டால்பி டிஜிட்டல் சவுண்ட் ஏற்பாடு பண்ணி கொடுத்த விசயம் தனிக் கதை…

“ஏன்டா எடுபட்ட பயலுவேளா வித் அவுட்ல்ல என்னிய வீடியோ எடுத்து ஓலகம் முழுக்கவாடா காட்டுறீங்க விளங்குமாடா? ஓனக்கு நான் என்னடா துரோகம் பண்ணேன்.. நான் பாட்டுக்கு ஒரு ரூட் போட்டு அதுல்ல குதூகாலமாத் தானேப் போயிகிட்டு இருந்தேன் இப்படி வீதிக்கு இழுத்து விட்டு என் கதைக்கு இன்டர்வெல் விடுறியே நீ யார் ராசா…..நீ யார் அய்யா… சொல்லிருப்பு.. முடியல்ல மூக்கு முட்டுது.. கண்ணு கட்டுது…

பயங்கர சிரிப்பு.. பின்னால் லைட்டைப் பாண்டி ஆப் பண்ணி ஆன் பண்ணி எபெக்ட் கொடுக்க..

விஸ்க் விஸ்க்ன்னு உதய் வால்யூம் ஏத்தி பில் டப்பு கொடுக்க…

“நேனேரா… உர்ரேஏஏஏஏஎ ஸ்டீவ் வாக்கு… இப்புடு தெலுசா… ஸ்வைங் இன் த ரெயின் பாட்டுலு பாடிலு நா லைப்ப்ல்லு கில்லி ப்ளே ச்சேசுன்ன வாடு நீயே ரா…. உன்னியே ரேப் சூடுதானுவுறா…

“ரேப்பா அது வேறய்யா.. அய்யா வேணாம்.. ஆம்பளை ஆம்பளைய டிச் பண்ணலாம் கண்டபடி டச் பண்ண்பிடாது தப்பு” கைப்பு அழ ஆரம்பிக்க..

“ச்சீ நாஸ்ட்டி பெல்லோ.. ரேப்ன்னா தெலுங்குல்ல நாளைக்குன்னு அர்த்தம்.. உன்ன நாளைக்குப் பார்த்துக்குறேன்னு சொன்னேன் மேன்..”

இப்போதைக்கு என் பேரை மட்டும் சொல்லுறேன் வாயைப் பொளக்காமக் கேளூ

பா….லா…..PUNCH பாலா…. என் ட்ரெஸ்க்கு நான் போட மாட்டேன் உஜாலா….

அவனாஆஆ நீயி…… கைப்பு அலற…. சங்கத்தில் கரண்ட் கட் ஆகிறது..!

அப்படியே எல்லோர் பார்வையும் வெட்டிப்பயல் இருக்கும் பக்கம் திரும்புகிறது..

பின்னே டைட்டில் சங்கம் நட்சத்திர இரவுன்னு வச்சாச்சு.. அதுக்கு காரணம் வேண்டாமா..

அதான் சங்கம்… பாலாஜி…(இந்த வார ஸ்டார்) இரவுன்னு முடிச்சாசு…

.... இங்கே பதியப்பட்டது தேவ் | 3 மறுமொழிகள் »

கச்சேரிங்கோ தல கச்சேரிங்கோ

பதிந்தவர் vavaasangam மேல் நவம்பர் 16, 2006

100 பதிவுப் போட்டாச்சு.. படமெல்லாம் எடுத்தாச்சு.. எதித்து வந்த பார்த்தீபன், சரளாக்கா கட்டத்துரை குரூப்பை எல்லாம் ஓரம் கட்டியாச்சு… ப.ம.கன்னு ஒரு குரூப் அதைக் கூட அரசியல் ரீதியா சமாளிச்சாச்சு…

ஒரு மனுஷனுக்கு எவ்வளவு புகழ் வரணுமோ அதுக்கும் மேல வந்தாச்சு… கோடிக் கணக்குல்ல ரசிகர்கள் அதுக்கும் சில் கோடிகள் அதிகமான ரசிகைகள்.. இப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்தாலும் எதோ மிஸ்ஸிங் ஆகுதோன்னு பீலிங்…

சங்கம் பில்டிங்கை பளிங்குல்ல கட்டி ஐரோப்பா ஸ்டைல் பாத் டப் கட்டி அதுல்ல குளிக்கலாமா….

ம்ம்ஹும் அது சரி பிடாது… காசினோ ராயல் படத்த தமிழ்ல்ல எடுக்கச் சொல்லி குழாய் கோர்ட் போட்டு அசினையும் திரிஷாவையும் சோடியாக்கி டூயட் பாடலாமா….. எதாவது செய்டா கைப்புள்ளன்னு கிரகம் தலக் காதுல்ல ஓதிகிட்டே இருக்க…

“நீ பாக்க காக்கா மாதிரி கருப்பா இருந்தாலும் ஓன் கொரலு குயில் மாதிரி ஸ்வீட்டா இருக்குன்னு முன்னொரு காலத்திலே அந்த பார்த்தி பையச் சொன்னது இப்போ எக்கோ எபெக்ட்ல்ல தலக் காதுல்ல மறுபடியும் ரிப்பீட்டாக ஆரம்பிச்சுருச்சு”

எட்டணா இருந்தா எட்டூரு எம் பாட்டக் கேக்கும்…அட பத்தணா இருந்தா பத்தூரு என் பாட்டைப் பாடும்...” அப்படின்னு லைட்டா கொரலு விட ஆரம்பிச்சார்…

தல ஆஹா என்னமாப் பாடுறீங்கன்னு சங்கத்து இளைய தளபதி வெட்டி வெடுக்குன்னு எடுத்துக் கொடுக்க தலக்குப் பிடிச்சிருச்சு கிறுக்கு.

ராயல் ராமுக்கு போனைப் போட்டு பட்டு வேட்டியும் பட்டுச் சட்டையும் மருத ஹாஜி மூசாவில்ல இருந்து எடுத்தாரச் சொல்லு.. இனி நான் ஒரு சங்கீத வித்துவான்ன்னு சொல்லிட்டார்.

பாட்டுக்கு கொரலு முக்கியம் ட்ரெஸ் எல்லாம் எதுக்குன்னு சைட்ல்ல பம்மி நின்னு கேட்ட பாசக்கார பாண்டியைப் படக்கென்னு கோவமாப் பார்த்தார் தல..

“ட்ரெஸ் இல்லாம என்னிய அம்மணக்கட்டையாப் பாடச் சொல்லுறீயா நீ.. தெரிஞ்சிப் போச்சுறா எனக்கு தெரிஞ்சுப் போச்சு.. நான் ஒரு மேஜர் சுந்தர்ராஜ பாகவதரா ஆகறது ஓனக்குப் பிடிக்கல்ல எங்கே எல்லா பிள்ளைகளும் ஒன்னிய விட்டுட்டு என் பின்னால என் கொரலுக்கு மயங்கி வந்துருவாங்களோன்னு ஓனக்கு பயம்டா.. “

தல அது மேஜர் சுந்தர்ராஜ பாகவதர் இல்ல.. தியாகராஜ பாகவதர்… பவ்யமாய் வாசல் பக்கம் நின்ற நமது புலிக்குட்டி சிவா எடுத்துக் கொடுக்க…அவன் மீது டென்சன் ஆனார் தல்.

நான் என்ன பரீட்சைக்காப் போயிட்டு இருக்கேன்ய்ன்.. கரெக்ட் பண்ணுற.. ஒரு கலைஞன் பீலிங்க்ல்ல வார்த்தையை அப்படி இப்படி தான் சொல்லுவான்.. நீ தான் புரிஞ்சிக்கணும்…

அதே கோவத்தோடு இளைய தளபதி வெட்டியைத் தல முறைக்க…

“தல நீங்க பாடலாம் தல,… நம்ம எளையராசா கூட உங்க மருதக்காரரு தானே அவர் அமைக்காத இசையா தல.. நீங்க நினைச்சா ஒரு லயனல் ரிச்சி, எரிக் கிளப்டன், ப்ங்க் பிளாயிட், எல்டன் ஜான், எல்விஸ் பிரிஸ்லி.. இவிங்க மாதிரி நீங்களும் வரலாம் தல”

“ஒரு பய பேர் கூட நம்மூர் காரன் மாதிரி இல்லையேடா.. அம்புட்டும் அசலூர் கார பேரா இல்ல இருக்கு என்று சந்தேகத்தோடு மறுபடியும் பாண்டியைப் பார்த்தார் தல…”

“அவ்ங்க எல்லாம் பாப் ஸ்டார்ங்க தல..”

” ஆகா.. இம்புட்டு நாளும் ஆப் வச்சிங்க.. நான் பாடப் போறது தெரிஞ்சது பாப் வைக்கப் போறீங்களா? விட மாட்டான்டா இந்தக் கைப்புள்ள”

“தல பாப்ங்க்றது ஒரு வகை பாட்டு தல… அதாவது..” என்று ஆரம்பித்த ராசுக்குட்டியைப் பார்த்து

“போது நிப்பாடிக்கா.. நீயும் அந்த விக்கிபீடியா குருப்ல்ல சிக்கிட்டியா.. அவிங்க தான் என்னக் கேள்வி கேட்டாலும் பதிவாப் போட்டு பல் இடுக்கு வரைக்கும் தகவல் சொல்லி நிரப்பி விட்டுருவாயங்க… எனக்கு அது வேணாம்..”

“அது இருக்கட்டும்.. ஒரு நல்ல வித்துவானுக்கு நல்ல ஆடை வேணும்.. அதை நம்ம ராயல் ராம் செஞ்சுருவான்… ஆங் வாகனம் வேணுமே” அப்படின்னு தல யோசிக்க..

தளபதி சிபியின் செல் போனில் கரகாட்டக்காரன் ரிங் டோன் அலறியது.

சிபி தலயைப் பாக்க.. தல சிபியை மொறைக்க…
தல சிபியை மொறைக்க..சிபி தலயைப் பாக்க..
சிபி தலயைப் பாக்க தல சிபியை மொறைக்க…
தல சிபியை மொறைக்க..சிபி தலயைப் பாக்க…

“இங்கேப் பார் இது டூ மச் ஆமா…கிரகம் புடிச்ச அந்தச் செல் போனை ஆப் பண்ணுப்பா இல்ல…” என தல எந்திரிச்சி நிக்க

“தல தல.. விவசாயி லைன்ல்ல இருக்காரு” என சிபி பதற…

“ஆரியம்… காரியம்.. வீரியம்ன்னு எதாவது வம்பு பிடிக்கப் போயிருப்பார்.. என்னான்னு கேளூ”

“தல சங்கம் நடத்துன போட்டியில்ல செயிச்சவங்க எல்லாருக்கும் கொடுக்கறதுக்குப் பரிசு வாங்கறதுக்கு துபாய் ஷாப்பிங் பெஸ்டிவல் போயிருக்காராமா.. அதுன்னால சங்கத்துக்கு ஒரு மூணு மாசம் லீவு சொல்லச் சொல்லுறார்”

தல லீவ் பத்தி யோசிக்கும் கேப்பில்

“தல விவசாயி ஊர்ல்ல இல்ல அவர் டிராக்டர் சும்மா தான் இருக்கும் வாகனமா அதையே வச்சுக்கலாமா..” பாண்டி பக்தி சிரத்தையாய் ஐடியா கொடுக்க

தல பாண்டியைக் கடிக்கும் பார்வை பார்க்கிறார்.

“வேணாம் வலிக்குது.. அழுதுருவேன்..ஆமா.. என்னிய நீ ரொம்பக் கேவலப் படுத்துற…”

தல மீண்டும் சிந்தனைக்குப் போகிறார்.. அப்படியே SWING IN THE RAIN பாடலை அலறலாய் பாடுகிறார்… பாட்டை நிறுத்திட்டு

“நான் முடிவு பண்ணிட்டேன்.. இந்த சங்கீத சீசன்ல்ல நான் கச்சேரி பண்ணப் போறேன்… எனக்குள்ளே ஒளிஞ்சு குப்புற படுத்து குறட்டை விட்டு தூங்கிட்டு இருக்க அந்த இசை ஜீவனை தட்டி எழுப்பி எதாவது சபா மேடையிலே உக்கார வச்சு பாட வைக்கத் தான் போறேன்…”

“தல ராகம் தாளம் பல்லவி இதெல்லாம் தெரியாம எப்படி தல நீங்க?” என்று பாண்டி மிகப் பணிவாய் கேட்க..

“தல அதெல்லாம் நம்ம ஊர்ல்ல தான் இருக்கு… நானும் தளபதியும் ஓங்களைக் கூட்டிட்டு போய ராகத்துல்ல 4 ஷோ பல்லவியில்ல 4 ஷோ… அனுபல்லவியில 4 ஷோன்னு பாக்க வச்சு தெரிய வச்சிடுறோம் தல”
என்று ராசுக்குட்டி உதவிக்கு வர….தல பெருமிதத்தில் ராசுக்குட்டியைக் கட்டிபிடித்து கதறுகிறார்.

தலயின் தீர்க்கமான முடிவினில் சங்கம் மொத்தமும் நடுங்கி நிற்க…

“போடா போடா புண்ணாக்கு.. போடாத தப்புக் கணக்கு..” பாடலைத் தல சங்கராபரணம் ஹீரோ ரேஞ்சுக்கு ராகமாய் முணுமுணுத்தப் படி தன் அறைக்குப் போனார்.

பி.கு: தலயின் கச்சேரியில் விளம்பரம் செய்ய விரும்புவோர்கள் அணுகவும்
தேவ் – சென்னைக் கச்சேரி.

.... இங்கே பதியப்பட்டது தேவ் | 44 மறுமொழிகள் »

சஙகத்து ஆல்பம் – 1

பதிந்தவர் vavaasangam மேல் செப்டம்பர் 22, 2006

கொஞ்ச நாளா நம்ம சங்கத்துப் பசங்க யாரும் பதிவு போடல்ல… அதுக்குக் காரணம் எங்க அன்புத் தல கைப்புள்ள எங்க எல்லாருக்கும் லீவும் கொடுத்து கையிலே அவர் டிஜி கேமராவும் கொடுத்து டூர் போயிட்டு வாங்கன்னு சொல்லி அனுப்பிட்டார். பாசமான மனுஷன்ங்க…

போன இடத்துல்ல நம்ம பசங்கத் திரட்டுன படத்தை எல்லாம் தலக் கிட்ட கொண்டு வந்து காட்டுனோம். மனுஷன் சந்தோசத்துல்ல துள்ளிக் குதிச்சுட்டாரு.. அந்த ஆனந்தத்துல்ல அவர் அடிச்ச கமெண்ட்டையும் படத்துக்குப் பக்கமாவேப் போட்டு வச்சிருக்கோம்.

நம்ம சிவா ஆப்பிரிக்காக் காட்டுல்ல கழுதைப்புலி ஒண்ணைப் பார்த்துட்டாப்பல்ல.. அதைப் படம் புடிக்காம ரிட்டன் ஆவறதுல்லன்னு சபத்ம் அடிச்சுட்டு அதைத் துரத்திகிட்டே உள்ளேப் போனவர் தான் இன்னும் வர்றல்ல அவர் வந்ததும் ஆல்பம் அடுத்த பார்ட் ரிலீஸ்


என்ன லுக்? ராஸ்கல்…

இப்போத் தான் நீ புல்லட் பாண்டி கிட்ட பாடம் படிச்ச மாதிரி வண்டி ஓட்டுற..


ச்சீ ராஸ்கல் என்னது இது சின்னப்பிள்ளத்தனமா இருக்கு?

வேணாம் வலிக்குது… அவ்வ்வ்வ்வ் அழுதுருவேன்…

டேய் அவனடா நீயு?

ENJOY THE ALBUM … HAPPY WEEK END….

.... இங்கே பதியப்பட்டது தேவ் | 7 மறுமொழிகள் »

போலி வரு.வா.சங்கம் – 3

பதிந்தவர் vavaasangam மேல் செப்டம்பர் 13, 2006

பாகம் 1 படிக்க
பாகம் 2 படிக்க

“என்னது இது தல சவுண்ட் கேக்குது….தளபதியை வேறக் காணும் “

“யோவ் வாங்க அய்யா… போய் என்னன்னு பாப்போம்”

விவசாயி ஆல் இன் ஆல் அழகுராஜ் கடையில் வாடகைக்கு எடுத்த பெட்ரமாக்ஸ் லைட்டை உயர்த்திப் பிடிக்க சிவா, பாண்டி, நான் எல்லாரும் பின்னாடி மெதுவாக பூனை நடை நடந்துப் போனோம்.பழையக் கட்டடம் கடைசியா ஜெய்சங்கர் நடிச்ச CID சங்கர் படம் சூட்டீங் நடந்து இருக்கும் போல… மெகா அமைதி…

“ஆமா.. தலச் சத்தம் கேட்டுச்சு.. இங்கிட்டு இப்போ மனித நடமாட்டமே இல்ல…”

“தலயும் தளபதியும் சிக்கிட்டாங்கய்யா.. இன்னேரம் சிதறி இருப்பாயங்கன்னு நினைக்கிறேன்”

“அப்படித் தான் நானும் நினைக்கிறேன்…இந்தா இது தலயோடு சில்க் சட்டை மாதிரி இல்ல…”

“ஆமா கெக்கிரான் மெக்கிரான்னு அரேபிய மொழியிலேக் கூட எழுதி இருக்கு பாருங்க”
யாருக்கும் அரபிய மொழி தெரியாத போதும் ஆமாம் ஆமாம் என்று ஒத்துக் கொண்டோம்.

“இது தலயோடு சிலுக்கு லுங்கி மாதிரியே இருக்கு…” பாண்டி கண்டெடுத்த லுங்கியைப் பார்த்ததும் எங்களுக்கு லேசா வெலவெலக்க ஆரம்பித்தது.

“அய்யய்யோ இது தலயோட….” என்று ஆரம்பிக்கப் போன சிவாவின் வாயை நான், விவசாயி, பாண்டி மூணு பேரும் சேர்ந்துப் பொத்தினோம்.

“வேணாம் லேடீஸ் எல்லாம் படிப்பாங்க..அப்புறம் தலக்கு வெக்க வெக்கமாப் போயிரும் சொல்லக் கூடாது ஆமா”

“அடச்சே நிறுத்துங்கப்பா இது தலயோட கர்சீப்ன்னு சொல்லவந்தேன்” சிவா சீற்றலாய் சொல்லி முடிக்க.

“அதானேப் பார்த்தேன் தலக்கு அந்தப் பழக்கம் எல்லாம் கிடையாதே” விவசாயி முணுமுணுக்க…

“தமாஸ் பண்றதை நிறுத்துங்கப்பா.. தலயைத் தேடுங்கப்பா….”

“விவ் விவ்.. இங்கேப் பாரு… ஒரு எலுமிச்சம் பழத்தின் நடுவே குங்குமப் பொட்டு அதுக்கு பக்கத்துல்ல மை.. அதுல்ல நூல் கோர்த்து ரெண்டு மிளகாய் ஒண்ணு சிகப்பு காஞ்ச மிளகா.. இன்னொண்ணு பச்சை மிளகா.. அதுக்கு கீழே….அய்யோ.. ஒண்ணும் இல்ல”

“இளா…. ஏன்?”

“என்னங்கடா ஏன்ன்னு என்னைப் பாக்குறீங்க?”

“வேட்டையாடு விளையாடு படம் பார்த்து அன்னிக்கே நீங்க பீலிங் ஆவும் போதுக் கூட நான் இப்படி நினைக்கல்ல… கடைசியிலே.. ச்சே”

“டேய் தேவ்… என்னச் சொல்ல வர்ற நீ?”

“அந்தப் படத்துல்ல வர்ற முதல் கொலை மாதிரி நீங்கத் தலயை.. அய்ய்யோ…”

“தேவ் ஓவர் இதெல்லாம் ஆமா.. எதை வச்சு இப்படி ஒரு முடிவுக்கு வந்த நீ…”

காரணம் ஒண்ணு உங்கப் பேர் இளா…
காரணம் ரெண்டு தலயோட டிரெஸ் எல்லாம் அங்கங்கே கிடக்குது
காரணம் மூணு இந்த எலுமிச்சம் பழம்
காரணம் நாலு வேட்டையாடு விளையாடு படம் நீங்க பார்த்துட்டீங்க…”

“அடிங்க… நானும் உங்க கூட உக்காந்து பிஸ்கொத்துச் சாப்பிட்டுட்டு தவிச்ச வாய்க்கு தண்ணி கிடைக்காம விக்கி தலயோட அலறல் கேட்டுத் தானா விக்கல் நின்னு எந்தரிச்சு கூட வந்தா எனக்கே ஆப்பு வைக்கிறீயா நீ…வேணாம் விவகாரம் ஆயிடும் சொல்லிட்டேன்”

“ஸ்டாப் ஸ்டாப்… கேக்குதா” சிவா கேட்டான்.
“ஒண்ணும் கேக்கல்ல” இது நான்.
“ஆகா எனக்குக் கேக்குது….எனக்குக் கேக்குது….ஜொள்ளுபேட்டை டீ கடையிலே நிதம் நிதம் ஒலிக்கும் தெய்வீக ராகமாச்சே.. நல்லா கேக்குது”

எல்லோரும் காதுகளைத் தீட்டினோம்….ஆங் அதே பாட்டுதான்…

பொன்மேனி உருகுதே ஜகஜகஜக் புல் வால்யுமீல் பாடல் அலற…..

நாங்க நாலு பேரும் பாட்டு வரும் திசை நோக்கி நகர ஆரம்பித்தோம்.. பாட்டு முதல்மாடியில் இருந்து தான் கேட்டது. காலடி ஓசை படாமல் மெல்ல படிகளில் ஏறினோம். முதல் மாடி காலியாக இருந்தது. இரண்டாவது மாடிக்குப் போகவும் பாட்டு சத்தம் நின்று போனது.

விவசாயி விளக்கு வேறு அணைந்து அவிந்துப் போனது. செய்வதறியாது நாங்க தவித்து நிற்க.. மெல்லிய சவுண்டில் அடுத்தப் பாட்டு ஆரம்பித்தது..இந்த முறை நாங்கக் கேட்ட பாட்டு இன்னொரு காலத்தால் அழியாத கந்தர்வ கானம்.

“நேத்து ராத்திரி யம்மா.. தூக்கம் போச்சுடி யம்மா…..”

கானம் கேட்டு பாண்டியின் பற்கள் தவுசண்ட் வாட்ஸ் பல்ப் போல் பீறிட்ட உற்சாகத்தில் பளிச்சிட்டது. அந்த வெளிச்சத்தில் நாங்கள் கண்ட காட்சி எங்களை மிரள வைத்தது….

ரத்தம் உறைந்துப் போனது. சித்தம் சிதறிப் போனது. பித்தம் ஏறி புத்தி பதறி கிட்டத்தட்ட கண்டப்படிக் கதறும் நிலைமைக்கு நாங்கள் ஆளாகிப் போனோம்.

அப்படி ஒரு ஆயுள் காலமிரட்டல் காட்சி அது…

உலக வருத்தப்ப்டாத வாலிபர்களின் ஒரேத் தலைவரானக் கைப்புள்ள… தன்னுடைய சில் அவுட் ஸ்டில் மூலம் தமிழ் கூறும் நல்லுலகிற்கு பாரதியின் பாடல் வரிகளை ஞாபகப்படுத்திய கருஞ்சிறுத்தை இளைஞன்… மேலுக்கு ஆடை அணியாமல் கனடாத் தேசத்து மாப்பிள் இலைகளை இடுப்பில் உடுத்தி அந்தப் பாடலுக்கு ஆக்ரோஷமாக மைக்கேல் ஜாக்சன் பாணியில் நடனமாடிக் கொண்டிருந்தார்.

விவசாயி கோபத்தின் உச்சிக்கு ஏறி சென்று… ஸ்டாப் இட்.. என்று அலற….

” எவ் அவ…….???????????” பயங்கர உக்கிரமா வந்தக் குரலின் திசையில் திரும்பினால் அடுத்த அதிர்ச்சி.

அங்கு…….. தள…தள..தளபதி…. பயங்கர கெட்டபில் நின்று கொண்டிருந்தார்.

தளபதி….என்று நாங்கள் ஒரேகுரலில் அலற…

” ஹே..ஹே.. நான் தளபதி இல்லடா…. இன்னிக்கு சனிக்கிழமை… நான் அமானுஷ்யனாந்தாடா இவன் என் பிரதம சிஷ்யன் சிலுக்குவார்பட்டி சீன் சிலுக்குப்புள்ளடா.. .இவனையும் சிலுக்கையும் சேத்து வைக்கப் போறேன்டா அதுக்கு தான் இந்த யாகம் நடத்துறேன் நான்….

தல இருக்கப் பக்கம் நாங்கத் திரும்ப தல கையை இலையோடுப் பொத்தி அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் எனப் பரிதாபமாக எங்களைப் பார்த்து சங்க நாதம் எழுப்ப முயன்றார்.

“எப்படி சிக்கியிருக்கேன் பாத்தீங்களா.. அம்புட்டையும் உருவி விட்டுட்டு இலையாக் கட்டி ஆட விட்டுட்டான்ய்யா ஆட விட்டான்யா.. ஆடும் போது ரெஸ்ட் எடுத்தா பேனைப் புல் ஸ்பீட்ல்ல வச்சு இலையை எல்லாம் பறக்க விட்டுருவேன்னு மிரட்டுறான்… நாலு நாளா அடைச்சு வச்சு இப்படி பண்ணிகிட்டு இருக்கான்ய்யா இந்த ராஜாதி ராஜ ராஜமார்த்தாண்ட.. ராஜ குலத் திலக.. ராஜ குலோத்துங்க 23ஆம் புலிக்கேசிவழி வந்த வாலிப வயசுகார கைப்புள்ளைய காப்பாத்துங்கய்யா.. காப்பாத்துங்க…”

கைப்பு அழ… நாங்க அழ… கோபவேசத்துல்ல இருந்த தளபதி அப்படியே மயங்கிச் சரிய ஆரம்பிச்சார்.

அதுக்குள்ளே நாங்க கைப்பைக் காப்பாத்தி டவுசர் எல்லாம் மாட்டி விட்டு கிளம்பச் சொன்னோம். தளபதி மெல்ல கண் திறந்தார்.

“என்னாச்சு.. நாம் எல்லாம் எங்கே இருக்கோம்.. சாம்பு யார்ன்னு கண்டுபிடிச்சாச்சா? போலீஸ் யார்ன்னு தெரிஞ்சுப்போச்சா… எல்லாம் அமானுஷ்ய சக்திகளையும் அடக்கியாச்சா?” என எதோ பிதற்ற ஆரம்பிக்க….பாண்டி கையோடு கொண்டு வந்திருந்த சரக்கைத் தளபதிக்குப் பிடித்த மாதிரி வட்டமாக்கி ஊற்ற…. தளபதி மெல்ல சுய நினைவுக்குத் திரும்பினார்…

“யப்பா தளபபபபதி சொன்னாக் கேட்கணும்… இந்த அமானுஷ்யம் தாயத்து இப்படி ரொம்பத் திரியப் பிடாது.. ராத்திரி மணி பத்து அடிச்சாப் படுத்து தூங்கணும்.. அந்தைக் கணக்கா அத்துப் பிடுங்கிட்டு அலையப்பிடாது… இப்படி எல்லாம் செஞ்சா தேகம் சேதாராமாகி மூளை மந்தாராமாகிப் போயிரும் நயந்தாரா நயகாரான்னு எல்லாம் பிதட்டப் பிடாது… போலி.. கோலின்னு எல்லாம் கனவுக் கண்டு இந்தாப் பார் என்னக் காரியம் செஞ்சு வச்சிருக்க கிராதகா…” தலப் பொறுமையாப் பேச ஆரம்பித்தார்.

“தல என்னச் சொல்லுற நீ… தள எங்ககிட்ட எல்லாம் சங்கம் வளக்கப் போறேன்னு பாசமாப் பேசி பிஸ்கொத்து எல்லாம் கொடுத்து பிளான் எல்லாம் போட்டாரே… அப்போ அது எல்லாம் உட்டாலக்கடியா?”

“அடேய் சண்டாளா..தமில்ல தானேச் சொல்லிகிட்டு இருக்கேன்…. இந்தாப் பார் தளபதி கண்ணைத் திறந்துட்டான்… இந்த டவுசரை உருவினாலும் உருவிருவான் நான் போறேன் சாமி”

“டேய் நானூ பிடற்த்லல்லாணாந்தாடா.. அமானுஷ்ய சக்தி எல்லாம் ஒண்ணுக் கூடியிருச்சு.. சாம்புவைப் பிடிச்சுட்டேன்… ஆங் எங்கேடா என் சிஷ்யன் சிலுக்குவார்பட்டி சீன் சிலுக்குப் புள்ள”

“கிளம்பிட்டார்ய்யா கிளம்பிட்டார்ய்யா சங்கத்தைக் கலைச்சிட்டு கட்டத்துரைக்கிட்ட்யே கொடுத்துட்டு ஓடுங்கடா”

.... இங்கே பதியப்பட்டது தேவ் | 16 மறுமொழிகள் »