வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்

100% சிரிக்க

‘ஜொள்ளுப்பாண்டி’ பகுப்புக்கான தொகுப்பு

ஜொள்ளு கோச்சிங் சென்டர்

பதிந்தவர் vavaasangam மேல் மார்ச் 27, 2007

அன்னிக்கு ஒரு நாள் அப்படியேக்கா நம்ம மெயில செக் பண்ணிகிட்டு இருந்தப்போ நம்ம சங்கத்து சிங்கம் ஒன்னு சோகமான ஸ்டேடஸ் மெசேஜ் போட்டுகிட்டு ஒக்காந்து இருந்துச்சு. இது என்னடா சங்கத்து சிங்கத்துக வந்த சோதனைன்னு கேட்டா அட பாண்டி இதுக்கு தானே காத்துக்கிட்டு இருந்தேன்னு பூத்து பூத்துன்னு ஒரே ஒப்பாரி !! என்னாடா இது வம்பா போச்சுன்னு வா ராசா வா ன்னு லேசா ஆன்லைன்லயே கொஞ்சம் மப்பேத்திவிட்டு கேட்டா “ பாண்டி ஆபீசுல ஆணி புடுங்கற வேலை சும்மா பின்னி பெடலெடுக்குது. எப்படா வீட்டுக்கு திரும்ப வருவோம்னு இருக்கு. சரி இப்படி ஓயாம கொள்ளாம திரிஞ்சுகிட்டு இருக்கமே அப்பபோ ரிலாக்ஸ் பண்ணிக்கலாம்னு பேச்சுத்துணைக்குன்னு ஏதாசும் பொண்ணுககிட்ட பேசலாம்னு போனா உடனே அல்லாருமே ஸ்டேடஸ் மெசேஜ்லயே என்கேஜ்டு மெசேஜ் போட்டுகிட்டு சல்லைய கொடுக்குதுங்க! என்ன பண்றதுன்னே தெரியலை?! என்னடா இது வாழ்க்கை !! வாழ்க்கைல கடலை திங்காம இருந்துடலாம் ஆனா கடலைபோடாம இருந்தா என்ன ஆவறது? நாளைக்கு என்னை என் பேரப்புள்ளைக கேட்டா ஒரே அவமானமா போய்டுமே ன்னு ஒரே அழுவாச்சி !!!

அட இது நம்ம சிங்கத்துக்கு மட்டுமா சோதனை அல்லாருக்கும் தானே!! இதுக்கொரு முடிவு கட்டியாகனும்னு களத்திலே குதிச்சிடோம்ல? . அட எது எதுகெல்லாமே கோச்சிங்க சென்ட்டர் வச்சுருக்காங்க நாம ஏன் பிகர் கிட்டே ஜொள்ளு.விட நம்ம சிங்கங்களுக்கு ஒரு ரிகரஸ் கோச்சிங் வச்சா என்னானு ரோசணை பண்ணி இதோ வச்சுடம்லே?? இதோ அந்த கோச்சிங் சென்டர்ல ருந்து Live telecast !

சங்கத்து வாசல்ல கே கொள்ளேன்னு ஒரே கூட்டம் என்னாடான்னு விலகிட்டு பார்த்தா அட நம்ம கோச்சிங்க சென்ட்டர்ல சேருரதுக்குதான் அவ்ளோ கூட்டம்.

கைப்பூ : அப்பூ பாண்டி சீக்கிரம் வாய்யா சீக்கிரம் வா. நீ கோச்சிங்க கொடுக்கறேன்னு மின்னாடியே தகவல் கெடச்சுடுச்சு அதான் வெள்ளனவே எந்திரிச்சு மொதோ ஆளா வந்து பர்ஸ்ட் பெஞ்சிலயே துண்டைப்போட்டுட்டம்ல?

ராயல் : பாண்டி தலயாச்சும் காலைல தான் வந்துச்சு ஆனா நான் நேத்தே வந்து மொதோ பெஞ்ச்லே குந்திகினு இருக்கேன்.

வெட்டி: ஹிஹிஹிஹிஹி பாண்டி என்னிக்கு நீ கோச்சிங் சென்டர் போர்ட்டை எடுத்து மாட்டுனயோ அன்னில இருந்தே பர்கர் புளிசாதம்னு வந்து செட்டில் ஆயிட்டோம்ல??

ஜொள்ளு: அஹா மக்களே இவ்ளோ ஆதரவா என்னோட கோச்சிங்குக்கு?? சரி சரி மொதல்ல அல்லாரும் என்னென்ன பண்ணுனீங்க என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க பார்ப்போம்?.

கைப்பு: பாண்டி நானு போற வர்ற பொண்ணுங்க என்ன பேசறாங்கன்னு பின்னாடி திரும்பிகூட பார்காம ரொம்ப டீசண்டா கவனிச்சுகிட்டு வாறேன். சரி பாதியிலே பேசிக்கிட்டு இருக்கறப்போ நாம பேசுனா டீசண்டா இருக்காதுன்னு நெனச்சுகிட்டு அவங்க பேசி முடிக்கட்டும் நாம ஆரம்பிக்கலாம்னு காத்துகிட்டு இருந்து பேச்சு சத்தம் நின்னவுடனே திரும்பி பார்த்தா அவங்க எஸ்கேப் ஆகி இருக்காங்க! நானும் பல டயலாக்கு எல்லாம் ரெடி பண்ணனதுக்கப்புறம் இப்படி ஆனா என்ன பண்ணுவேன் ( ஒரு ஒப்பாரி ) பேசறதுக்கு என்னவெல்லாமோ கற்பனை பண்ணி வச்சுகிட்டு வந்து படத்தை ரிலீஸ் பண்னலாம்னு வர்றப்போ ஆடியன்சே இல்லைனா எப்படி இருக்கும் ??

ஜொ.பாண்டி: no no no crying ஒகே!! தல நீங்க பண்ணுன மொதோ தப்பு பொண்ணுங்க பேசுனா நிறுத்துவாங்கண்னு நெனச்சது. ரெண்டாவது தப்பு நீங்க பொண்ணுங்க பேச்ச நிறுத்துவாங்க நாம பேசலாம்னு காத்துகிட்டு இருந்தது. அப்படி இருந்தா தாத்தா ஆக வேண்டியது தான். மூணாவது தப்பு இந்த டீசண்டா இருக்கறேன்னு ஒதுங்கி நின்னுகிட்டு இருந்தா நீங்க பார்க்க பார்க்கவே அவனவன் அள்ளிகிட்டு போய்ட்டே இருப்பானுக. ஓகே ?? நெக்ஸ்ட் யாரு ??

ராயல்: பாண்டி நானும் ஆர்குட்டு சாட்டுன்னு போய் மொதோ ஓவரிலேயே சிக்ஸர் அடிச்சு சூப்பரான ஓபனிங் கொடுக்கரேன். ஆனா நான் புடுச்சதை firewall எல்லாம் போட்டு காபந்து பண்ணுலாம்னு பார்த்தா என்னோட firewall எல்லாத்தையும் பேத்துகிட்டு கண்டவனும் என்னோடதை களவாடிகிட்டு போய்டுறானுகோ?? இப்படி எத்தனைய மிஸ் பண்ணியிருக்கேன் தெரியுமா??

பாண்டி: ஒகே ஓகே கவலை வேணாம் ராமு. நீ ஆர்குட்டு சாட்டுன்னு போய் தேத்தறது இருக்கட்டும் அப்பபோ உன்னைப்பத்தியும் லேசா ‘பிட்’டைப் போட்டீயா? உன் firewall லை ஒருத்தன் பேத்துகிட்டு இருக்குற வரை என்ன பண்ணுணே? ஏதோ ஒரு அந்நியன் வர்றான் அப்படீன்னாலே நீ உடனே ஒரு ரெட் அலர்ட் செட் பண்ண வேணாமா? அவன் என்ன எழுதறான் அதுக்கு உன் ஆளு என்ன சொல்லுதுன்னு அப்படியே 24hrs மானிடர் பண்ணிகிட்டே இருக்கனும். அதான் சிக்ஸர் அடிச்சாசில்லேன்னு மப்பை போட்டுகிட்டு ஒக்கார்துகிட்டு இருந்தா சிங்கிள் சிங்கிளாவே ரன் எடுத்து ஸ்டெம்பை பேத்தெடுத்துகிட்டு ஓடிறுவானுங்க ஜாக்கிரதை தெர்தா??

வெட்டி: பாண்டி இந்தியாவிலே இருக்குற வரைக்கும் கேபினுக்கு வெளியே எட்டிப்பார்த்தா எட்டடி பாயத் தோணுற மாதிரி கலர் கலரா இருக்கும். சரி பாரின் போக சொல்லறானுகளே கேபினுக்கு வெளியே ஒரே கவுனு மயமா இருக்கும்ன்னு நம்ம்ம்ம்பி சரின்னு ஒத்துகிட்டு வந்தா கவுனு பார்ட்டி எல்லாம் கவுனு பாட்டியால்ல இருக்கு !! நானும் காதல் கதை அது இதுன்னு பண்டல் பண்டலா எழுதி தள்ளுரேன். ஆனா என்னைய தள்ளிகிட்டு போறதுக்கு எதுவும் சிக்கலையே என்ன பண்ணுவேன்??

பாண்டி: அட கவலைய வுடு பாலாஜி ! காதல் கதை எழுதறது சரி. அதுல நீ எழுதுற டயலாகை எல்லாம் யாரு கிட்டவாச்சும் சொல்லி பார்த்தியா ??

வெட்டி: ஓஓஓ அப்பவே சொல்லி பார்த்தனே என் ரூம்மேட் கார்த்திகிட்டே!

பாண்டி: கிழிஞ்சது போ !! கார்த்தி கிட்டே சொல்லி என்ன ஆக போகுது? சின்னபுள்ள தனமால்ல இருக்கு !! யோவ் பாலாஜி கார்த்திகிடே சொன்ன நேரதுக்கு கார்த்திகா கிட்டே சொல்லி காட்ட வேண்டியது தானே ?

வெட்டி: அய்யோ யாரு அது கார்த்திகா ?

பாண்டி: ம்ம் ஹூம். பாலாஜிக்கு கொஞ்சம் ICU கோச்சிங் தான் கொடுக்கனும் . பாலாஜிய அப்படியே அள்ளிகிட்டு நம்ம பேட்டை ICU கோச்சிங் சென்ட்டருக்கு போங்கப்பூ !!

கைப்பூ: டேய் பாண்டி பாலாஜிக்கு மட்டும் ஏதோ ஸ்பெசல் கோசிங் கொடுக்கறேனு சொன்னியே என்னையும் அப்படியே அள்ளிகிட்டு போய் கோச்சிங்க் கொடுறா பண்டிக்கண்ணு !!

ராயல்: யேய் பாண்டி எனக்கொரு தீர்வசொல்லு இல்லே இப்பவே இங்கயே நான் தீக்குளிச்சுருவேன் !!

ஜொ.பாண்டி: அட கொக்க மக்க !! என்ன இது இம்ப்பூட்டு வேகம்?? இதே வேகத்தை அங்க கட்டி இருந்தா எவ்ளோ நல்லா இருந்திருக்கும்? சரி சரி அல்லாரும்க்கு மொதல்ல கொஞ்சம் வார்மப் பண்ணணும் . என்னோட பின்னாடியே நகர்வல வாங்க போலாம்! அப்படியே வர்றப்போ சும்மா வரக்கூடாது ! அப்படியே நம்மளைப்ப பத்தி அருமை பெருமையெல்லாம் பாடிகிட்டே வரணும் சரியா ??

வெட்டி: அட நாறப்பயலே. எங்கள வச்சு ஏதோ தேத்தப்பாக்குறே போல இருக்கே. இதுக்குதான் இம்பூட்டு நேரம் எங்களை வச்சு மொக்கை பொட்டுகிட்டு இருந்தியா ?? தல இவனே வுட்ட இப்படியே நம்மளை வச்சு பொங்கலைப் பொங்கி தின்னுட்டு ஏப்பம் வுட்டுட்டு போய்கிட்டே இருப்பான். டேய் பொளங்கடா பாண்டிய !!

அலறிக்கொண்டே அனைவரும் துரத்த பாண்டி எஸ்கேப் !

.... இங்கே பதியப்பட்டது ஜொள்ளுப்பாண்டி | 11 மறுமொழிகள் »

ப்ளாக்கர்ஸ் Meet – வ வா ச

பதிந்தவர் vavaasangam மேல் நவம்பர் 9, 2006

வவாச மீட்டிங்

இப்போ வர வர வலைபதிவாளர் சந்திப்பு அப்படீங்கறது பேஷனா போயிடுச்சு.பதிவு போடுரமோ இல்லையோ ஒரு வலைபதிவாளர் மீட்டிங்காச்சும் போயிருக்கீங்களான்னு கேட்டு இல்லேன்னு சொன்னா அற்பனே அப்படீன்னு புழுவைபோல பார்பாங்க போல இருக்கு. ஊர்ல weekend ல எல்லா Park க்குக்குள்ளேயும் எல்லா Bar க்குள்ளேயும் ஒரு இடம் free ய இல்லைனா பார்த்துக்குங்களேன் அங்கங்கே நம்ம ப்ளாக்கருகதான். ‘மீட்டிங்கு’ ‘கட்டிங்’ குன்னு சும்மா பட்டைய கெளப்பிகிட்டு இருக்காங்க. இதையெல்லாம் பார்த்திட்டு படு டென்சனா சங்கத்துக்குள்ள வர்றாரு தல கைப்புள்ளே !

கைப்பு : ஏடா மக்களா ஒரு பயபுள்ளய சங்கத்துக்குள்ள காணமே. எங்கடா போய்த் தொலைஞ்சீங்க ?? அங்க பாருங்கய்யா நேத்து ப்ளாக் ஆரம்பிச்சு இன்னிக்கு ப்ளாக்கர் மீட்டிங்குக்கு போய்ட்டு வந்து அப்படியே மீட்டிங்கப்பத்தி அப்புறம் அடிச்ச கட்டிங்கப்பத்தி யே பத்தி பத்தியா எழுதி அம்பூட்டு அப்ளாசையும் வாங்கிட்டு போறாகளே. நாம சங்கம் ஆரம்பிச்சு ஏதாச்சும் இப்படி பணியிருக்கமா ?? ஏண்டா உங்களுக்கெல்லாம் இப்படி பண்ணனும்னு தோணாம போச்சு. இப்படியே விட்டா வருத்தப்படாத வாலிபர் சங்கம் வருத்தப்படுற சங்கமாகிபோய்டுமேய்யா. ஆராச்சும் ரோசனை சொல்லுங்கப்பூ. டேய் ஜொள்ளுப்பாண்டி ஏண்டா எத்தினி நாளுதான் இந்த பொட்டிக்கடை டீக்கடைன்னு சங்கத்துபக்கமே தலை வச்சுப் படுக்காம இருப்ப ? எங்கய்யா இந்த விவசாயி ?? ஏன்யா தேவு உங்களைப்பார்க்கவே தேவுடு காக்க வேண்டியிருக்கேய்யா ?? ஏன்யா அப்பரண்டீஸ்ஸுகளா எங்கப்பா இருக்கீங்க??

தலயோட புலம்பல் கேட்டு எல்லாரும் அலறியடிச்சிகிட்டு சங்கத்துக்குள்ள வர்றாங்க.

தேவ் : என்னா தல புலம்பல்?? நான் ஏதோ கொஞ்சம் தியேட்டர் பக்கம் ஒதுங்கி தீபாவளிக்கு மக்களுக்கு படம் பார்க்க ஆலோசனை சொல்லலாம்னு பார்த்தா விட மாட்டீங்களே ??

கைப்பூ : வாய்யா தேவு. இப்போ அதுதான் குறைச்சல். நாம படம் காட்டணும்யா! நாம படம் பார்க்ககூடாது. தெரியுதா? அங்க அவங்கவங்க படம் காட்டிகிட்டு இருக்காங்க. நீங்க இங்க இப்படி சிம்புவையும் நயன்ந்தாராவையும் பர்த்துகிட்டு இருந்தா எப்படிய்யா?

தேவு : தல ஓவரா பேசுறீங்க. அயராது சங்கப்பணி ஆத்தி ஆத்தி சங்கத்து சிங்கமெல்லாம் கொஞ்சம் ஓய்வெடுக்கனும்தான் இப்போ புதுசா ரெண்டு சிங்கக்குட்டிகளை அப்பரண்டீஸ்சுகளா சேர்த்துவிட்டுருக்கோம்ல ??

தளபதி சிபி : ஏதோ நயன்ந்தரான்னு சத்தம் கேட்டுச்சே என்ன இடம் இது?? கந்தா கடம்பா !!! எல்லாரையும் காப்பாத்தும் வேலவா !!!

கைபூ : யாருயா நீ? எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே ?? அட நம்ம தளபதி சிபி. ஏன்யா என்னாய்யா ஆச்சு உனக்கு ?? சங்கத்து தளபதியா பகைவனின் சிரம்கொய்து வந்திருக்க வேண்டிய நீ ! கழுத்தில் கொட்டை! நெத்தியில் பட்டை! என்ன கோலம் இது ?

சிபி : கைபுள்ளாய்!! நாம் அப்போதே சங்கத்திலிருந்து VRS ( Voluntary Retirement ) வாங்கிக்கொண்டு எம்மப்பன் முருகனின் திருவடி சரணம் என நாடிப் போய்விட்டோம் தெரியாதா?? ஏதோ அர்சனை சத்ததிற்கு நடுவில் என் தேவி நயன்ந்தாராவின் திருப்பெயர் செவியில் விழுந்ததால் இவ்விடம் வந்தோம்.

கைப்பூ : அப்பூ இவரு ஒருகாலத்திலே நம்ம தளபதி இப்போ பாவம் ஏதோ காவி கமண்டலம்னு போய்டாரு !! அப்படியே ஒரு நயன்ந்தாரா போஸ்டரை கொடுத்து ஒரு ஓரமா பய்ய ஒக்கார வைங்கயா.

அப்போது அண்ணா! என்னை மறந்ததேன் அண்ணா! என ஒரு உருவம் அலறிக்கொண்டு வருகிறது. கைப்பு குலை நடுங்க பார்க்கிறார்

கைப்பூ : ஆரும்மா நீ??

பெண் : ஐய்யகோ அண்ணா என்னாயா யாருன்னு கேட்கறே?? “கைவீசம்மா கைவீசு! வெண்பா வடிக்கலாம் கைவீசுன்னு ! “ என பாடிக்கொண்டே அழ ‘ ஜெர்க்’ ஆகிறார் தல கைப்பூ

கைபூ : ஆஹா உடன் பொறவா சகோதரியே! என் அருமை பொன்ஸே! எங்கேம்மா போய்ட்டே? யோவ் பாருங்கய்யா சங்கத்து பெருசுக எல்லாம் ஒண்ணா கூடி இருக்குரப்போ இன்னும் என்ன ?? ரோசணைய அள்ளி விடுவாங்க பாருங்க. தங்கச்சீ இப்போ எதுக்கு கூடி இருகோம்னா

பொன்ஸ் : அதான் ஒரு பயலும் சங்கத்தை சரியா கவனிக்கலேன்னு தான் என் உளவுப்படை மூலமா தகவல் வந்துச்சே !!!

ஜொ. பாண்டி : பொன்ஸக்கா நீங்க பூனைப்படை நாய்ப்படை யானைப்படைன்னு ஒரு Zoo effect ல இருக்கரதா நெனச்சா உளவுப்படை ரிவால்வர் படைன்னு பட்டையக் கெளப்பிகிட்டு இருக்கீங்களே

பொன்ஸ் : ஹூம் யேய்! யேய்! இதெல்லாம் எனக்கு ஜூஜூபி பிஸ்கோத்து . எல்லாரும் சேர்ந்து கைப்பூவ கலாக்கிரது உங்க பாலிசி ! என்னைய நானே கலாய்க்கிரது என் பாலிசி. பொ.க.ச க.கா.ச, க.க ச. ஏ.ஐ.ச. யூ.பி.,ச. ஆ ஆ.ச. இதெல்லம் என்னானு பாகுறீயளா ??
சங்கத்திலே இருந்தாதேன் சிங்கமா ? அசிங்கமா இல்லை ? நாமதேன் இப்படி பல சிங்கங்களை அலைய உட்டுருக்கோம்லே ?!

இளா : சரி சரி யப்பா என்னாமா மழையடிக்குது. சும்மா நேரத்தை கடத்தாம கருத்தை சொல்லுங்கப்பா !!

சிபி : எந்த மீட்டிங் வச்சாலும் திருவடி சரணம்னு கைபூவ சங்கத்தை சுத்தி 100 தடவை அங்கப்பிரதட்சணம் பண்ணச்சொல்லி ஆரம்பிச்சா ரொம்ப நல்லதுன்னு திருமுருக கிருபானந்த வாரியார் சொல்லி கேட்டுருக்கேன் !!!

கைபூ : (மனசுக்குள்) இந்தாளு நெசமாதேன் சொல்றார இல்லை நம்மளை சுத்தமா ஒழிச்சுபிடணும்னு சொல்றாரா தெரியலையே !!

பொன்ஸ் : எல்லாரும் ப்ளாக்கர்ஸ் மீட்ட்ங்கை ஏதாச்சும் ஹோட்டல், BAR ன்னு தானே வைக்கிறாங்க ! சங்கத்து சிங்கம் சங்கத்து சிங்கம்னு சும்மா சொன்னா போதாது. நெசமாலுமே சிங்கம்னு நிரூபிக்க வவாச மீட்டிங்கை வண்டலூர் zoo விலே நடத்தினாதான் சூப்பரா இருக்கும் !!!

நாகை சிவா : வாவ் சரியான யோசணை ! அப்படியே நம்ம ‘தல’ ஒரு சிங்கத்தோட கழுத்தை கட்டிகிட்டு நின்னு போஸ் கொடுத்தா அதை அப்படியே என் கேமிராவில் சுட்டு ப்ளாக்கில போட்டு படம் காட்டீரமாட்டேன் ?

கைபூ : அப்புறம் எங்க படம் காட்டுறது ? பாடை தான் கட்ட முடியும் ! ஏன்யா ஒரு முடிவோடதான் இருப்பாண்க போல இருக்கே !!

வெட்டிபயல் : சூப்பர் யோசனை. என்ன சிங்கத்து பக்கதிலே நிக்கிரது ? ‘தல’ க்கி அவமானமில்லையா ? சிங்கத்து மேல ஏறி ஒக்காந்துகிட்டு அப்படியே ரெண்டு சிங்கக்குட்டிய மடியிலே வச்சுகிட்டு போஸ் கொடுக்கர மாதிரி கொடுத்தா அப்படியே என்னோட ஹாண்டிகேம்ல சுட்டு ஆர்குட்ல போட்டா போதும், சும்மா பொண்ணூங்க ஈ மாதிரி மொய்க்குமே !!!

ஜொ. பாண்டி : வெட்டி நானெல்லாம் கட்டுமரம் கட்டி நாயா அலைஞ்சு செய்யுரதை நீ சும்ம கம்யூட்டர் முன்னாடி ஒக்கார்துகிட்டு ஒய்யாரமா பண்ணுரியே !! எனக்கும் அந்த டெக்னாலஜிய கத்துக்குடு மாப்ளே !!

கைபூ : யேய் யேய் பாண்டிப்பயலே!! எங்க போனாலும் இந்த வேலைதானா ? சங்கத்தை முன்னேத்துங்கன்னா என்னா பேச்சு பேசிகிட்டு இருக்கீங்க ?

அப்போ வெளியில் ஒரு வண்டி வந்து நிக்கிற சத்தம் கேட்கிறது.

இளா : ‘ தல ‘ ஏதோ கார்பரேஷன்ல இருந்து நாய் புடிக்கிற வண்டி மாதிரி தெரியுதே. சங்கத்து வாசல்ல வேற வந்து நிக்குது ?!

பொன்ஸ் : மாதிரி இல்லை நாய் வண்டியேதான். Zoo ல மீட்டிங்குன்னு முடிவு பண்ணியாச்சு. அப்புறம் zoo வுக்கு போறதுக்கு zoo effect லயே ஒரு வண்டிய நாந்தான் ஏற்பாடு செஞ்சேன். நான் சொன்னா என் உடன்பொறவா அண்ணன் மறுப்பாரா ?? சீக்கிரம் சீக்கிரம் சங்கத்து சிங்கம் எல்லாம் நாய் வண்டிலே ஏறுங்க. வண்டலூர்ல போய் மீட்டிங்க கண்டினியூ பண்ணலாம்

பொன்ஸ் உற்சாகமாக சொல்லிக்கொண்டே போக ஆளாளுக்கு துண்டைக்காணோம் துணியைக்காணோம்னு தெரித்து ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

.... இங்கே பதியப்பட்டது ஜொள்ளுப்பாண்டி | 29 மறுமொழிகள் »

VAVASA – வரலாறு – பாகம்-3

பதிந்தவர் vavaasangam மேல் ஜூலை 19, 2006

வீர வரலாறு பாகம் 3

தங்கவையின் கோரப் பிடியில் சிக்கி இருக்கும் கைப்போங்காவை எப்படிக் காப்பது என்று தேவன் யோசித்துக் கொண்டிருக்கும் போது தான் சற்றுத் தூரத்தில் அந்த இளைஞன் நடந்து கொண்டிருந்தான்.சோழனின் அவையில் போருக்காகத் தூது சொல்ல வந்து பூம்புகார்ப் பெண்களின் அழகில் மயங்கி போர் தொடங்கிய பின்னும், சோழ நாட்டுத் தாவணியைப் பற்றி ஆராய்ச்சி செய்கிறேன் என்று கதை சொல்லிக் கொண்டு பூம்புகாரில் நிரந்தரமாக செட்டில் ஆகிவிட்ட வில்லுப் பாண்டிதான் அவன். மின்னலென ஒரு யுக்தி அநிர்தேவனுக்குப் புலப்பட்டது.

Part 3 Starts ….
வில்லுப்பாண்டி, அநிர்தேவனின் கச்சேரியில் வில்லுப்பாட்டுப் பாட அடிக்கடி வில்லுப்பாண்டியின் வில்லை இரவல் கொடுத்த வகையில் நன்கு அறிமுகமானவன்தான். வில்லுப்பாண்டி போர்க்காலங்களைத்தவிர பெரும்பான்மையான நேரங்களில் கரும்பு வில்லைத்தான் வைத்துக்கொண்டு படம் காட்டுபவனாதலால் அன்றும் அப்படித்தான் கரும்பு வில்லோடு வருவதைக் கண்டு பேரானந்தம் கொண்டான் தேவன். தங்கவை நாச்சியார் என்ற போர் யானை பேருக்குத்தான் யானை ஆனால் அதற்கு தளையுடன் கூடிய வெண்கரும்பு என்றால் கொள்ளைப்பிரியம் என்பதை அறியாதவனா தேவன்? போர்களத்திலே கூட எதிரிகள் தங்கவை நாச்சியாரின் தாக்குதலையும் இக்கரும்பைக்காட்டி கட்டிப்போட்டனர் என்ற வரலாற்றினையும் நன்கு உணர்ந்த தேவன் கணப்பொழுதில் வில்லுப்பாண்டியின் கரும்பு வில்லைப் பிடுங்கி அதன் நாணை அறுத்து தோகையை ஆட்டியவாரே தங்கவை நாச்சியாரை நோக்கி ஓடினான்.

வழக்கமாக தான் நாடிச்செல்லும் கரும்பு தன்னை நாடி வருவதை பார்த்த தங்கவை நாச்சி கைப்போங்காவை மறந்தது. ஏற்கனவே கைபோங்காவை தட்டாமாலை சுற்றிக்கொண்டிருந்த தங்கவை நாச்சி கரும்பைப் பார்த்த கணத்தில் அப்படியே விட்டெரிந்ததில் அந்தரத்தில் மிதந்து ‘ஐயோ காப்பாதுங்க காப்பாதுங்க ‘ போன்ற வேத கோஷங்கள் முழங்க வீரமாக தேவன் கச்சேரி செய்துகொண்டிருந்த தபேலாக்களின் மீது விழுந்தான். கைபோங்காவைத்த தாங்கிய தபேலாக்கள் எழுப்பிய ஒலி போர்ப்பறையை ஒத்திருந்தன.தங்கவை நாச்சியின் கோரப்பிடியில் சிக்கி சின்னாபின்னமாயிருந்த கைபோங்காவை நோக்கி ஓடி வந்த வில்லுப்பாண்டியும் அநிர்தேவனும் கைத்தாங்கலாக திண்ணையில் அமரவைத்து ஆசுவாசப் படுத்திக்கொண்டிருந்தனர்.

வீரம் வெளஞ்ச மண்ணில் கூட வெளஞ்ச மாசரு மாணிக்கம் கலாய் கலாய் கலக்கலக்கலாய் என எப்போதும் கோஷமிட்டுக் கொண்டு குதிரைமீது அமர்ந்து ஓடியோடி வீரர்களுக்கு எதிரிகள் தாக்கினால் எப்படி திரும்பி ஓடுவது அவ்வாறு ஓடிவரும்போது கூட ஓடி வரும் தங்கவை நாச்சியாரின் கரும்புக்காட்டு கவனத்தை எப்படி திருப்புவது என சோளம் தின்றுகொண்டே பயிற்சி அளித்துக்கொண்டுந்த சோழத்தளபதி சிப்பிப்பாரை சிபிவர்மனின் பயிற்சிமிக்க காதுகள் தூரத்திலே ஒலித்த போர்ப்பறையை ஒத்திருந்த ஓசையைக் கேட்டன. உடனே ‘கலாய் கலாய்’ என வீரர்களைப்பார்த்து சத்தமிட்டுக்கொண்டே குதிரையிலிருந்து குதித்தான். ‘காலாய்’ எனக் கேட்ட மாத்திரத்தில் அப்படியே மண்ணில் குப்புற விழுந்து பதுங்கி தலையை மாத்திரம் தூக்கிப் பார்த்த வீரர்களைக் பார்த்து கோபக்கனல் கக்கியவாரே கேட்டான் சிப்பிப்பாரை சிபிவர்மன். ‘எல்லையில் எல்லாம் வெள்ளைக்கொடியை ஏற்றச்சொன்னேனே. ஏற்றினீர்கள் தானே ! பின் எப்படி இந்தப் போர்ப்பறை?? ‘ கேட்கும்போதே அரையில் கட்டியிருந்த வெண்கொடியை தொட்டுப் பார்த்துக்கொண்டான்.’இந்த சத்தம் போர்ப்பரையை ஒத்திருந்தாலும் போர்ப்பறை போல் தோன்றவில்லை தள! ’ என சிப்பாய் சிவனாண்டி நடுங்கியபடியே கூற மண்ணிலிருந்து எழுந்த சிப்பிப்பாரை சிபிவர்மன் படிந்திருந்த மண்ணைத்தட்டிவிட்டவாரே தனது புரவியில் தாவியமர்ந்தான்.

பறையொலி கேட்ட திசையை நோக்கி தனது புரவியை விரட்டிய சிபிவர்மன் அது அநிர்தேவனின் இருப்பிடத்திலிருந்துதான் வந்தது என அறிந்து கொண்டான். வழக்கமாக தேவனின் தபேலக்களை தூரத்தில் பார்த்தாலே காத தூரம் ஓடும் மக்கள் இன்று என்னவோ அவன் கச்சேரி செய்யும் திண்ணையில் திரண்டிருக்கிறார்களே என்ன விசயமாக இருக்கும் என ஐயம் கொண்டான் ! தளபதிகளுக்கேயுரிய வழக்கமான எச்சரிக்கை உணர்வுடன் எதற்கும் இருக்கட்டும் என வெண்கொடியை அரையிலிருந்து எடுத்து கையில் வைத்துக்கொண்டே நெருங்கினான்.

சிப்பிப்பாரை சிபிவர்மன் அங்கே கண்ட காட்சி அவனுள் ஒரு பெரும் திகிலை ஏற்படுத்தியது. அநிர்தேவனும் வில்லுப்பாண்டியும் உடலெல்லாம் ரத்த விளாராய் போர்க்களத்திலிருந்து அப்படியே வந்ததுபோலிருக்கும் ஒருவனுக்கு சேவகம் செய்து கொண்டிருந்தனர், ‘ ஆகா இவ்வீரனுக்கு இவ்வளவு விழுப்புண்களா? எவ்வளவு போர்க்களங்களைச் சந்தித்தானோ? எவ்வளவு தலைகள் உருண்டனவோ ? இவனுக்கே இத்தனை விழுப்புண்களென்றால் இவன் எதிரிகளுக்கு என்ன கதியோ ?? நான் கூட இவ்வாறு களம் கண்டதில்லையே இவனிடமிருந்து எப்படியாவது களம் காண பயிற்சி எடுத்துக்கொள்ளவேண்டும்!’ என மனதிலே உறுதி பூண்டான். சிறுது தைரியத்தை வரவழைத்துகொண்டு கைபோங்காவை நெருங்கினான் சிப்பிப்பாரை சிபிவர்மன்.

ஓரமாக ஒய்யாரமாக நின்று நடக்கும் நிகழ்வுகளை பய பக்தியோடு பார்த்துக்கொண்டிருக்கும் விவசாயியை நெருங்கிய சிபிவர்மன் ‘என்ன நடந்தது ? விழுப்புண்களோடு அமர்ந்திருக்கும் இம்மாவீரன் யார் ? ’ என பிரமிப்பு விலகாமல் கேட்டான்.

- தொடரும்

.... இங்கே பதியப்பட்டது ஜொள்ளுப்பாண்டி | 30 மறுமொழிகள் »

வருத்தப்படாதீங்க ப்ளீஸ் !!

பதிந்தவர் vavaasangam மேல் ஜூன் 12, 2006

இப்படியெல்லாம் வருத்தப்படணுமா?

வருத்தப்படாத வாலிபர் சங்கத்துக்கு வந்த பின்னூட்டத்திலே பலபேரு தேவையில்லாமல் வருத்தப்பட்டுகிட்டு இருக்கறத நெனச்சு ‘தல’ கைப்பு ரொம்ப கவலைப்பட்டுகிட்டு இருக்குறாரு. எப்படி வருத்தப்படாம இருக்கறதுன்னு ஆலோசனை நடக்குது.

கைப்பூ : இதப்பய புள்ளக எல்லாம் வருத்தப்படாம இருப்பங்கன்னும்னு தான் சங்கத்தை ஆரம்பிச்சா என்னய்யா அல்லாருக்கும் பார்த்தா ஒவ்வொரு கொறை இருக்கும் போல என்ன பண்ணலாம் சொல்லுங்கப்பூ.

சிபி : வருத்தத்தை வருத்தப்பட வைக்க வேண்டும் . வருத்தம் என்னும் விருத்தம் இங்கே தொக்கி நிக்கிறது ஏன் என்ற கோள்வியினை நம்முன் வீருகொண்டு எழுப்பி கெக்கலிட்டு பார்க்கிரது.

கைப்பூ : ஐயா ஐயா சிபி கொஞ்சம் புரியமாதிரி சொல்லுப்பூ. என்னடா சிபி சொல்றது கூட புரிய மாட்டீங்குடேன்னு அவனவன் அப்புறம் புதுசா வருத்தப்பட ஆரப்பிச்சுடுவாங்க !

தேவு : நிறுத்தச் சொல்லுங்க. அவனை நிறுத்தச்சொல்லு இவனை நிறுத்தச்சொல்லு.

கைப்பூ : தேவு எதையப்பா நிறுத்தச்சொல்றே ??

ஜொள்ளு பாண்டி : நான் வரும்போதே என் வண்டிய நிறுத்திட்டு தானே வந்தேன் !

தேவு : நிறுத்தனும். எல்லாரும் வருத்தப் படுறதை நிறுத்தனும் !! ஏன் எப்படி எதுக்குன்னு யாரும் எதுவும் கேள்வி கேட்காம வருத்தப்படுரதை நிறுத்தனும் !!!

பொன்ஸ் : என்ன இப்படி பேசறீங்க? எப்படி நிறுத்தது?? வருத்தப்படாத இருக்கனும்னா எப்படி வருத்தப்படரதுன்னு தெரிஞ்சாத்தானே வருத்தப்படாம இருக்க முடியும் என்ன நான் சொல்றது ??

ஜொள்ளுபாண்டி : ஐயா எல்லாரும் என்னமோ சொல்றீங்களே ‘தல’ என்னான்னு கொஞ்சம் வெளக்கமா சொல்லுங்கய்யா !!!

கைப்பூ : ஏ வெளங்காத பயலே. நானே என்னடா சொல்றாங்க இவங்கன்னு மண்டையப் பிச்சிகிட்டு இருக்கேன் என்கிட்ட போயி வெளக்குன்னு கேட்டுகிட்டு.

விவசாயி : வருத்தம் அப்படீங்கறது வயக்காடுல சாகுபடி செய்யிறப்போ இடையிலே வளர்ற ‘களை’ மாதிரி. அதைய முற்றிலும் களைய முடியாட்டியும் அப்பப்போ களைய முடியும் அப்ப்டீங்கறதைத்தான் நம்ம விவசாய விஞ்ஞானி விஸ்வனாதனும் சொல்லியிருக்காறு. அப்படியே வயக்காட்டிலே ‘ வரப்பு’ ஓரமா ஒக்காந்து யோசிச்சா நல்லா தீர்வு கெடைக்கும் !

பொன்ஸ் : வாவ் !! சரியாகச்சொன்னீர்கள் விவசாயி.. இதையேதான் காளமேகப்புலவரும் சொல்லியிருக்காருன்னு நேத்துதான் படிச்சேன் !

ஜொள்ளு பாண்டி : என்னாச்சு எல்லாருக்கும் . குடுகுடுப்பை காரன் மாதிரி ஆளாளுக்கு என்னமோ புரியாத பாசையிலே சொல்லிகிட்டு இருக்காங்களே !’ இனிமே சங்க மீட்டிங்குக்கே ட்ரான்ஸிலேட்டர் வச்சிக்கனும் போல !

கைப்பூ : யப்பா கண்ணுகளா யாராச்சும் புரியரமாதிரி பேசுங்களேப்பா. உங்க பேச்சைக் கேட்கிறப்போ கண்ணை கட்டிகிட்டு வருதே !

பொன்ஸ் : ஐயோ தல இவ்ளோ நேரமா உயிரைக்கொடுத்து பேசிக்கிட்டு இருக்கேன் புரியலையா ?? ஐயகோ. இப்போதே ஒரு மன்னிப்பு அறிக்கை விடிறேன்.

கைப்பூ : ஆத்தா பொன்ஸு கொஞ்சம் நில்லும்மா ! நான் என்னாத்த சொல்லிபிட்டேன்னு இப்படி அறிக்கை விடுறேன்னு சொல்லுதே ?

பொன்ஸ் : யாரையும் அலட்சியம் செய்வது என் லட்சியமல்ல ! அலட்சியம் என்ற லட்சியம் கொண்டவருக்கு அதைக்கொள்ளாமல் இருக்கதானே நான் பாடுபட்டுக்கொண்டிருக்கிறேன் ??

தேவு : வருத்தப்படாத சங்கத்திலிருந்து ஒப்பாரிச்சத்தம் வருவது அழகல்ல ! எங்கெல்ல்லாம் வருத்தமின்மை கண்ணகி சிலைபோல் களையப்பட்டு கொடும் கூற்றாம் ‘கவலை’ முன் வீழ்ந்து கிடக்கிறதோ அங்கெல்லாம் வருத்தப்பாடாதலை மீட்டு மீண்டும் நிறுவவேண்டிய கடமையைத்தான் செய்ய வேண்டுமெயொழியா ஏன் வீழ்ந்ததென வீண் வாதம் விளக்கம் தேவையில்லை !!

பொன்ஸ் : ஆஹா எப்படி முடியும்? வருத்தம் கொள்ளல் பாவமில்லை. வருந்தா மருந்தொன்று உண்டென்று சொன்னால் அது மருந்தல்ல அகழ்தெடுத்த அமிர்தம்.

சிபி : அதைத்தானே பொன்ஸ் நாம் கடைந்து கடைந்து சங்கம் வரும் தங்கங்களுக்கு கொடுத்துக்கொண்டிருக்கிறோம்.

ஜொள்ளுபாண்டி : என்னய்யா ஆச்சு எல்லாருக்கும் ? ஏதோ சங்ககாலப் படம் பார்த்த மாதிரி பேசிக்கிட்டு இருக்கீயளே !!

கைப்பூ : எலே பாண்டி. எனக்கு அப்படியே கண்ணை கட்டிகிட்டு வருது. கொஞ்சம் கைத்தாங்கலா கூட்டிகிட்டு போறியா ??

தேவு : என்னாச்சு ‘தல’ சோமபானம் சுராபானம்னு எதாச்சும் உள்ள போச்சா ?

கைப்பூ : பானமாவது? பனங்காயாவது ? வருத்தப்படாம இருக்கரது எப்படீன்னுதனே கேட்டேன். இப்படி போட்டு பொளந்து கட்டீட்டீயளே ! ஒன்னூமே புரியலையே ? எவ்ளோ நேரந்தான் புரியரமாதிரியே நான் நடிக்கிறது ??

.... இங்கே பதியப்பட்டது ஜொள்ளுப்பாண்டி | Leave a Comment »

கைப்பூ ‘பெக்’ காம்

பதிந்தவர் vavaasangam மேல் ஜூன் 2, 2006

Image Hosted by ImageShack.us

‘தல’ கைப்புவை இந்த உலகக்கோப்பை உதைபந்துல எப்படியாச்சும் ஒரு ‘கோல்’ லாச்சும் போடவைத்து ‘தல’ யின் வீரத்தையும் சங்கத்தின் மேலாண்மையையும் நிரூபிக்க வேண்டிய அவசியத்திலிருப்பதால் அதற்கான ‘டெக்னிகல் அட்வைஸ்’ கொடுக்க சங்கத்தின் தங்கங்கள் கூடி ஆலோசனையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். போனதடவை மாதிரி இல்லாம இந்த தடவை ஆளாளுக்கு ஒவ்வொரு கண்டத்திலே இருக்கறதாலே சங்க கூட்டத்தை Video Conference மூலம் நடத்த இந்தியாவில இருந்து ‘போர்வாள்’ தேவு, சங்க டீக்கடை செயலாளர் ஜொள்ஸ், தள்ளாடாத தளபதி சிபி, வீரத்தை ஏக்கர் ஏக்கரா சாகுபடி பண்ணிகீடு இருக்கர விவசாயி எல்லாரும் வந்து அசெம்பிள் ஆகியிருக்காங்க.

விளையாட்டுத்துறை டெக்னிகல் கமிட்டி தலைவரான , வட அமெரிக்க சிங்கம் புட்பால் கண்ட காளை பந்தினைப்பற்றிய அளப்பறியா அறிவையும் அதன் நெளிவு சுளிவுகளைப் பற்றி அர்ஜென்டீனிய டீன் தேழியிடமும் பேக்வார்ட் பார்வார்ட் ஆட்டத்தைப்பற்றி ப்ரேசில் தோழியிடமும் டிபன்ஸ் தொழில்நுட்பத்தை ஜெர்மானிய பெண் சிங்கத்திடமும் பல களங்களிலே கற்று , பயிற்சி பெற்று, வரலாற்று ரீதியாக இதுவரை நடைபெற்ற ஆட்டத்தினை பற்றி அலசி ஆராய்ந்து பதிவுகளை அள்ளித்தெளித்திருக்கும் அண்ணன் கார்த்திக் ஜெயந்த் தலைமையில் இந்தக் கூட்டம் கூடியிருக்கிறது.

சங்கம் கண்ட எங்கள் தல புட்பாலின் நாயகன் ஜெர்மனி கண்ட வ.வா ச. கோமகன் தல கைப்பு , வளைகுடாகிளை செயலர் துபாய் ராசா,( ராசா திருப்தியா ?) தென்னமெரிக்கவிலிருந்து பெருசு மற்றும் இந்தியாவிலிருந்தாலும் இண்டியானாவிலிருந்தாலும் ஓடி ஒடி சங்கப்பணிகளை ஆற்றிக்கொண்டிருக்கும் ஆற்றலரசி ( அப்படீன்னா என்னாக்கா??) ஆவிக்கதைகளையும் ஆவிபறக்க சாதம் வடித்தக் கதைகளையும் ஒருசேர பறிமாறிக்கொண்டிருக்கும் அக்கா பொன்ஸ்சும் ஆஜராகியிருக்கிறார்கள். மேலும் ஆற்றலரசிக்கு கடும் சவால் விட்டு சங்கப்பணிகளை ஆற அமர ஆற்றிவரும் கீதாக்கா மற்றூம் ஒரே கட்சி ஒரே தலைவர் ஒரே தொண்டர் என கழகம் கண்ட மாணிக்கம் எங்களுக்கு தோள் கொடுத்த நாயகன் அ.உ.ஆ.சூ.கு.ம.க. செல்வனும் தன் பரிவாரத்தோடு ப்ரெசென்ட் ஆகிறார். ( தேவூ அத்தனை பேரு பேரையும் சொல்றதுக்குள்ள தாவு தீருதப்பா!! யாரையாச்சும் வுட்டுருந்தா மன்னிச்சி என்னைய வுட்டுருங்க ப்ளீஸ் !! )

கைப்பூ : யப்பா யெல்லாருக்கும் திருப்த்தியா ? நான் பாட்டு செவனேன்னு ஒட்டகத்துலே ஏரி சித்தூர்காட்டு சிலுக்குவார்பட்டின்னு போயி கிட்டிபுல்லோ கபடியோ ஆடிகிட்டு இருந்தேன். என்னையப் போயி புட்பால் ஆடுறான்னு அல்லாரும் சேர்ந்து இப்படி அனுப்பி விட்டுட்டீயளே !!

கார்த்தி : தல கவலைப்படாதீங்க தல. அர்ஜென்டீனாவுக்கு ஒரு மரடோனா பிரேசிலுக்கு ஒரு ரொனால்டோ மாதிரி உங்களையும் ஆக்கிக் காட்டறேன் !!

ஜொள்ஸ் : கார்த்தி அண்ணே ‘தல’ க்கும் ட்ரென்யினிங்க கொடுக்க அர்ஜென்டீனால இருந்தோ இல்ல ப்ரேசில்ல இருந்தோ ஏதச்சும் பொண்ணு ட்ரெய்னர் வாறாகளா ??

கார்த்தி : ஏன் தலய மொத்தமா கவுக்கவா? தல முதல்லா கார்லோஸ் மாதிரி ஹேர் ஸ்டைல்ல மாத்துங்க ! மரடோனா மாதிரி உடம்மை ஏத்துங்க. ரொனால்டினோ போல பின்னாடி தீப்பிடிச்ச மாதிரி ஓடுங்க !!

பொன்ஸ் : ஹேய் கார்த்தி என்னா மேன் சொல்றே ? ‘தல’ இந்த வேர்ல்ட் கப்புல வெளையாடனும் தெரியுதா ?

கார்த்தி : அதுக்கும் கைவசம் பல டிப்பு வச்சிருக்கேன். ‘தல’ . இன்னிக்கு பெரிய பெரிய டீமுக்கே கேப்புல அல்வாவ கிண்டி கிண்டி கொடுக்கர சின்ன டீம் கேமரூன். அங்கன எனக்கு தெரிங்ச பெண்தோழி ‘உகாண்டா ஜிலேபியா’ இருக்காங்க. கால்பந்து ஸ்பெஷலிஸ்ட். . போனதடவை நான் லாஸ்வேகாஸ் போயிருந்தபோ ஒரு டான்ஸ் பார்ல பழக்கம். கோல் போடறது எப்படி அப்படீன்னு அவங்க உங்களுக்கு நெட் ப்ராட்டீஸ் கொடுப்பாங்க.

துபாய் ராசா : நெட் ப்ராக்டீஸ் கொடுக்கரப்போ நானும் ‘தல’க்கி தார்மீக ஆதரவு தரட்டா ??

ஜொள்ஸ் : உங்களுக்கு எதுக்கு சிரமம் துபாய் ? அப்புறம் நான் எதுக்கு இருக்கேன்?

பொன்ஸ் : நெட் ப்ராக்டீஸ் கொடுக்க ஏதும் ஆம்பிளை கோச் இல்லையா கார்த்தி ?

கைப்பூ : ( அதை காதிலே வாங்காதவர் போல ) அப்படியா கார்த்தி இன்னிக்கே ஆரம்பிச்சுடலாம் நெட் ப்ராக்டீஸ்.

நாகை சிவா : என்னா கேமரூன் ? சூடான்ல இருந்து ஒரு ‘கோச்’ சை சூடா நான் இறக்கரேன் . ‘தல’ ம்ம்னு சொல்லுங்கோ !!

கார்த்தி : ச்சூ சும்மா குறுக்க பேசப்பிடாது. சங்க மக்கள் யாருக்காச்சும் புட்பால் தெரியுமா ? இல்ல அதையப் ஒரு பதிவாத்தான் போட தெம்பு இருக்கா ? யாரும் ஏது பேசப்பிடாது சொல்லிட்டேன்.

கைப்பூ : சரி சரி கோச்சுக்காத மேல சொல்லு கார்த்தி !!

கார்த்தி : கோலடிச்சா மட்டும் போதாது தல ! கோலடிச்சதுக்கப்புறம் அப்படியே ஓரமா நின்னு ரோஜர் மில்லா மாதிரி ஒரு ஸ்டைலா ஆட்டம் போடனும் அதுக்குத்தான் மதிப்பே. அப்படி ஆட கத்துக்கொடுக்க ப்ரேசில்ல இருந்து ரெண்டு ‘பெல்லி டான்சரை’ ஏற்பாடு பண்ணிடறேன்.

சிபி : எப்பா முதல்ல தல காலுக்கு பந்து வர ஏற்பாடு பண்ணுங்கப்பான்னா சும்மா பெல்லி டான்ஸ்சு பல்லி டான்சுன்னு ..

தேவு : அட இருங்க சிபி. நான் பெல்லி டான்ஸே பார்த்ததில்லை ஹிஹிஹி

கார்த்தி : குவாட்டர் பைனல் வந்துட்டாலே கூட போதும் எங்கேயோ போய்டலாம்.

ஜொள்ஸ் : கார்த்தியண்ணே அங்கேயும் குவாட்டர் தானா ? ???

தேவு : டேய் ஜொள்ளு மானத்த வாங்காதே .கொஞ்சநேரம் கம்ம்முனு கெட இது வேற குவாட்டர்.

இளா : சரி சரி மேட்டருக்கு வாங்க !

பொன்ஸ் : என்னா கார்த்தி சும்மா மரடோனா , ரோஜர் மில்லா ன்னு ரிடயர்டு கேஸ்சுகளப் பத்தி சொல்லிகிட்டு . ஒரு பெக்காம், ஒரு தியரி ஹென் மாதிரி கொஞ்சம் லேட்டஸ்ட் ப்ளேயர்ஸை பாரு.

கார்த்தி : ‘ தல ‘ The great german Wall ஆலிவர் கானுக்கே சூப்பு கொடுத்துட்டு ஆப்பு அடிக்கற மாதிரி ஒரு கோலடிச்சீங்கன்னு வைங்க. அவ்ளோதான் ! சும்மா பிச்சிக்கும்.

கைப்பூ : ( மனதுக்குள் ) ஆலிவர்கான், பெக்காம்னு ஏதேதோ சொல்றாங்களே நமக்கு தெரிஞ்சதெல்லாம் ஆப்பக்கடையும் ரெண்டு ‘பெக்’கு ந்தானே. இவனுக நம்மளை கவுக்காம வுடமாடானுக போல இருக்கே !!!

கார்த்தி : தல என்ன ஒரே யோசனை. பயமா இருந்தா சொல்லுங்க மெக்சிகோ சரக்கு ‘டக்கீலா’ இருக்கு. ரெண்டு ரவுண்டு உட்டுக்குங்க .அப்புறம் புட்பால் க்ரவுண்ட்
என்ன ? சும்மா எகிறி அடிக்கிற அடில பந்து கோல் கீப்பரை பேத்துகிட்டு உள்ள போயிறாது ?

ஜொள்ஸ் : என்னாது ஷக்கீலாவா ???

செல்வன் : ச்சூ என்ன பாண்டி??! அது ஷக்கீலா இல்லை ஆனா அதைவிட கிக்கா இருக்கற டக்கீலா .

கீதாக்கா : அபச்சாரம் அபச்சாரம் சங்க மீட்டிங்குண்ணு கண்ட கருமாந்திரத்தையெல்லாம் பேசிக்கிட்டு. ‘ சிறுசுக வெளச்ச வெள்ளமை வீடு வந்து சேராதாம் ‘ இதுக்குத்தான் என்னைய மாதிரி ஒரு பெரியவங்க வேணுங்கரது.

பொன்ஸ் : ( மனதுக்குள் ) க்கும் அப்படியே இருந்துட்டாலும் . ( சிரித்தபடி ) சரியா சொன்னீங்கக்கா.

கீதக்கா : போதும்பா கார்த்தி நீங்க கைபூவுக்கு ட்ரெய்னிங் கொடுத்தது. ஏ பொன்ஸு எல்லாம் ரெடியா ?

பொன்ஸ் : ( மந்தகாசப் புன்னகையுடன் ) அப்போவே எடுத்து ரெடியா வச்சுட்டேன்க்கா!!
என்னாது? என்னாது ?? எல்லா இடத்திலிருந்தும் குரல் வருகிறது. பொன்ஸ் புன்னகையுடம் ஒரு பொட்டியை எடுத்து மேலே வைக்கிறார்.

பொன்ஸ் : போன மீட்டிங்ல நான் உங்களுக்கு வெண்பா வடிக்க கத்துக் கொடுத்தேன். இந்த மீட்டிங்குல இப்போ நான் வெண்மையா ‘ சாதம் ‘ வடிக்க கத்துக்கொடுக்கப்போறேன்.
வாலிபர்கள் அனைவரின் முகத்திலும் மரண பீதி தெரிகிறது.

பொன்ஸ் : இதுதான் மைக்ரோவேவ் ஓவன். ரெண்டு கப் அரிசிய எடுத்துக்குங்க. சுத்தமான தண்ணியிலே அரிசிய ரெண்டு தடவை அலசுங்க. ஒருகப் அரிசிக்கு..

சொல்லிக்கொண்டே போக ஆங்காங்கே ஒவ்வொரு கண்டத்திலிருக்கும் சங்க செல்வங்களின் மானிட்டர்கள் ஆட்டொமேடிக்காக shutdowm ஆகிறது.

.... இங்கே பதியப்பட்டது ஜொள்ளுப்பாண்டி | Leave a Comment »

ஏலேலோ ஐலசா ….

பதிந்தவர் vavaasangam மேல் மே 19, 2006

தேர்தல் கலாட்டாக்களை முடித்து விட்டு தேர்தலில் நிகழ்ந்தவை பற்றி பேச வ வா சங்கம் ‘தல கைப்புள்ளே ‘ தலைமையில் கூடியிருக்கிறது. பொன்ஸக்கா, விவசாயி இளா, கோவை பிரதர் சிபி , போர்வாள் தேவ். மற்றும் ஜொள்ளுப்பாண்டி அனைவரும் சங்க பெஞ்சுகளில் அமர்ந்திருக்கின்றனர்.

கைப்பூ : நான் இல்லாத நேரத்திலே நீங்கல்லாம் இருந்து சங்கத்தை தூக்கி நிறுத்துனதுக்கு ரொன்ப டேங்ஸ்பா. நெம்ம சந்தோஸமா இருக்கு.

இளா : தல எங்கே தல போய்ட்டே?

கைப்பூ : தேர்தல் நேரத்திலே என்னைய அப்படியே மல்கேட், கோல்கேட்டுன்னு ஆளாளுக்கு ஆட்டோவில தூக்கி போட்டுட்டு போயி நொங்கெடுத்துத்துட்டான்க.

பொன்ஸ் : தல அத்தனைக்கும் சும்மாவா இருந்தீங்க? நீங்க திருப்பி கொடுக்கலையா?

கைப்பூ: இல்லையே ?!!

பொன்ஸ் : ஏன் ?
கைப்பூ : மொதோ மொதெல்லா மல்கெட்டுக்குத்தான் வர சொன்னான்க ! சரி ஏதோ நம்மளையும் மதிச்சு கூப்டான்களே நாம இல்லையின்னா எதுவுமே நடக்காதுன்னு நம்பி போனேன். அங்க போனா ஒரு 50000 லைன் இருக்கர புரோக்கராமக் குடுத்து Debug பண்ணுடா கைபூன்னு சொல்லிட்டானுக. நானும் எவ்ளோ நேரந்தான் debug பண்ண தெரிஞ்ச மாதிரியே மானிட்டரை பார்த்து நடிக்கரது ??

(அழுகிறார் கைபூ . உடனே சிபி கோயமுத்தூரிலிருந்து பொன்னாடை போர்த்த வாங்கி வந்த ஈரிழைத் துண்டை எடுத்து கொடுக்கிறார்.)
பொன்ஸ் : பண்ணத்தெரியாட்டி தெரியலைன்னு சொல்லித் தொலைக்க வேண்டியது தானே ?

கைப்பூ : நானும் சொல்லலாம்னுதான் போனேன். அப்போதான் சொன்னானுங்க. ஏண்டா ஹிண்டு நியூஸ் பேப்பரை தினமும் தொரந்து வச்சுகிட்டு என்ன பண்ரேன்னு!! அப்போதான் தெரிஞ்சது அவனுக debug பண்ண சொன்னது வேற நான் பார்த்து பார்த்து coding கோன்னு நெனச்சு மலைச்சுப்போனது வேறன்னு.
சிபி : அப்படிப்போடு அருவாளை. நீங்களும் நம்ம கேஸ் தானா?

கைப்பூ : சரி நம்ம தப்புதான் போல. ப்ரோக்ராம் சின்னதா இருக்கும்னு நம்பி திரும்பி போய்ட்டேன்.அங்க போனாதான் தெரியுது அது பேப்பரை விட ரொம்ப பெரிசுன்னு.

தேவ் : என்ன தல. ஒரு வார்த்தை சொல்லி இருந்தா ஆன்லைன்லே ஹெல்ப்புக்கு வந்துருக்க மாட்டேன்?

கைப்பூ : அங்கே எங்க ஆன் லைன்னு? எல்லாமே ஆப்புதான் !!! இது பத்தாதுன்னு அந்த மேனேஜரு மவராசன் போனைப்போட்டு வேறொரு கம்பெனி ப்ராஜட் மேனேஜர் கிட்டே பேச்சி ஏதாச்சும் முடியாத ப்ராஜட்டு இருந்துதுன்னா கொடுங்க இங்க ஒருத்தன் வசமா சிக்கியிருக்கான்னு சொன்னான்.

பொன்ஸ் : (கோபத்துடன்) ஏன் அப்பவும் சும்மா இருந்தீங்க ?

கைப்பூ : ( அழுகையினூடே ) அங்க வந்துருந்த ஒரு ப்ராஜெட்டு மேனேஜரு சொன்னாரு ‘’ ஹிண்டு பேப்பரைக் கொடுத்தாக்கூட கோடிங்னு நெனச்சு debug பண்ரான்யா ! இவன் ரொம்ப நல்லவேன்னு சொல்லிட்டாரு ( பெருங்குரலெடுத்து அழ ஆரம்பிகிறார்)

அப்பொழுது வெளியே சத்தம் கேட்கிறது.
“ கழகம் கண்ட தலை கார்த்தி வாழ்க !! வாழ்க !! “ பாலபாரதி கோஷமிட புன்னகையினூடே கையில் ஒரு கஞ்சிராக்கட்டையுடன் நுழைகிறார் கார்த்தி.

கார்த்தி : என்ன இரு ஒரே ஒப்பாரிச்சத்தமா இருக்கு ?

விவசாயி : கார்த்தி இதென்ன கலாட்டா? என்னமோ ஈமெயில் அக்கௌண்ட் ஓபன் பன்ற மாதிரி நீங்க பாட்டுக்கு ஒரு கட்டை பிரம்மச்சாரிகள் கழகத்தை ஓபன் இருக்கீங்க ?

கார்த்தி : எலி வலையினாலும் தனி வலை வேணும் இல்லையா ? நீங்க மெம்பராக முடியாதுன்னு கரிச்சி கொட்டாதீங்க. வேணும்னா கழகத்திலே வீக்கெண்ட் பார்ட்டி இருக்கு. ஸ்பெசல் பாஸ் தாரேன் வந்து கலந்துக்குங்க .
இதனைக்கேட்டதும் மிகவும் உற்சாக மாகிறார் இளா. “ எனக்கொரு பாஸ் எனக்கொரு பாஸ் “ சிபி அலறுகிறார். அதற்கும் ஆமோதிக்கிரார் கார்த்தி..

ஜொ.பாண்டி : கார்த்தி அப்படியே எனக்கு ஒரு 15 பாஸ் வேணும் சொல்லிபிட்டேன்.

பொன்ஸ் : சரி சரி சங்கத்தோட அடுத்த கட்ட நடவடிக்கை என்னான்னு பேச வந்துருக்கோம்கரதையே மறந்துட்டு ஆளாளுக்கு பார்ட்டியப் பத்தி பேசிகிட்டு இருக்கீங்க.

தேவ் : தேர்தலில் அனைவரும் ஒன்றாக பணியாற்றினாலும் ‘தல’ இல்லாமல் சமாளிக்கரதுக்குள்ளே தாவு தீர்ந்து போச்சு.

ஜொ.பாண்டி : ஆமாண்ணே. எப்படியோ ஒருத்தர் மாத்தி ஒருத்தர் சமாளிச்சிட்டோம்.

பொன்ஸ் : எல்லாம் சரிதான் ஆனா நம்ம சங்க ஆளுகளுக்கு இன்னும் மொழிப்பயிற்சி அளிக்க வேண்டிய அவசியத்தை உணர வச்சிது இந்த தேர்தல்.

ஜொ.பாண்டி : பொன்ஸக்கா என்னாதிது மொழி ? பயிற்சி ?

பொன்ஸ் : நல்ல அறிக்கை விட்டே நீ. ஆனா எதிர் முகாமில் இருப்பவர்களைப்போல நீங்கள் விட்ட அறிக்கையில் ஒரு வெண்பா உண்டா ஒரு பரணி உண்டா ?

ஜொ.பாண்டி : யக்கா அதெல்லாம் யாரு பாக்கிறா? வெண்பா வேகாதபா வெல்லாம் நமக்கெதுக்கு ?

பொன்ஸ் : சும்மா வாயை மூடிகிட்டு ஒக்காரு. உனக்கென்ன தெரியும் அதைப்பத்தி ? சங்கத்தில யாருக்காவது வெண்பா வடிக்கத்தெரியுமா ?

தேவ் : ( முனு முனுப்பாக ) முதல்ல உங்களுக்கு சோறு வடிக்கத் தெரியுமா ?
கைப்பூ : யேய் யாரது ராஸ்கல் சவுண்ட் வுடரது ? எதுன்னாலும் எல்லாருக்கும் தெரியர மாதிரி பேசனும் சொல்லிபிட்டேன்.

சிபி : பொன்ஸு நாந்தேன் குமார காவியம் அப்படீன்னுனெல்லாம் தமிழைப் பிரிச்சு மேஞ்சுகிட்டு தானே இருக்கேன்? ( பரிதாபமாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்கிறார்)

கார்த்தி : இந்தா வந்துட்டாரய்யா சிபி. சீக்கிரம் அண்ணனுக்கு ரெண்டு மீன்கொத்தி வாங்கித் தரணும் அப்போதான் வீரமாவாரு !!

பொன்ஸ் : சரி சிபியாச்சும் பரவாயில்லை. இந்த ஜொள்ளுபாண்டி இருக்கானே அறிக்கை விடுடாண்னா கைப்பூவப் பத்தி ‘ கவிஜ ’ எழுதுராராம் கவிஜ. அதுலே ஒரு சீர் உண்டா? நிரை உண்டா ?

ஜொள்ளு பாண்டி : ( பொன்ஸை பயமாகப் பார்க்கிறார்.) பொன்ஸக்கா நான் சும்மாதான் ஏதோ தல மேல உள்ள பாசத்திலே …

பொன்ஸ் : பாசமாவது பாயாசமாவது. வெண்பான்னு வந்துட்டா பாசத்தையெல்லாம் ஓரங்கட்டி வச்சிடுவா இந்த பொன்ஸ். சங்க மக்கள் அனைவருக்கு ஒரு மாசம் வெண்பா crash course எடுக்கலாம்னு நான் முடிவு பண்ணி யிருக்கேன்.

இதைக்கேட்ட கைப்பு உட்பட அனைவரும் அதிர்ச்சியோடு கலவரமாக பார்க்கிறார்கள்.
உடனே கார்த்தி வெளியில் நின்று ஆதரவு தரும் பாலாவைப் பார்க்கிறார். சங்க உறுப்பினர் கண்களில் மரண பயம் தெரிகிறது. பாலா சமயோஜிதமாக கார்த்தியை வரவேற்க வாங்கி வைத்திருந்த அணுகுண்டை கொழுத்திப்போடுகிறார். இதுதான் சாக்கு என தேவ்

“அய்யய்யோ கட்டதொரை சங்கத்திலே ‘பாம்’ வைக்க பாக்குறான் எல்லாரும் ஓடுங்க!!! “ என கூவிக்கொண்டே பைக்ஸ் அண்ட் பேரஸ் இருக்கும் திசையில் ஓடுகிறார். தப்பித்தால் போதுமென சங்கத்தினர் தெரித்து ஓடுகின்றனர்.

.... இங்கே பதியப்பட்டது ஜொள்ளுப்பாண்டி | Leave a Comment »

சங்கமே முழங்கு !!

பதிந்தவர் vavaasangam மேல் மே 16, 2006

‘தல’ கொய்து விட்டார்கள்
பழி செய்துவிட்டார்கள்
சொன்னவர்கள் தலையினை
கொய்ய அரபிகடலோரமாய்
ஒய்யாரமாக வருகிறார்
எங்கள் தல கைபூ என
சங்கமே முழங்கு !!

அடைத்து வைத்துள்ளார்கள்
இவர்கள் ‘தல’யை வதைத்து
வைத்துள்ளார்கள்
சொன்னவர்கள் வாயில்
சிமெண்ட்டள்ளிப் போட்டு
அடைக்க வந்துவிட்டார்
எங்கள் ‘தல’ கைபூ என
சங்கமே முழங்கு !!

மல்கேட் என்ன ?
இந்தியாகேட் என்ன ?
எங்கு செல்லினும்
தொடைதட்டி (யுடன்) செல்லும்
தொடை நடுங்கா சிங்கம்
எங்கள் தங்கம் கைபூ என
சங்கமே முழங்கு !!

.... இங்கே பதியப்பட்டது ஜொள்ளுப்பாண்டி | Leave a Comment »