வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்

100% சிரிக்க

‘கொங்கு ராசா’ பகுப்புக்கான தொகுப்பு

மனோகரா

பதிந்தவர் vavaasangam மேல் ஆகஸ்ட் 23, 2006

திருக்குரல்’ன்னா பி.சுசீலா, எஸ்.ஜானகி குரல் மாதிரி ஸ்வீட்டா இருக்குமா….?

நடந்து முடிஞ்ச கல்யாணத்துக்கு இப்ப ஏன்ன் சார்ர்ர் மோளம் அடிக்கர்ரீங்க…?

ஞானப்பழம் சாப்பிட்டா, ஞானம் வரும்ன்னா, புளியம்பழம் சாப்பிட்ட புளி வருமா..?

திருக்குரளை எழுதினது யாரு?
நம்ம பெயிண்டர் மணி சார்..

ட்ரெயினுக்கு நேரமாச்சு நான் கிளம்பரேன்..
ட்ரெயினுக்கு நேரமானா, ட்ரெயின் தான கிளம்பனும், நீ ஏன் போற..?

ஈ.பி.கோ.. ஈ.பி.கோ’ன்னு சொல்றீங்களே, அங்கயும் வசந்த் அன் கோ’வில கிடைக்கிற மாதிரி டீ.வி, ப்ரிட்ஜ் எல்ல்லாம் கிடைக்குமா..?

இந்த மாதிரி எல்லாம் பேசுனா அப்புறம் நான் பெனால்ட்டீ குடுத்திடுவேன்..
குடுங்க குடுங்க.. அப்படியே கொஞ்சம் சக்கரை ஜாஸ்த்தியா போட்டு குடுங்க..

நரசிம்மாவா? அது ப்ரிபெயிட் சிம்மா இல்லை போஸ்ட் பெயிட் சிம்மா??

கவிதை எழுத தெரியாது, சாக்ஸஃபோன் வாசிக்க தெரியாது, உனக்கு என்னதான் தெரியும்?
தூர இருக்கிற நிலாவை தெரியும், கண்ணை கட்டி விட்டாலும் கரெக்ட்டா வைன்ஷாப் போக தெரியும்.. அப்புறம்… உங்க அப்பா வச்சிருக்கிற ஆன்ட்டிய தெரியும்.

ஹெலிகாப்டர்க்கு ஏன் வெளியில ஃபேன் வச்சிருக்காங்க, உள்ளார வச்சிருந்தா குளு குளுன்னு போலாமில்ல..

டேய் தல’க்கு ஒரு டீ போடு
தலைக்கு ஷாம்பூ தான போடுவாங்க, நீ எதுக்கு டீ போட சொல்ற?

டேய் டைம் என்னாச்சு?
உன்கையில தான் வாட்ச் கட்டியிருக்கில்ல
அது ஓடலை, அதான் உன்னை கேக்குறேன்..
கட்டி வச்சா எப்படி ஓடும், அவுத்து வுடு அப்பத்தான் ஓடும்..

வண்டிய ஏன் தள்ளிட்டு வர்ற, என்ன பிரச்சனை?
காத்து இல்லை..
அந்த ஆலமரத்துக்கு கீழ போயி நில்லு, அங்க நல்ல்லா காத்து வரும்

படிச்ச பொண்ணா இருந்துட்டு அய்யோ அய்யோ’ன்னு கத்துறா..
ஏன் படிச்ச பொண்ணா இருந்து அழகப்பா யூனிவர்சிட்டி, அண்ணாமலை யூனிவர்சிட்டி’ன்னு தான் கத்தனுமா??

மேல இருக்கிற தெய்வீகவசனங்களோட சொந்தக்காரர்.. நம்ம கைப்புள்ள’க்கு அடுத்தாப்படியா, நம்மள அவரோட ஒவ்வொரு அசைவுக்கு சிரிக்க வைக்கிற கில்லாடி.. திருவாளர். ‘சொட்டை’மனோகர்..


விஜய் டீ.வி’யில லொல்லு சபா பார்க்கரீங்க இல்ல, முன்னயெல்லாம் புதங்கிழம ராத்திரி ஒம்போதுமணிக்குங்கோ’ன்னு சொல்லிட்டிருந்தாங்க இப்ப அது வெள்ளிக்கிழம ராத்திரி ஒம்போது மணிக்குங்கோ’வா மாறியிருக்கு…

இணையத்துல லொல்லுசபா

கவுண்டர் பத்தி ஒரு ஒன்லைனர் பதிவு போட்டது நல்லாயிருக்குன்னு சொன்னீங்களா.. அதுதான் மறுபடியும் அதே மாதிரி பதிவு.. ஹி..ஹீ.

.... இங்கே பதியப்பட்டது கொங்கு ராசா | 14 மறுமொழிகள் »

ஒன் – லைனர்ஸ்

பதிந்தவர் vavaasangam மேல் ஆகஸ்ட் 16, 2006

நம்ம கூட்டாளிக ஒரு இடத்துல கூட்டமா சேர்ந்தா அந்த இடத்துல கேட்க கிடைக்கிற சில ‘ஒன்-லைனர்’கள இங்க உங்களுக்காக தொகுத்து குடுத்திருக்கேன்.. நீங்களும் படிச்சு (நினைச்சு) ரசிங்க.

ஹ.. ஹா. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா

(வாட் டூ யூ வான்ட் சார்?)
பீஸ் ஆஃப் மைன்ட்..

டேய்.. வந்ததே ராங்கு, இதுல என்னடா சாங்கு..?

ஹூ ஈஸ் த்தட் ட்டிஸ்ட்டபன்ஸ்..?

என்னடா சிரிப்பு அது, கரடி கக்கூஸ் போற மாதிரி..?

உங்க தம்பி நல்லவ்ருங்கோ.. வல்லவருங்கோ. தங்கம்ங்கோ.. கோல்டுங்கோ.. டையமன்டுங்கோ..

போதும்டா சாமி.. ரீல் அந்து போச்சு..

ஹை.. எகுறுங்கோ.. ஆஹா எகுறுதுங்கோ.. மச்சானுக்கு எகுறுதுங்கோ..

ஓ.. இனி இதுல டான்ஸ் வேற ஆடசொல்லுவாங்க போல இருக்குதுப்பா..

இஸ்தலக்கடி லோலா சுந்தரி அஸ்தலக்கடி கோல கொப்புற கொய்யா

இதுக்கு பேரு தான் மேண்டில்.. இது தான் ப்பளீர்ர்னு எரியும்..

அண்ணன் நல்லவரு, வல்லவரு, பெண்ட் எடுக்கறதுல வல்லவரு

அண்டடாயர் கணக்கு பார்க்கரீங்க, டண்டடாயர்டண்டடாயர்ன்னு..

நாலு வூடு வாங்கி திங்கற நாயிக்கு, லொல்லப்பாரு,
எகத்தாளத்தப்பாரு,
பழமையப்பாரு,
வந்தன்னா குறுக்கெட்டி முதிச்சுபொடுவேன்

மாப்பி.. யூ கோ, ஐ கம்மிங்

மை நேம்? குண்டலகேசி, தேர்ட் ஸ்டான்டர்ட், அவ்வையார் ஆரம்ப்ப பாட சாலை..

அதாவது, கழுதை மேய்க்கிற பையனுக்கு இவ்வளவு அறிவான்னு எல்லாருக்கு பொறாமை
(அக்காங்ண்ணே)

கோழி குருடா இருந்தாலும், குழம்பு ருசியா இருக்குதாங்கிறது தான்டா நமக்கு முக்கியம்

டேய், பழம் பழுக்கலைன்னாலும் இந்த ஆல் இன் ஆல் அழகு ராஜா புகை போட்டு பழுக்க வைப்பான்டா

எங்களுக்கும் வெக்கம் வேலாயுதம், சூடு சூலாயுதம், மானம் மாரியாத்தா, எல்லாம் இருக்கு

இது உலக மகா நடிப்புடா சாமியோவ்..

அட்றா.. அட்றா.. அட்றா சக்கை

நோ’ப்பா. ப்ரூஸ்லீ மை ஃப்ரண்ட், அவர் டெத்துக்கு அப்புறம், எனக்கு இந்த கராத்தே எல்லாம் புடிக்கறதில்ல

காந்தகண்ணழகி.. தோ இங்க ப்பூசு, சைட்ல பூசு, பேக்..


ஸ்டார்ட்ட் மீசிக்..

சங்கூதுற வயசுல சங்ங்க்கீதா..

ரிஜக்ட்டட்..

இங்க சந்த்ரு சந்த்ரூன்னு ஒரு மானஸ்த்தன் இருந்தான்..

என்னை பார்த்து எப்படிர்றா அந்த கேள்விய கேட்ட..? ம்ம்.. என்னைய பார்த்து..?

முப்பது ருவா முழுசா குடுத்தா, நான் மூணு நாலு கண்ணு முழிச்சு வேலை செய்வன்டா

எட்டணா போட வக்கில்லாத நாயி.. லா பேசுது பாத்தியா

செய்யிறதயும் செஞ்சுட்டு, திருவிழாவுல காணாம போன புள்ள மாதிரி முழிக்கறதப்பாரு

டேய்.. நீ எந்தந்த நேரத்துல் எந்தஎந்த டைப்புல மூஞ்சிய மாத்துவேங்கிறதெல்லாம் எனக்கு தெரியும்டா

ஓ.. லுக் தேர்.. சவுத் இண்டியன் டயானா

குட்மார்னிங் ஆப்பீசர். ச்சரீங்க ஆப்பீசர்

யோவ் தாடி, முதல்ல வாயுல கைய விட்டு வாந்தி எடுய்யா, உன் தொல்லை தாங்க முடியல..

சாகும் போது கூட அடுத்தவனுக்கு தொந்திரவு குடுக்காம சாகமாட்டானுகப்பா இவனுக

அண்டப்புளுகு ஆகாச்ப்புளுகு கேள்விப்பட்டிருக்கேன்.. இது உலகமகாப்புளுகுடா சாமி

டேய், பொள்ளாச்சி சந்தையில, அத்தனை ஊர்கவுண்டனுகளுக்கும் டேக்கா குடுத்துட்டு, கலெக்டர் மச்சான்னு பொய் சொல்லி, கவர்மென்ட் கார்லயே மெட்ராஸ் வந்தவன்டா நான்.. எங்கிட்டயே உன் டகால்டி வேலைய காட்டுற பாத்தியா

நாட்டுல இந்த தொழிலதிபர்க தொந்திரவு தாங்க முடியலைடா சாமீ.. புண்ணாக்கு விக்கறவன், குண்டூசி விக்கவரவன் எல்லாம் தொழிலதிபர்ங்கிறானுக

மொத்தத்தையும் படிச்சதுக்கப்புறம் நம்ம கூட்டாளிகள பத்தி ஒரு தெளிவான அயிப்பராயத்துக்கு வந்திருப்பீங்கன்னு நம்பறேன்.. :)

(சும்மா ஒரு அவசர உப்புமா பதிவு.. கண்டுக்காதீங்க..)

.... இங்கே பதியப்பட்டது கொங்கு ராசா | 14 மறுமொழிகள் »

அட்லாஸ் வாலிபர் – ஒரு விளக்கம்

பதிந்தவர் vavaasangam மேல் ஆகஸ்ட் 7, 2006

நம்ம சக விவசாயி இளா நம்மள சங்கப்பணி ஆற்றிட வாங்கன்னு கூப்பிட்டப்ப இருந்து நம்ம மனசுல ஒரு சந்தேகம்ங்க.. ‘அட்லாஸ் வாலிபர்’ அட்லாஸ் வாலிபர்’ன்னு சொல்றாங்களே அப்படின்னா என்ன?
வாத்தியார் நடிச்ச உலகம் சுற்றும் வாலிபன் தெரியும், வைஜெய்ந்திமாலா நடிச்ச வஞ்சிக் கோட்டை வாலிபன் தெரியும், நம்ம ‘சிங்கம் பெத்த புள்ளை’ மனோஜ் நடிக்கிறதா இருந்த வாலிபன் கூட தெரியும், இவுங்கென்னமோ புதுசா அட்லாஸ் வாலிபர்’ங்கிறாங்க, எதாவது வாலிபவயோதிக அன்பர்கள் மாதிரி சமாச்சாராமான்னு கொஞ்சம் டர்ரியலா இருந்துச்சுங்க. சொன்னவுடனே மிதப்பா சரின்னு சொல்லியாச்சு, இப்ப மறுபடி போயி, ‘அட்லாஸ்’ன்னா என்னன்னு கேட்டு ‘அட்லாஸ்ட்’ல இவன் அவ்ளோதானான்னு நம்மள பத்தி தப்பா நினைச்சுட்டாங்கன்னு என்ன செய்யிறதுன்னு கம்முன்னு அமைதியா இருந்துட்டனுங்க. நம்மளா எதுக்கு போயி வாயகுடுத்து வாங்கிகட்டிகிட்டு, அப்புறம் நம்ம மனவிகாரத்தை நாலு பேரு தெரிஞ்சுகிட்டு, தேவைங்களா அதெல்லாம்? அதுனால தாங்க, நிறையா நேரத்துல நாம அமைதியா இருந்துட்டம்ன்னா நம்மள மெத்த படிச்ச அறிவாளிக, ஆழ்சிந்தனை கூட்டத்தை சேர்ந்தவங்கன்னு அடுத்தவங்க முடிவு பண்ணிக்குவாங்க, நாமளா போயி ‘ஐயம் குண்டலகேசி, தேர்ட் ஸ்டான்டார்ட், அவ்வையார் ஆரம்ப பாடசாலை’ங்கிற ரேஞ்சுல எதயாவது பேசி, ‘நம்ம மேதாவிதனத்தை காட்டி திருவாத்தானாகறத விட அமைதியா இருக்கிறது மேல்ன்னு, நான் அடிக்கடி இந்த மாதிரி அமைதியா இருந்திடறதுங்க.. (அப்படி இருந்தும் யாரும் நம்மள அறிவாளின்னு ஒத்துகலைங்கிறது வேற விசயம் :( )

நமக்கு தெரிஞ்சு, நாலாப்பு படிக்கும் போது பள்ளிக்கூடத்துல தினமும் அட்லாஸ் பார்த்து நாலு இடத்தை தெரிஞ்சுகிட்டா அறிவுவிருத்தியாகும்னு கார்த்திகா மிஸ் சொன்னாங்கன்னு, எங்கய்யன் கிட்ட சொல்லி கடைவீதி நாகமாணிக்கஞ்செட்டியார் கடையில வாங்கன TTK அட்லாஸ் தான் ஞாபகத்துக்கு வந்துச்சுங்க.. கலர் கலரா குறுக்க கோடு போட்டு உலகத்தை முழுசா நான் பார்த்தது அதுல தாங்க், இன்னும் பத்திரமா வச்சிருக்கேன். ‘யாருய்யா அது அட்லாஸ் பார்த்து அறிவு வளந்துச்சான்னு எல்லாம் கேக்கிறது..?? எதோ அன்னைக்கு மிஸ் சொன்னாங்க வாங்கினோம், அவ்ளோ தான், அப்படி எல்லாம் அறிவு வளர்ந்திருந்தா இந்நேரம் நாம எப்படி இருந்திருப்போம். அந்த அட்லஸ வாங்கிட்டு பள்ளிகூடத்துக்கு போயி, பக்கத்து பெஞ்சு ‘திருப்பு’ நம்ம கிட்ட அதுல நைல் நதிய காட்ட சொல்லி நானும் அதைய அமேரிக்ககண்டம் பூராவும் தேடிப்பார்த்து கிடைக்காம, அப்படி ஒரு ஆறே இல்லைன்னு நம்ம கூட்டாளி ‘செந்தான்’ கூட சேர்ந்து அடிச்சு விட்டு, அப்புறம் ‘ஃப்ரான்சிஸ்’ அதைய ஆப்ரிக்காவுல கண்டுபுடிச்சு குடுத்து, ‘திருப்பு’கிட்டயும் அவ நட்புவட்டத்து கிட்டயும் நாங்க பட்ட அவமானம் எல்லாம்… ம்ம்.. அன்னைக்கு ஆரம்பிச்சதுங்க, நம்ம ஆப்பு வாங்க ஆரம்பிச்ச வரலாறு. இதெல்லாம் வாலிப வயசுல ஜகஜம் தான்னு வச்சுக்கோங்க, வாழ்க்கையில இப்படிப்பட்ட அவமானங்களை எல்லாம் சர்வ சாதரணமா கடந்து அதையே வெற்றிபடிகளாக்கி தாங்க இந்த நிலமைக்கு வந்திருக்கோம், சும்மா கிடையாது.. ஆமாம்..!

அதுவுமில்லாம் நமக்கு இந்த வரலாறு தான் இஷ்டமான பாடம்ங்க, செத்தவன் கதை கேக்கிறதுல அவ்வளவு சந்தோஷம் நமக்கு, இந்தபூகோளம் அவ்வளவா புடிக்காதுங்க, சிவிக்ஸ் கூட எப்படியோ இந்த ‘preamble’ வச்சே ஓட்டிட்டோம். பூகோளத்துல சும்மாவாச்சும் எதாவது ஒரு மேப்பை குடுத்து, மலை காடு ஆறு ஊருன்னு எல்லாம் எங்கிருக்குன்னு குறிக்க சொல்லி படாத பாடு படுத்துவாங்க, தப்பா குறிச்சு வச்சா தங்கவேலு சார் வேற ஒவ்வொரு தப்புக்கும் திரும்பி நிக்க வச்சு பிரம்புல ஒரு அடி போடுவாரு… ம்ம் அதுக்காகவே பேண்ட்டுக்குள்ளார எக்ஸ்ட்ராவா ஒரு டவுசர் போட்டுட்டு வருவானுக நம்ம பசங்க. நம்ம கூட்டாளிகளுக்கு அதெல்லாம் அவ்வளவு வேக்யானம். நானா..? நானெதுக்குங்க அப்படி எல்லாம் செய்யிறேன்.. ‘பழம் பழுக்காட்டியும் இந்த ஆல் இன் ஆல் அழகுராஜா புகை போட்டு பழுக்க வப்பானுங்க’, யூ நோ தி மேட்டர், உங்களுக்கு மட்டும் சொல்றேன், ரகசியமா வச்சுக்கோங்க, நமக்கு முன்னாடி உக்காந்து பரிட்ச்சை எழுதுன ‘பார்த்தி’ தான் பூகோளத்துல பிச்சு உதறுவானே, அப்படி ஒருத்தன் முன்னாடி பெஞ்சுல உக்காந்து பரிட்ச்சை எழுதும் போது, நாம தப்பு பண்ணுவமா என்ன? ‘பள்ளிக்கூடம் முச்சூடும் இப்படியேதான் படிச்சியா?’ ‘பரிட்ச்சைக்கு போகும் போது ‘பார்த்து எழுது தம்பி’ன்னு எங்கம்மா சொல்லிவிடுவாங்க, நாமெல்லாம் தாய் சொல்லை தட்டாம வளர்ந்த புள்ளையாச்சுங்களா, அதான் அப்படியே லேசா..என்னங்க, பப்ளிக்ல இப்படி சின்ன புள்ளத்தனமா எல்லாம் கேள்விகேட்டுட்டு, உங்களோடு ஒரே ரவுசுங்க.. அதெல்லாம் நான் தனியா வச்சுக்கலாம்.

ஆஹா, வழக்கம் போல அட்லாஸ் வாலிபர் பத்தி ஆரம்பிச்சு எங்கயோ போயிட்டேன், இது ஒரு கெட்ட பழக்கம்ங்க எனக்கு..
ஒரு வேளை அட்லாஸ் வாலிபர்ன்னா நாலாப்பு படிச்சப்போ நடந்த மாதிரி தினமும் நாலு இடத்தை தெரிஞ்சு அதை பத்தி எழுதனமோன்னு நினைச்சனுங்க.. சரி அப்படியே பொள்ளாச்சி டவுன்ல ஆரம்பிச்சு மாக்கினாம்பட்டி, ஊஞ்ச்வேலாம்பட்டி, திப்பம்பட்டி, கோலார்பட்டி, கோழிக்குட்டை, ஆனமலை, சேத்துமடை, ஒடையகுளம், ஊத்துகுளி, காளியாபுரம், சமத்தூர், கோட்டூர், ஆழியார், கிணத்துகிடவு, தாமரைக்குளம், புரவிபாளையம், நல்லூர், நெகமம்ன்னு நம்ம ஊரை சுத்தி இருக்கிற 225 கிராமங்களையும் பத்தியும் பூகோள குறிப்புகளா எழுதிடுவோம்ன்னு கொஞ்சம் தயாரா இருந்தனுங்க.. தினம் ஒரு ஊரை பத்தி எழுதினாலும் அட்லாஸ் வாலிபரா ஒரு வருஷம் ஓட்டிலாம்னு நொம்ப சந்தோசத்துல இருந்தனுங்க. அப்படி நம்மள சந்தோஷமா இருக்க விட்டிருவாங்களா என்ன..?

அப்பத்தான் முன்னாடி சங்கத்துல இலவசகொத்தனாரை வரவேற்க்க போட்ட பதிவுல இந்த படத்தை பார்த்தனுங்க, அப்பத்தான் நமக்கு லேசா விவரம் புரிஞ்சுதுங்க.. அட்லாஸ் வாலிபர்ன்னா இந்த பூகோளபாடத்துல வர்ற அட்லாஸ் கிடையாதுங்களாம், இது வேறயாம்..

இந்த மாசத்துக்கு வருத்தப்படாத வாலிப சங்கத்துக்கு வர்ற ஆளுக கொண்டார ஆப்பையெல்லாம் சிரிச்ச மாதிரியே வாங்கிகிட்டு சங்கத்தை என் தோள்மேல தூக்கி வச்சி அப்படியே சப்ஜாடா கலகலப்பா கொண்டுட்டு போற வேலையாம் இது.. சரி நமக்கு எப்பவுமே பொறுப்புகளை சுமக்கிறதுன்னா ரொம்ப சந்தோஷமான விசயமாச்சே.. நமக்கு இதெல்லாம் சாதரணம் பாருங்க..
ஹூ ஈஸ் தட்ட் ட்டிஸ்ட்டர்பன்ஸ்..?? யாருய்யா அது ‘வேற வேலை வெட்டி ஒன்னும் இல்லாட்டி இப்படித்தான்’னு எல்லாம் சவுண்ட் விடுறது.. அப்படி எல்லாம் ஒன்னும் கிடையாது.. சூரியன்ல தலைவர் ‘பன்னிக்குட்டி ராமசாமி’ சொல்ற மாதிரி ‘நான் ஒர்ர்ரே ப்பிஸி செட்டியார் மதர்’.

ஆக மொத்தம் அட்லாஸ் வாலிபருக்கு அர்த்தத்தை அட்லாஸ்ட் கண்டுபுடிச்சாச்சுங்க.. இதை பத்தி விளக்கமா சொல்றதுக்கு கோணார் தமிழ் உரை எல்லாம் போட முடியாதுங்களே, அதுனால நானே சொல்லிடறனுங்க. நெத்தியில அடிச்சாப்புல ஒரே வரியில பளிச்சுன்னு சொல்லனும்ன்னா “தூக்கி தோள்ல போட்டுட்டு நிக்கிற ஆளு தான் அட்லாஸ் வாலிபர்”.. இது தாங்க விளக்கம்.

எப்படியாவது ஒரு மாசத்துக்கு தூக்கி தோள்ல வச்சுகனும் அவ்ளோதாங்க..:)

சரி, இப்பத்தான் என்ன விசயம்னு தெரிஞ்சிருச்சு இல்லை, இனி மேல் தெம்பா தோள்ல தூக்கி வச்சுக்கறேன். சரீங்களா?

(இப்படியே பில்டப் குடுத்துட்டே போனா எப்படி, ஏற்க்கனவே ரெண்டு மூணு நாளாச்சு, எப்பத்தான்டா உருப்படியா ஒரு பதிவு போடுவேன்னு கேட்டீங்கன்னா, ஹி.. ஹீ.. அதுக்கு மேட்டர் இருந்தா நான் ஏங்க இப்படி உளரிகொட்டிட்டு இருக்கேன்.. இன்னும் இருவது இருவத்தஞ்சு நாள் இருக்குதில்லீங்க.. ஒரு கை பார்த்திருவோம்)

.... இங்கே பதியப்பட்டது கொங்கு ராசா | 33 மறுமொழிகள் »

வணக்கம்ங்க

பதிந்தவர் vavaasangam மேல் ஆகஸ்ட் 2, 2006

நான் பாட்டுக்கு காய்ச்ச வந்து செவனேன்னு படுத்து தூங்கிட்டு இருந்தனுங்க, திடீர்ன்னு தலகாணிக்கு பக்கத்துல அமைதியா உக்காந்திருந்த நம்மாளு ஒரே சினுங்கல், என்னடா செல்லம்னு எடுத்து பார்த்தா, நம்ம சக விவசாயி இளா. ‘நம்ம சங்கத்து பக்கம் வாங்க ராசா’ன்னு ஒரு கோரிக்கை வச்சாருங்க..
நம்ம தான் பொதுவாவே இந்த மாதிரி சங்கம் கட்சின்னு எல்லாம் சேர்ந்துகிறது இல்லைங்கலா, அதுனால நம்ம தலைவர் ராஜாதிராஜா’வுல பாடுற மாதிரி ‘ஒரு கட்சியும் வேண்டாம், ஒரு கொடியும் வேண்டாம், அட டாங்குடக்கரடக்கர..’ன்னு எட்டு கட்டையில ஆரம்பிச்சேன், ஆனா பாருங்க எதிர்தரப்புல் இருந்து ‘அடங்குடா டேய்’ங்கிற மாதிரி ஒரு அதட்டல்.. ‘உன்னைய யாருய்யா சங்கத்துல சேர சொன்னா’ன்னு நக்கலா ஒரு கேள்வி. ‘என்னைய வச்சு காமெடி கீமெடி பண்ணலையே’ன்னு ஒரு சந்தேகமா கேட்டா, ‘அதெல்லாம் சந்தேகமே படாத கண்ணு மாசாமாசம் ஒரு தீவட்டி தடியன கூட்டிட்டு வந்து நடுவால ஆட விட்டு, நாங்க ஆளாளுக்கு விதவிதமா ஆப்பு வைப்போம், அது தான் எங்க கொள்கை, இந்த மாசம் உன்னைய வச்சு விளையாடலாம்னு கூப்பிடறோம் அவ்ளோ தான்’ன்னு சீரியசா சொல்றாங்க..


இதெல்லாம் நமக்கு தேவையா, நம்ம பதிவுல எழுதறதுக்கே ஒரு சமாச்சாரமும் இல்லாம ஓனான் முட்ட வச்ச மேட்டுக்காடு கணக்கா வெறோச்சுன்னு கிடக்கு, இதுல துடிப்பா போயிட்டிருக்கிற சங்கத்துல எல்லாம் போயி நாம என்னத்தை எழுதறது, அதுவும் போன மாசம் பூராவும் நம்ம இலவசகொத்தனார் போட்டு கொத்தி எடுத்துட்டு போயிருக்காரு, இந்த நேரத்துல நாம எதுக்கு அங்க போயி, அதுவும் கை நிறையா ஆப்போட நிக்கற ஆளுக மத்தியில.. இதென்னடா இது சொந்த செலவுல சூனியம் வச்சுகிற கதையா இருக்குதுன்னு, நானும் பல மாதிரி உக்காந்து படுத்து நடந்துகிட்டே ரோசனை செஞ்சு பார்த்தனுங்க..

அப்புறம் கடைசியா ‘சரி, நமக்கு இந்த ஆப்பு வாங்கிறதெல்லாம் புதுசா என்ன. என்னதான் ஆகுதுன்னு பார்த்திருவோம்’ன்னு ஒத்துகிட்டு… இதோ.. உங்கமுன்னாடி, உங்க ஆப்புகளை எதிர்பார்த்து, இந்த மாசத்தின் பலிகடா’வாக அப்பாவி ‘கொங்கு ராசா’..

தயாரா இருங்க.. நெக்ஸ்ட் மீட் பண்ணவோம்..

.... இங்கே பதியப்பட்டது கொங்கு ராசா | 55 மறுமொழிகள் »