திருக்குரல்’ன்னா பி.சுசீலா, எஸ்.ஜானகி குரல் மாதிரி ஸ்வீட்டா இருக்குமா….?
—
நடந்து முடிஞ்ச கல்யாணத்துக்கு இப்ப ஏன்ன் சார்ர்ர் மோளம் அடிக்கர்ரீங்க…?
—
ஞானப்பழம் சாப்பிட்டா, ஞானம் வரும்ன்னா, புளியம்பழம் சாப்பிட்ட புளி வருமா..?
—
திருக்குரளை எழுதினது யாரு?
நம்ம பெயிண்டர் மணி சார்..
—
ட்ரெயினுக்கு நேரமாச்சு நான் கிளம்பரேன்..
ட்ரெயினுக்கு நேரமானா, ட்ரெயின் தான கிளம்பனும், நீ ஏன் போற..?
—
ஈ.பி.கோ.. ஈ.பி.கோ’ன்னு சொல்றீங்களே, அங்கயும் வசந்த் அன் கோ’வில கிடைக்கிற மாதிரி டீ.வி, ப்ரிட்ஜ் எல்ல்லாம் கிடைக்குமா..?
—
இந்த மாதிரி எல்லாம் பேசுனா அப்புறம் நான் பெனால்ட்டீ குடுத்திடுவேன்..
குடுங்க குடுங்க.. அப்படியே கொஞ்சம் சக்கரை ஜாஸ்த்தியா போட்டு குடுங்க..
—
நரசிம்மாவா? அது ப்ரிபெயிட் சிம்மா இல்லை போஸ்ட் பெயிட் சிம்மா??
—
கவிதை எழுத தெரியாது, சாக்ஸஃபோன் வாசிக்க தெரியாது, உனக்கு என்னதான் தெரியும்?
தூர இருக்கிற நிலாவை தெரியும், கண்ணை கட்டி விட்டாலும் கரெக்ட்டா வைன்ஷாப் போக தெரியும்.. அப்புறம்… உங்க அப்பா வச்சிருக்கிற ஆன்ட்டிய தெரியும்.
—
ஹெலிகாப்டர்க்கு ஏன் வெளியில ஃபேன் வச்சிருக்காங்க, உள்ளார வச்சிருந்தா குளு குளுன்னு போலாமில்ல..
—
டேய் தல’க்கு ஒரு டீ போடு
தலைக்கு ஷாம்பூ தான போடுவாங்க, நீ எதுக்கு டீ போட சொல்ற?
—
டேய் டைம் என்னாச்சு?
உன்கையில தான் வாட்ச் கட்டியிருக்கில்ல
அது ஓடலை, அதான் உன்னை கேக்குறேன்..
கட்டி வச்சா எப்படி ஓடும், அவுத்து வுடு அப்பத்தான் ஓடும்..
—
வண்டிய ஏன் தள்ளிட்டு வர்ற, என்ன பிரச்சனை?
காத்து இல்லை..
அந்த ஆலமரத்துக்கு கீழ போயி நில்லு, அங்க நல்ல்லா காத்து வரும்
—
படிச்ச பொண்ணா இருந்துட்டு அய்யோ அய்யோ’ன்னு கத்துறா..
ஏன் படிச்ச பொண்ணா இருந்து அழகப்பா யூனிவர்சிட்டி, அண்ணாமலை யூனிவர்சிட்டி’ன்னு தான் கத்தனுமா??
—
மேல இருக்கிற தெய்வீகவசனங்களோட சொந்தக்காரர்.. நம்ம கைப்புள்ள’க்கு அடுத்தாப்படியா, நம்மள அவரோட ஒவ்வொரு அசைவுக்கு சிரிக்க வைக்கிற கில்லாடி.. திருவாளர். ‘சொட்டை’மனோகர்..

விஜய் டீ.வி’யில லொல்லு சபா பார்க்கரீங்க இல்ல, முன்னயெல்லாம் புதங்கிழம ராத்திரி ஒம்போதுமணிக்குங்கோ’ன்னு சொல்லிட்டிருந்தாங்க இப்ப அது வெள்ளிக்கிழம ராத்திரி ஒம்போது மணிக்குங்கோ’வா மாறியிருக்கு…
இணையத்துல லொல்லுசபா
கவுண்டர் பத்தி ஒரு ஒன்லைனர் பதிவு போட்டது நல்லாயிருக்குன்னு சொன்னீங்களா.. அதுதான் மறுபடியும் அதே மாதிரி பதிவு.. ஹி..ஹீ.

