வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்

100% சிரிக்க

‘கைப்புள்ள’ பகுப்புக்கான தொகுப்பு

Alone… in a Woman’s World #2

பதிந்தவர் vavaasangam மேல் மார்ச் 2, 2007

Alone… in a Woman’s Worldடோடத் தொடர்ச்சி…

வழக்கம் போல பல பரிமாணங்கள்ல நடை பெற்றுக் கொண்டிருந்த அவங்களோட பேச்சு வார்த்தையின் நடுவுல ஒரு ஆண்ட்டி “அண்ணி! இந்த சூட் உங்களுக்கு ரொம்ப நல்லாருக்கு. கலர் அருமை. நேத்து சீரியல்ல சலோனி போட்டுக்கிட்டு வந்த சூட் கலர் மாதிரியே இருக்கு”ன்னு இந்தியில சொல்ல, நான் ஆர்வம் தாங்க மாட்டாம திரும்பிப் பார்க்க…

“இந்தப் பக்கம் என்னடா பார்வை? உன் வேலையைப் பாருடா”ன்னு ஒரு கத்து கத்திருந்தாங்கன்னாக் கூட ஒன்னும் இருந்திருக்காது.

ஆனா நான் திரும்பிப் பாத்ததை கவனிச்ச அந்த ஆண்ட்டிகள்ல ஒருத்தங்க ரொம்பப் பொறுமையாச் சிரிச்சிக்கிட்டே “நாங்க பேசறதெல்லாம் கேட்டா உங்களுக்கு ரொம்ப வித்தியாசமாவும் தமாஷாவும் இருக்குமில்ல?”ன்னு கேட்டாங்க. நான் எழுதிருக்கறதை படிக்கும் போது நக்கல் மாதிரி உங்களுக்குத் தோணலாம், ஆனா ரொம்ப ஃபிரெண்ட்லியாத் தான் கேட்டாங்க. ஒரு வேளை அவங்க பிரைவேட் பேச்சைக் கலைக்கற மாதிரி திரும்பிப் பாத்திருக்கக் கூடாதோன்னு தோணுச்சு. கொஞ்சம் சங்கடமாவும் போச்சு. அதுக்கு நான்”அப்படியெல்லாம் ஒன்னுமில்லீங்க”ன்னு சொல்லி வச்சேன். ஒரு அஞ்சு நிமிஷம் அமைதிக்கப்புறம், “பாலை கேஸ்ல வச்சிருந்தது, அதை நிறுத்த நேரம் ஆனது, அதனால ஜீப்பை வெயிட்டிங்ல வெச்சிருந்தது, பசங்க ஸ்கூல் ஆனுவல் டே, வீட்டுக்காரரோட வாக்கிங் போறது” இதப் பத்தியெல்லாம் பேச்சு ஸ்டார்ட் ஆனதும் தான் என் குற்ற உணர்வுக்கு விடுதலை கிடைச்சது. இதையெல்லாம் படிச்சிட்டு லேடீஸ் பேசறதை நான் ஒட்டுக் கேக்கறேன் அது இதுன்னு யாராச்சும் பின்னூட்டம் போட்டீங்க…முப்பது பின்னூட்டம் நாப்பது பின்னூட்டம்னு கூட பாக்க மாட்டேன்…மிகக் கொடூரமான முறையில் மட்டுறுத்திப்புடுவேன்னு இப்பவே சொல்லிக்கிறேன். ஜாக்கிரதை. ஏன்னா நான் எழுதறது எல்லாம் ஒரு வழிப்போக்கனா தற்செயலா என் காதுல வாங்குனது தான். என்னாது அது…ஆங்…லோன்லி டிராவலரு…அதுவா இருக்கும் போது.

ஃபாஸ்ட் ஃபார்வர்டு பண்ணி எதிர்காலத்துல கொசுவர்த்திய சுத்துனப்ப போன பதிவுல சொன்ன எழுதாத சட்டத்தை(cardinal rule) நான் உடைச்சது நெனவுக்கு வந்தது. ஆனா கடந்த காலத்துல வான்கோழி பிரியாணி தின்ன நான் போய்க்கிட்டிருக்கற ஷேர் ஆட்டோ பயணத்துல அடக்க ஒடுக்கமா நல்ல பையனாத் தான் இருந்தேன். என்ன தான் எதேச்சையா அந்த ஆண்ட்டியும் அக்காவும் பேசறது நம்ம காதுல வந்து விழுந்தாலும் ஒரு வேளை நாமப் பண்ணறதுக்குப் பேரு தான் ‘e(a)vesdropping’ஓ அப்படின்னு ஒரு சந்தேகம் வந்துடும். “சே! சே! நாம யாரு. ஒரு பெர்ஃபெக்ட் ஜெண்டில்மேன்? நாமளாவது? லேடீஸ் பேசறதைப் போய் ஒட்டுக்கேக்கறதாவது”ன்னு நியாபகப் படுத்திக்க அப்பப்போ கடல் அரிப்பைத் தடுக்க அரசாங்கத்துக்கு என்ன யோசனை குடுக்கலாம்னு ஒரு முன்னாள் சிவில் இஞ்சினியரா சிந்திக்க ஆரம்பிச்சிடுவேன், அந்த யோசனையெல்லாம் சேகரிச்சு முடிச்சதும் ரோட்டோரத்துல காயப் போட்டிருக்கற கருவாடு ஏன் இவ்வளோ நாத்தம் அடிக்குதுன்னு செந்தில் மாதிரி யோசிக்க ஆரம்பிப்பேன்.

ஆனா செந்திலா இருந்தாலும் சிவில் இஞ்சினியரா இருந்தாலும் Woman’s Worldஇல் ஒரு தனி பயணியா இருக்கற த்ரில் கிடைக்காதுப்பா. “பாப்பா! கப்பல் பாரு…கப்பல் பாரு” தூங்கிக்கிட்டிருக்க பாப்பாவை எழுப்பி காசிமேடு மீன்பிடி துறைமுகத்துல நின்னுட்டிருந்த கப்பலைக் காட்டறதுக்கு பாப்பாவோட கிராண்ட்மா(சும்மா ஆயான்னு சொல்லாம ஒரு சேஞ்சுக்கு கிராண்ட்மா) முயற்சி பண்ணாங்க. பாப்பாவுக்கு நல்ல தூக்கம் போல. லைட்டா கண்ணை முழிச்சிப் பாத்துட்டு, மறுபடியும் படக்குன்னு கண்ணை மூடி சடக்குன்னு என்மேல சாய்ஞ்சு தூங்க ஆரம்பிச்சிடுச்சு.

மறுபடியும் அவங்களோட கொஸ்டின் ஆன்ஸர் ஆரம்பம் ஆச்சு. அந்த 50+ ஆண்ட்டி கேள்வி கேக்கறதும், 30+ அக்கா பதில் சொல்றதுமான்னு இப்படியே போச்சு அவுங்க பேச்சு. இடையிடையில அவங்க கத்துக்கிட்ட விஷய ஞானத்தை எல்லாம் அந்த அக்காவுக்குப் போதிக்கறதுமே அவங்கக் குறிக்கோளா இருந்துச்சு. அவங்க எதோ பேசிக்கிட்டே இருக்கறதும், நான் ஆட்டோக்கு வெளியே வேடிக்கை பாக்கறதும், உள்ள அவங்க பேசறதைக் கேக்கறதுமா போய்க்கிட்டிருந்தது.

ஒரு வாட்டி நான் ஆட்டோக்கு வெளியே வேடிக்கை பாத்துட்டு திரும்பவும் உள்ள வரும் போது “நேத்து ராத்திரி வெங்காயம் பச்சை மிளகாய் போட்டுத் தாளிச்சு பருப்பு கடைசல் வச்சேன்மா. ரொம்ப நல்லாருந்தது. காலையில அதையே பழையதுக்கு போட்டுக்கிட்டு சாப்புட்டாரு” அப்படின்னாங்க ஆண்ட்டி.

“யாரு? உங்க வூட்டுக்காரரா?”ன்னு கேக்க ஆர்வமா இருந்தாலும்… கேக்கவா முடியும்? நான் வேற பெர்ஃபெக்ட் ஜெண்டில்மேன் ஆச்சே? ஆயிரம் தான் இருந்தாலும் அதை மறப்பேனா?

“நேத்து பூண்டு வெங்காயம் போட்டு ஒரு குழம்பு வச்சேன். பாப்பாவுக்கு மட்டும் தனியா பருப்பு வேக வச்சி சாதத்துல போட்டுப் பெசஞ்சு பன்னெண்டு மணிக்கெல்லாம் ஊட்டிட்டேன்”னு வாயால வலைக்குறிப்பு எழுத ஆரம்பிச்சிட்டாங்க அக்கா. அதுக்கப்புறமும் என்னென்னமோ பேசினாங்க…

துறைமுகத்துக்குள்ள நுழையறதுக்குத் தயாரா நின்னுட்டிருந்த பெரிய டிரெயிலர் லாரிகள் சாலையை அடைத்துக் கொண்டிருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஆகி ஆட்டோ ஒரு அஞ்சு நிமிசத்துக்கு ஊர்ந்து ஊர்ந்து நகர வேண்டியதாப் போச்சு. அந்த அஞ்சு நிமிசம் மட்டும் ஆட்டோவில் அமைதி நிலவியது.

நெரிசல் குறைஞ்சு ஷேர் ஆட்டோ வேகம் கூட்ட ஆரம்பிச்சதும் “ஏம்மா! கட்டை செவுத்துல பாப்பா ஜட்டியைக் காயப் போட்டிருந்தியே? எடுத்து உள்ள வச்சிட்டியா?”ன்னு ஆண்ட்டி அக்காவைக் கேட்க, “அதையெல்லாம் வர்றதுக்கு முன்னாடியே எடுத்து மடிச்சி வச்சிட்டேன்”னு பதில் வந்துச்சு.

குபீர்னு பீறிக்கிட்டு வந்த சிரிப்பை அடக்க நான் பட்ட கஷ்டம் எனக்குத் தான் தெரியும். ஆனா சிரிப்பை வரவழைத்த அந்த விஷயத்தை மீறி ஒரு விஷயம் யோசிக்க வைத்தது. என்ன தான் பசங்க உக்காந்துருக்காங்களேன்னு ஆட்டோவில ஏற யோசிச்சிருந்தாலும், அந்த பசங்க கவனிப்பாங்க அப்படிங்கறதை மீறி அவங்க பேசன விஷயங்கள்ல ஆதார ஸ்ருதியா இருந்தது ஒன்னு தான்…அது தன்னை சார்ந்தவர்கள் மீது அவர்கள் காட்டும் ‘அன்பு’. ஒரு சில்பான்ஸ் விஷயத்துக்கு இந்தளவுக்கு நான் பிலிம் காட்டறதாக் கூடத் தோணலாம். ஆனா எனக்கென்னமோ அவங்க ரெண்டு பேரையும் பாத்து ரொம்ப ஆச்சரியமா இருந்துச்சு. அதிகமாப் படிச்சிருக்கக் கூட மாட்டாங்க…ஆனா அந்த அரை மணி நேர நெருக்கத்துல எத்தனை விதமான விஷயங்களைப் பத்திப் பேசியிருப்பாங்க… அதுக்கெல்லாம் எவ்வளவு வேகமா யோசிச்சிருப்பாங்கன்னும் நெனச்சி பாக்கறேன். Everything for somebody else’s sake. பிரமிப்பாத் தான் இருக்கு.

அந்நேரம் பசங்க ஞாயித்துக் கெழமை ஒழுங்கா வேலை செய்யிறாங்களா இல்லை ஓபி அடிக்கிறாங்களான்னு தெரிஞ்சிக்கறதுக்காக எங்க பாஸ் என்னோட மொபைல்ல போன் பண்ணாரு. எல்லாம் நல்லபடியா ராயபுரம் கல்மண்டபத்தை நோக்கி பிரியாணிக்காகப் போய்க்கிட்டிருக்குன்னு தெரியப் படுத்திட்டு ராயபுரம் கல்மண்டபத்துல எறங்க ஆயத்தமாகிட்டு இருக்கும் போது “சோத்துக் கத்தாழையும் சீமை பொன்னாங்கண்ணியையும் ராத்திரி சட்டியில ஊறப்போட்டு வச்சிடு” அப்படின்னு எதோ பேசிட்டிருந்தாங்க. அடடா! எதோ அழகு குறிப்பு போலிருக்கே…இவுங்க சொல்லற சமாச்சாரத்தைத் தான் Aloe Veraன்னு சொல்லி லேக்மியும் கவின்கேரும் குப்பியில அடைச்சி விக்கிறானுங்கன்னு நெனச்சிக்கிட்டேன்.

நான் மட்டும் இருந்திருந்தா ஒரு வேளை ஆட்டோவுலேயே பீச் ஸ்டேஷன் போயிருப்பேனோ என்னவோ? ஆனா கூட வந்தவன் என்னைக் கொன்னு களையும்ங்கிறதுனாலயும் நான் ஒரு பெர்ஃபெக்ட் ஜெண்டில்மேன்னு நிலைநாட்ட வேண்டி இருந்ததுனாலயும் மயிலின் ஆட்டத்தை அறியா வான்கோழியின் சுவையைத் தெரிஞ்சிக்கிறதுக்காகவும் ஆட்டோவை விட்டு இறங்குனேன். எப்போதும் ஒரு பார்வையாளனாகவோ அல்லது ஒரு வழிப்போக்கனாகவோ மட்டுமே வாய்ப்புள்ள அந்த Woman’s Worldஇல் அன்றைய என் பயணமும் முடிவுக்கு வந்தது.

.... இங்கே பதியப்பட்டது கைப்புள்ள | 33 மறுமொழிகள் »

Alone…in a Woman’s World

பதிந்தவர் vavaasangam மேல் பெப்ரவரி 27, 2007

இல்லத்தரசிகளுக்குன்னு, தனியான சின்னஞ்சிறு உலகம் ஒன்னு இருக்குதுங்க. தன்னையும் தன் குடும்பத்தையும் தன் வீட்டைச் சுற்றியுள்ள ஒரு சிலரையும் தனது குடும்பத்தினரையும் கொண்ட ஒரு சின்னஞ்சிறு உலகம். (டிஸ்கி:இதெல்லாம் என் சிற்றறிவுக்கு எட்டிய வரை) அதில் நடக்கும் சிறு சிறு நிகழ்வுகள், அந்த உலகத்தில் அவர்களை ஒத்தவர்களுடன் அவர்கள் நடத்தும் உரையாடல்கள் இவை எல்லாம் இயந்திரமயமான இவ்வுலகில் பார்ப்பதற்கும், கேட்பதற்கும் சுவையாக இருக்கும். அவசரமாக எதையோ தேடிக் கொண்டு ஓடிக்கொண்டிருப்பது போன்ற நம் வாழ்க்கையில் ஒரு கணம் நின்று ஒரு ‘அட!’ போட வைக்கும், சில சமயம் ஒரு புன்னகையை உதிர்க்கச் செய்யும். “என்ன கார்த்திக்கம்மா பசங்க எல்லாம் ஸ்கூலுக்குப் போயிட்டாங்களா? சமையல் எல்லாம் ஆச்சா”ன்னு ஒரு இல்லத்தரசி கேட்டா நாமளா இருந்தா என்ன பதில் சொல்லுவோம்? ஆமா தெனமும் தான் பசங்க ஸ்கூலுக்குப் போறாங்க தினமும் தான் சமைக்கிறாங்க என்னமோ இந்தம்மா புதுசா வந்து கேக்குதேன்னு தானே நெனப்போம்? ஆனா இதுக்கு இன்னொரு இல்லத்தரசியோட பதில் “போய்ட்டாங்க பாலாஜியம்மா. இன்னிக்கு கத்திரிக்கா சாம்பாரும் வாழைக்கா பொடிமாஸும் சமையல். காய் அரிஞ்சு வச்சிட்டுத் துணி காயப் போடலாம்னு மாடிக்கு வந்தேன். குக்கர்ல இப்பத் தான் பருப்பு வேகுது”ன்னு வரும். அதோட “அவரு கூட மதியானம் சாப்புட வர மாட்டேன்னு சொல்லிட்டுப் போயிட்டாரு…ஒத்த ஆளுக்குச் சமைக்கனுமேன்னு இருக்கு. இந்தப் பசங்களுக்கும் ஸ்கூல்லேருந்து வந்து மதியானம் சாப்பிடும் போது காய்கறின்னா மட்டும் எறங்கவே எறங்காது”ன்னு ஒரு கொசுறு தகவலும் வரும். இந்த கேள்வியும் பதிலும் அந்த உலகில் தினமும் கேட்கப்படுபவை, தினமும் பதிலளிக்கப்படுபவை. அவர்களுக்குள் இவற்றைக் கேட்பதற்கும், பதிலளிப்பதற்கும் எப்போதும் அலுக்காதவை. அந்த ‘Woman’s World’இல் நடக்கும் இப்படிப் பட்ட நிகழ்வுகளை ஒரு வருத்தப்படாத வாலிபனாக, ஒரு ‘invisible entity’ ஆகத் தள்ளி நின்று அவர்களுக்கு இடையூறாக இல்லாமலும், அவர்களை சங்கடத்தில் ஆழ்த்தாமலும் ரசிப்பது ஒரு தனி ஜாலி தான்.

2005ல கிட்டத்தட்ட ஒரு நாலு மாசம்ங்க…சென்னையில் வீட்டுல [அதாவது அம்மா வீட்டுல :) ] தங்கியிருந்து வேலைக்குச் செல்லும் ஒரு அரிய வாய்ப்பு கிடைச்சது.தென் சென்னையிலிருந்து ஆபீஸ் இருக்கும் வடசென்னை வரை தினமும் ஊர்ப்பயணம் செஞ்சுக்கிட்டு வேலைக்குப் போயிட்டு வந்துட்டிருந்தேன். முந்தைய கம்பெனி ஒரு உற்பத்தி சார்ந்த தொழிற்சாலையாக இருந்ததால் வாரத்தில் ஆறு நாள் மட்டும் வேலை நாளாக இருக்கும். அப்படிப் பட்ட ஒரு கம்பெனியில், நீங்க ஐடி துறையில் இருந்தால், மற்ற ஐடி துறையினருக்கு இரண்டாவது விடுமுறை நாளாக இருக்கும் ஞாயிற்றுக் கிழமையும் உங்களுக்கு வேலை நாளாகும் பாக்கியமும் கிட்டலாம். அப்படித் தான் ஒரு வாட்டி, நம்ம கஸ்டடில இருந்த ஒரு அப்ளிகேஷனோட டேட்டாபேஸ் வெர்ஷன் அப்கிரேட் செய்ய வேண்டியிருந்ததுனால, ஞாயித்துக் கிழமையும் ஆபிசுக்குப் போக வேண்டியதாப் போச்சு. சிஸ்டம் அட்மினிஸ்டிரேட்டர் வெர்ஷனை அப்கிரேட் பண்ணிக்குவாரு, நான் திங்கக் கிழமை வந்து பாத்துக்கறேன்னு பாஸ்சு கிட்ட ஒரு பிட்டைப் போட்டுப் பாத்தேன், வர்க் அவுட் ஆகலை. “நான் ராத்திரி ஹார்டுவேர் வேலையெல்லாம் முடிச்சிட்டு காலாங்காத்தாலை சாஃப்ட்வேர் அப்கிரேட் பண்ணிடுவேன். நீ காலைல ஒரு பத்து மணிக்கு வந்தின்னா அப்ளிகேஷன் சரியா வேலை செய்யுதா இல்லையான்னு டெஸ்ட் பண்ணிட்டு பதினொன்னரை பன்னெண்டு மணிக்கு எல்லாம் திரும்பிப் போயிடலாம்”னு நம்ம அட்மிணிஸ்ட்ரேட்டன்(என்ன மரியாதை வேண்டி கெடக்கு?) சொன்னதை உண்மைன்னு நம்பி மாங்கு மாங்குன்னு பஸ்ஸைப் புடிச்சு ஆஃபிஸுக்குப் போனா, தரையில தினத்தந்தி பேப்பரை விரிச்சி போட்டுத் தூங்கிட்டு இருந்தான். ‘அட பாவி! ஞாயித்துக் கெழமைக்கு மொத்தமா சங்கு ஊதிட்டியேடா’ன்னு திட்டிக்கிட்டே அவனை எழுப்பி வேலையைத் தொடங்கும் போதே மணி பதினொன்னரை ஆயிடுச்சு.

“ஸ்க்ரிப்ட் ரன் பண்ணி வுட்டிருக்கேன். டேபிள், இண்டெக்ஸ் இதெல்லாம் க்ரியேட் ஆக இன்னும் இரண்டு மணி நேரம் ஆகும்”னு சொல்லும் போது “ஹையா! இவனோட சண்டேக்கும் சமாதி கட்டியாச்சு”ன்னு நெனைச்சு சந்தோஷமா சொல்லற மாதிரி இருந்துச்சு. சரி கெடக்குது கழுதைன்னுட்டு இன்னும் இரண்டு மணி நேரம் உக்காந்து ஸ்க்ரிப்ட் ஓடறதை சினிமா பாக்க வேணாம், அந்த நேரத்துல ஊட்டா மாடிட்டு வந்து வேலை பாக்கலாம்னு முடிவு பண்ணோம். எங்க ஆப்பீஸாண்டவே ஓட்டல் இருந்தாலும், “ஞாயித்துக் கெழமையும் அதுவுமா சாம்பார், ரசமா…நோ நெவர்”னு அட்மின் தடியன் அடம்புடிக்கவே ராயபுரம் கல்மண்டபத்துக்கு கிட்டே இருக்க ஹோட்டல் பாண்டியன்ஸ்ல சண்டே ஸ்பெசலான டர்ர்க்கி பிரியாணி சாப்பிடலாம்னு அஜாக்ஸ்லேருந்து ஷேர் ஆட்டோல பயணப் பட்டோம். சின்ன வயசுலேருந்து பழகிப் போன அல்ப புத்தியான ஜன்னலோர சீட்டுக்காக அவசர அவசரமா ஆட்டோல ஏறி உள்ளே குந்திக்கிட்டேன்.

வான்கோழியை ஊடகங்கள்ல பாத்துருந்தாலும்(அப்பா…ஊடகத்தையும் ப்ளாக்ல உபயோகிச்சாச்சு) ஒரு நாளும் சாப்பிட்டதில்லை. வான்கோழி பிரியாணி சாப்பிட போறோம்னு நெனச்சதும் காதல் பரிசு படத்துல வர்ற “வான்கோழி மயிலின் ஆட்டம் அறியுமா”ன்னு பாட்டு வரி நெனப்பு வந்து அந்த பாட்டையே முணுமுணுத்துக்கிட்டு இருந்தேன். மயிலின் ஆட்டத்தை அறியாத வான்கோழியை அன்னைக்கே பழி வாங்க மனம் வன்மம் கொண்டது.

ராஜா கடை வந்ததும், ஒரு அம்பது வயசு மதிக்கத் தக்க ஆண்ட்டியும் ஒரு ரெண்டரை வயசு மதிக்கத் தக்க பாப்பாவை இடுப்புல தூக்கி வச்சிட்டிருந்த ஒரு முப்பது வயசு மதிக்கத் தக்க அக்காவும் ஷேர் ஆட்டோவைக் கை காட்டி நிறுத்துனாங்க.

“பீச் டேஷன் போவுமா?” – இது அக்கா

“போவும்மா” – ஆட்டோகாரர்

“எவ்ளோ?”

“பதினைஞ்சு ரூபா”

“அஜாக்ஸ்லேருந்து தான் பதினைஞ்சு ரூபா. இங்கிருந்து பன்னெண்டு ரூபா தான்” – அக்கா கூட வந்த ஆண்ட்டி.

“சரி ஏறுங்க”

ஆட்டோக்கு உள்ளே ரெண்டு தடியனுங்க உக்காந்துருக்கறதை பாத்ததும் கொஞ்ச நேரம் தயங்கி நின்னாங்க. இருபத்தி நாலு ரூபா சவாரி கைவிட்டுப் போயிடுமோன்னு பயந்த ஆட்டோகாரர் அட்மினிஸ்டிரேட்டனைப் பாத்து “நீ இங்க முன்னாடி வந்துட்ணா” அப்படின்னவும், என் கூட வந்தவன் வேற வழியில்லாம ஷேர் ஆட்டோ டிரைவரோட சீட்டை ஷேர் பண்ணிக்கிட்டான்.

அப்படியும் அவங்க ரெண்டு பேரும் ஏறாம யோசிச்சி நின்னதைப் பாத்த டிரைவர் “நெறைய எடம் இருக்கும்மா…ஏறுங்க சீக்கிரம்”னு அவசரப்படுத்தவும் போனா போவுதுன்னு ஏறி உக்காந்தாங்க.

பாப்பாவை ஜன்னல் பக்கமா உக்காந்துருந்த என் பக்கத்துல உக்கார வச்சிட்டு, பாப்பா பக்கத்துல அவங்க ஆயாவும்(ஆயாவாத் தான் இருக்கணும்னு ஒரு யூகம்), அவங்க பக்கத்துல அவங்க டாக்டரும் உக்காந்துக்கிட்டாங்க(டாக்டர் இன் லாவாக் கூட இருக்க வாய்ப்பிருக்கு).

நியூட்ரல், ஃபர்ஸ்ட், செகண்ட், தர்டைத் தாண்டி ஆட்டோ ஃபோர்த் கியர்ல போறதுக்கு முன்னாடி “ஏம்மா…”ன்னு அக்கா கிட்ட பேச நம்ம ஆண்ட்டி.

என் பக்கத்துல உக்காந்துருந்த அந்த பாப்பா அப்பத் தான் வின்னர் படம் பாத்துட்டு வந்துருக்கும் போலிருக்கு. “ஏண்டா கைப்புள்ள இன்னும் முழிச்சிட்டிருக்கே”ன்னு சொல்ற மாதிரி பாப்பா என் கை மேலே சடக்குன்னு தலையைச் சாய்ச்சது, வெடுக்குன்னு கண்ணை மூடுச்சு, படக்குன்னு தூங்கிப் போச்சு. பரசுராமர் தூக்கத்தைக் கலைக்க விரும்பாத கர்ணன் மாதிரி பாப்பாவுக்குத் தலையணையா நான் ஆட்டோ ஓரத்துல உக்காந்துருந்தேன்.

“ஏம்மா…”னு ஆரம்பிச்சவங்க பாப்பா தூங்கறதைக் கூட கவனிக்காம பேச்சு சுவாரசியத்துல இருந்தாங்க.

“ஜோதி கிட்ட ஜல்லி கரண்டி குடுத்து வச்சிருந்தியே, வாங்கிட்டியா?”

“இல்லைம்மா”

“தீபாவளி நெருக்கத்துல நீயும் தானே பலகாரம் சுடணும்? உனக்கு வேணும்னு அவ நெனைக்க மாட்டாளா?”

“இன்னிக்கே கேட்டு வாங்கிடறேன்”

“நீ தான் இதுல எல்லாம் கரிட்டா இருக்கணும். இன்னும் நாலு நாள் தான் இருக்கு. இன்னும் மிச்சர் போடணும், லட்டு புடிக்கணும்…எவ்வளவு வேலை இருக்கு? ஒனக்குக் கூடமாட வேலை செய்ய ஆளா இருக்கு? நீ தனியாத் தானே செய்யணும்?”

“ஹ்ம்ம்ம்….”

“சூட்டைத் தாங்கிக்கிட்டு லட்டைப் புடிக்கறதுக்கும் எவ்வளோ நேரம் ஆகும். கொஞ்ச கொஞ்சமாப் புடிச்சாத் தானே முடியும்?”

“ஆமாமா…அது சரி தான். இல்லையா பின்ன?” – நியாயமான வாதத்தைக் கேட்டு மனசுக்குள்ளே தீர்ப்பு சொன்னது நானு.

எப்பவும் தண்டையார்பேட்டை வழியா பீச் ஸ்டேஷன் போற ஆட்டோ, ராஜா கடை கிட்டவே சவாரி கெடைச்சதும் டோல்கேட் டிப்போ கிட்ட திரும்பி கடலோரமா எண்ணூர் எக்ஸ்பிரஸ்வேல போக ஆரம்பிச்சது. மழை பெய்ஞ்சு குண்டும் குழியுமா இருந்த ரோட்டைப் பாத்து ஓட்டற கவனத்துல ஆட்டோ டிரைவரும், சின்ன சீட்டுல இடம் பத்தாம ஒட்டுல உக்காந்து வந்துட்டுருந்த நம்ம சகாவும் ரொம்ப அமைதியா வந்தாங்க. பாப்பாவுக்குத் தலையணையான நான் ஆட்டோவின் பின் சீட்டில் Woman’s Worldஇல் ஒரு lone traveller ஆக உக்காந்துருந்தேன்.

எப்பவாச்சும் இந்த மாதிரி lone travellerஆக நேரும் போது கடைப்பிடிக்க வேண்டிய எழுதாத சட்டம்(cardinal rule) ஒன்னு இருக்கு. அது “பொறுமையிலும் பொறுமை”, “அமைதியிலும் அமைதி” காப்பது என்பது தான். நாம மைனாரிட்டியா இருக்கும் போது சுதந்திரமாப் பேசுவதற்கும் சிந்திப்பதற்கும் முழு உரிமை அவங்களுக்குத் தான் இருக்கு. அந்த நேரத்துல அவங்களைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்தாமல் இருப்பது நல்லது.

இப்படித் தான் போன ப்ராஜெக்டில சித்தூர்கட்ல இருக்கும் போது நாங்க தங்கியிருந்த டவுன்ஷிப்பிலிருந்து ஃபேக்டரிக்கு ஜீப்புல போயிட்டு இருக்கும் போது எதோ பூமி பூஜைன்னு ஸ்டாஃப் குவார்டர்ஸ்லே இருந்த ரெண்டு மூனு இந்திக் கார ஆண்ட்டிங்க ஏறிக்கிட்டாங்க.

வழக்கம் போல பல பரிமாணங்கள்ல நடை பெற்றுக் கொண்டிருந்த அவங்களோட பேச்சு வார்த்தையின் நடுவுல ஒரு ஆண்ட்டி “அண்ணி! இந்த சூட் உங்களுக்கு ரொம்ப நல்லாருக்கு. கலர் அருமை. நேத்து சீரியல்ல சலோனி போட்டுக்கிட்டு வந்த சூட் கலர் மாதிரியே இருக்கு”ன்னு இந்தியில சொல்ல, நான் ஆர்வம் தாங்க மாட்டாம திரும்பிப் பார்க்க…

வெயிட்டீஸ் வுட்டுக்கறேன்பா…ப்ளீஸ்…ப்ளீஸ்…இப்ப மணி பன்னெண்டு ஆகுது… ரொம்ப தூக்கம் வருது.

Woman’s Worldஇல் நம்ம பயணம் இன்னும் ஒரு எபிசோட் தொடரும்.

.... இங்கே பதியப்பட்டது கைப்புள்ள | 27 மறுமொழிகள் »

சிவாஜி மகராஜா ரிஸ்க் எடுக்கமாட்டார்…

பதிந்தவர் vavaasangam மேல் நவம்பர் 20, 2006

உலகெங்கிலும் இருக்கும் சோமபானப் பிரியர்களே! பெக் அடிச்சா கிக்கு வரும்னு தீர்த்தம் சாப்பிடாதவங்களுக்கும் தெரியும். இருந்தாலும் சரக்கு உள்ளே போனதுக்கு அப்புறம் என்னவெல்லாம் நடக்கும், என்னவெல்லாம் எப்படியெல்லாம் தெரியும்னு ஒரு புண்ணியவான் எழுதி வச்சிருக்காரு. இக்கட கொஞ்சம் ச்சூடண்டி…

மராட்டிய நண்பர் ஒருவர் அறிமுகப் படுத்திய ஆங்கில மொழிபெயர்ப்பு கவிதை கீழே. யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

Peg after Peg
I never take risk while drinking
When I come from office in the evening, wife is cooking
I can hear the noise of utensils in the kitchen
I stealthily enter the house

Take out the bottle from my black cupboard
Shivaji Maharaj is looking at me from the photo frame
But still no one is aware of it
Becoz I never take a risk

I take out the glass from the rack above the old sink
Quickly enjoy one peg
Wash the glass and again keep it on the rack
Of course I also keep the bottle inside my cupboard
Shivaji Maharaj is giving a smile

I peep into the kitchen
Wife is cutting potatoes
No one is aware of what I did
Becoz I never take a risk

I: Any news on Chopra’s daughter’s marriage
Wife: Nope, she doesn’t seem to be that lucky. Still they are looking out for her

I again come out; there is a small noise of the black cupboard
But I don’t make any sound while taking out the bottle
I take out the glass from the old rack above sink
Quickly enjoy one peg

Wash the bottle and keep it in the sink
Also keep the Black Glass in the cupboard
But still no one is aware of what I did
Becoz I never take a risk

I: But still I think chopra’s daughter’s age is not that much
Wife: What are you saying? She is 28 yrs old… like an aged horse
I: (I forgot her age is 28) Oh Oh…

I again take out potatoes out from my black cupboard
But the cupboard’s place has automatically changed
I take out the bottle from the rack and quickly enjoy one peg in the sink

Shivaji Maharaj laughs loudly
I keep the rack in the potatoes and wash Shivaji Maharaj’s photo and keep it in the black cupboard

Wife is keeping the sink on the stove
But still no one is aware of what I did
Becoz I never take a risk

I: (getting angry) you call Mr. chopra a horse? If you say that again, I will cut your tongue…!
Wife: Don’t just blabber something, go out and sit quietly…

I take out the bottle from the potatoes
Go in the black cupboard and enjoy a peg
Wash the sink and keep it over the rack
Wife is giving a smile

Shivaji Maharaj is still cooking
But still no one is aware of what I did
Becoz I never take a risk

I: (laughing) So Chopra is marrying a horse!!
Wife: Hey go and sprinkle some water on your face…

I again go to the kitchen, and quietly sit on the rack
Stove is also on the rack
There is a small noise of bottles from the room outside

I peep and see that wife is enjoying a peg in the sink
But none of the horses are aware of what I did
Becoz Shivaji Maharaj never takes a risk

Chopra is still cooking
And I am looking at my wife from the photo and laughing
Becoz I never take what???

மராட்டிய மூலக் கவிதையை மராட்டிய மொழியில் படிக்கனும்னா(!!???) இங்கு சுட்டுங்கள். சரி…இதை அப்படியே தமிழ்ல நம்மால பேக்க முடியமான்னு பாத்தேன். உஹும்…ஒன்னும் முடியலை. LOL, ROTFL சமாச்சாரத்தை எல்லாம் கெடுத்த பாவம் நமக்கெதுக்குன்னு அப்படியே இங்லிபீசுலேயே போட்டுட்டேன்.

.... இங்கே பதியப்பட்டது கைப்புள்ள | 37 மறுமொழிகள் »

தீவாளி கொண்டாடுங்க மக்கா

பதிந்தவர் vavaasangam மேல் அக்டோபர் 19, 2006

அருமை நண்பர்களே, சக வருத்தப்படாத வாலிபர்களே, வாலிபிகளே! ஒங்க அல்லாப்பேத்துக்கும் நன்றி. எதுக்கா? இதை படிக்கப் போறீங்கல்ல…அதுக்கு தான். இன்னும் ரெண்டு நாளுலே தீவாளிய்யா. முன்னாடி சின்னபிள்ளலே ஆசை ஆசையா இருக்கும் , அய் திவாளி வந்திருச்சு புதுச்சட்டை , பட்டாசு கிடைக்கும்னு. இப்பவும் தீவாளின்னதும் அதே சந்தோஷம் வந்து ஒவ்வொருத்தரையும் தொத்திக்கத் தான் செய்யிது. நமக்கெல்லாம் பலபேத்துக்கு வெடி வெடிக்கிறேன்னு சொல்லி வீரசாகசங்கள் எல்லாம் பண்ணி அது கைகாலிலே வெடிச்சு வைச்சு விழுபுண்ணுக வாங்கிருப்பீங்க. அது கடைசிலே தீவாளியைப் புண்வாளியா ஆக்கி வைச்சிருக்கும். அணுகுண்டு, சரவெடி, லட்சுமி வெடி, யானை வெடி, குதிரை வெடின்னு வெடியெல்லாம் வெடிக்க விட்டு தெரு,வீதியெல்லாம் குப்பையாக்கி காது கேட்காத பெருசுக காதிலே கூட ரத்தம் வர்ற அளவுக்கு சத்தமான வெடியெல்லாம் வெடிச்சு சரித்தர சாதனைகளும் நடத்திருக்கும். அதுதான் நானும் சொல்லவர்றேன், வெடி வெடிக்கிறது சுற்றுபுறச்சூழலுக்கு ஏத்தது இல்லன்னோ இல்லே வெடிக்க பயந்தோ அதை வாங்காம வெடிக்காம இருந்துராதீங்க அப்போய்.

வெடிக்கிறேன்னு சொல்லிப்பிட்டு கையிலே தூக்கிபோடுறேன் , காலால் ஏத்தி விளையாடிருன்னு சொல்லி விளையாட்டெல்லாம் பண்ணபிடாது. அப்புறம் பர்னால்லும், தேங்கண்ணே, ப்ளூ மையின்னு கையெல்லாம் ஊத்திக்கிட்டு திரியணும்.அப்புறம் இந்த 102 கீயையும் தட்டமுடியாது, ஓரமா கெடக்கிற எலியேயும் புடிச்சு ஆட்டமுடியாது. மொத்ததிலே இப்போ மாதிரி வேலை பார்க்கிறமாதிரி நடிக்க முடியாது. ஏதோ உங்க சத்துக்கு தக்கமாதிரி நாலஞ்சு பட்டாசு டப்பாவை வாங்குங்க, அடுத்தவங்களுக்கு தொல்லை குடுக்காத சத்தம் கம்மியா குடுக்கற பட்டாசைக் கொளுத்தி கொண்டாடுங்க. கீழே படத்துல இருக்கற மாதிரி பட்டாசெல்லாம் ரத்தத்தைக் கண்டு அஞ்சாத என்னைய மாதிரி வீரனுங்க தான் கொளுத்த முடியும். அதெல்லாம் நீங்க யாரும் முயற்சி பண்ணி பாக்காதீங்க.

நீங்கெல்லாம் வெடிக்கல்னன்னா பரவாயில்லே! ஏதோ உங்க ஏரியாக்குள்ளே இருக்கிற ஏழை குழந்தைகளுக்குக் கொடுங்க. நீங்கெல்லாம் பட்டாசு வாங்கலைன்னா அந்த பட்டாசு தொழிற்சாலை மொதலாளிக்கு கொஞ்சம் தான் நஷ்டம் ஆனா தொழிலாளிக்கு வருசம் பூராவும் கூலி நஷ்டமப்பா. நம்மால ஆனா உதவியா பட்டாசு செய்யிற தொழிலாளிக்கும் உதவி பண்ணின மாதிரி இருக்குமில்லே . அப்புறம் கொஞ்சூண்டு காசை உங்க ஏரியா பக்கத்திலே இருக்கிற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கும்,அனாதை ஆசிரம பிள்ளைகளும் கொடுங்கப்பா. இந்த உலகமே நம்மோட அன்பபை மையப் புள்ளியா வச்சு சுத்துற வட்டமின்னு சொல்லீருக்காங்க பெரியவங்க! நம்ம அப்பனும் மக்கா சுப்பனும் சொன்னது தப்பா போகுதில்லே? ஏதோ எனக்குத் தெரிஞ்சதே சொல்லிருக்கேன். நீங்க அதுக்காக பீலீங் ஆப் கேலக்ஸில்லாம் ஆவ வேணாம். அதுதான் வேலை பார்க்காட்டியும் வேலை பார்க்கிற மாதிரியே நடிச்சு பேரு வாங்குற ஒரு வருத்தப்படாத வாலிபனுக்கு ஏத்த ஜைனடிக்கப்போய்!

தீவாளிக்கு ரெண்டு நா கழிச்சு ரம்சான் வேற வருது. தீவாளி அன்னிக்கு மட்டும் ஒரு பத்து இட்லி கறிகொழம்போ, பருப்பு சாம்பாரோ ஊத்தி சாப்பிட்டு பிட்டு அப்புறம் சுட்டு வைச்சிருக்கே பலகாரமெல்லாம் தின்னு முடிச்சு மறுநா நல்லா தீவாளி லேகியத்தே வாங்கி ஒரு உருண்டை வகுத்துக்குள்ளே திணிச்சிருங்க . ஹி ஹி அப்போதான் பிரியாணி புல்கட்டு கட்டமுடியும்.

(இப்பதிவின் உருவாக்கத்துக்கு உதவி செய்த அருமை தம்பி மதுரை வீரன் “ராயல் ராம்“சாமிக்குச் சங்கம் தன் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது)

.... இங்கே பதியப்பட்டது கைப்புள்ள | 91 மறுமொழிகள் »

பயில்வான் வர்றாரு…

பதிந்தவர் vavaasangam மேல் செப்டம்பர் 29, 2006

ஒத்துங்கப்பா ஒத்துங்கப்பா… பயில்வான் வர்றாருபா. அக்டோபர் மாச அட்லாஸ் வாலிபரா வருத்தப்படாத வாலிபர் சங்கத்தைச் சொமக்கறதுக்கு பயில்வான் வர்றாருபா. தமிழ் பளாக்கோட ‘முடி’சூடா கிங், சூப்பர் ஹெவிவெயிட் சாம்பியன்பா நம்ம பயில்வான். அவரைப் பத்தி நாங்கோ சொல்லி நீங்கத் தெரிஞ்சிக்கறதுக்கு ஒன்னுமில்ல. அல்லாருக்கும் அவரைப் பத்தித் தெரியும். எதோ நம்ம பேட்டைக்குள்ள அவரு வர ஒத்துக்குனதே நாம செஞ்ச பாக்கியம் தான். பயில்வான் சார்…அப்ப்டியே நம்ம பசங்களுக்கும் கொஞ்சம் வித்தை எல்லாம் கத்துக் குடுத்துட்டு போ சார் இன்னா?

இப்ப வாங்கய்யா…ஒவ்வொருத்தரா வாங்கய்யா…லைன்ல வரிசையா வாங்கையா. தெகிரியம் இருந்தா எங்க பயில்வான் மேலே கையை வெச்சுப் பாருங்கையா. வாங்கையா…யாருக்குன்னா இருக்கா அம்புட்டு தில்லு? கையைக் கண்டி இந்தப் பதிவுல தெரியாத் தனமா வெச்சேன்னு வை…மூஞ்சு மொகரை எகிறுற லெவலுக்கு அடுத்த பதிவுல கிச்சு கிச்சு மூட்டிவிட்டுருவாரு ஆமா… இப்பவே சொல்லிட்டேன். அட! அப்படியும் நம்பிக்கை வரலியா? சேப்பாக்கம் கிரவுண்ட் மாதிரி இருக்குற அந்த பரந்து விரிஞ்ச அவரு ஜெஸ்டை பாருங்கைய்யா…பனை மரத்தை ஒத்தைக் கையாலப் புடுங்கி வீசற அந்த பராக்கிரமம் பொருந்துன சோல்டரைப் பாருங்கைய்யா…’நேர் கோடு’ எடுத்து படிய சீவிக்கின்னு பால் வடியற பச்சைப் புள்ள மாதிரி ஃபேஸ்கட்ல இருக்காரேன்னு தப்புக்கணக்கு போட்டுறாதே நயினா… அப்பால பெஜாராயிடுவே இன்னா?

சட்டியா இருக்கட்டும், பல்பா இருக்கட்டும், ரசப்பொடியா இருக்கட்டும் அட லண்டனாவே கூட இருக்கட்டும்பா…நம்ம பைல்வான் அண்த்தை கையில எது கடைச்சிதுன்னாலும் வுயுந்து வுயுந்து சிரிக்கற மாதிரி ஹெவிவெயிட் காமெடி பண்ணுவாருபா. அப்படிப்பட்ட ஒரு கொயந்தை மனசு. சரி…இப்ப நான் வேற இன்னாத்துக்கு குறுக்கால நந்தி மாதிரி… எல்லாம் ஒரு தரம் ஜோரா கை தட்டுங்கப்பா… நீங்க அடிக்கிற பிகிலுல மவனே காது கிழியனும்…ஏன்னா அக்டோபர் மாசம் அட்லாஸ் வாலிபரா வரப் போறவரு ஹெவிவெயிட் பயில்வான்…”யோசிக்கிற பீரங்கி”….அண்ணாத்தே ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டூ…

.... இங்கே பதியப்பட்டது கைப்புள்ள | 13 மறுமொழிகள் »

சங்கத்து ஆல்பம் – 2

பதிந்தவர் vavaasangam மேல் செப்டம்பர் 22, 2006

மக்கள் எல்லாம் வாரக் கடைசியிலே சிரிச்சுகிட்டே சந்தோஷமா வீட்டுக்குப் போகணும்ங்கற ஒரே நோக்கத்தோட தல கைப்புள்ளயே களத்திலே இறங்கி ஆல்பத்தின் அடுத்த பகுதியையும் பிரின்T போட்டு ரிலீஸ்க்கு ரெடி பண்ணிட்டார்.

“இந்தாப் பேச்சு பேச்சாத் தான் இருக்கணும் சொல்லிட்டேன்.. நீயும் உள்ளே வரப்பிடாது.. நானும் வெளியே வர மாட்டேன்.. உன்னிய நெக்ஸ்ட் மீட் பண்றேன்.. அது வரைக்கும் என் சங்கத்து ஆள் உங்கூடப் பேசிகிட்டு இருப்பான்… வர்றட்டா”
” ஏய் நாங்க எல்லாம் கருஞ்சிறுத்த அப்பூ பறக்கிற பிளைட் ஓடுற பஸ்ன்னு எதில்லயுமே கம்பியைப் பிடிக்காம கையைப் புறம்பாக் கட்டிகிட்டு கச்சிதமா நிப்போம்ல்ல.. ப்பூ பேன் காத்துக்கெல்லாம் பயந்துருவோமா என்ன? கப்பித் தனமாக் கரண்டை வேஸ்ட் பண்ணாம பேனை ஆப் பண்ணுங்கடா”

“கௌரவ்ம் கௌரவம்ன்னு சொல்லி இப்படிக் கூட்டிட்டு வந்து கும்மி அடிச்சு என் கௌரவத்தை நாறடிச்சு இப்படி ஒரு ஓரத்துல்ல உக்கார வச்சுட்டீங்களேடா”

இங்கேப் பார்டா… என்னிய மாதிரியே எவ்வளவு அலகா இருக்கான்… போட்டாவை சங்கத்துக்கு நடுவுல்ல மாட்டி வைங்கடா

மக்களே இப்போ சந்தோஷ்மா வீட்டுக்குப் போங்க … ENJOY MAADI

.... இங்கே பதியப்பட்டது கைப்புள்ள | 10 மறுமொழிகள் »

ச்சிரிப்பு வருது…ச்சிரிப்பு வருது…

பதிந்தவர் vavaasangam மேல் செப்டம்பர் 5, 2006

சர்தார்ஜி ஜோக்குகளைப் பத்தி நம்மள்ல பலரும் கேள்வி பட்டிருப்போம். சர்தார்ஜிகளோட “அறிவுத் திறமையைப்” பாராட்டி நெறைய ஜோக்குங்க இண்டர்நெட்லயும், மின்னஞ்சல்ல பார்வர்டுகளாவும் நாம படிச்சிருப்போம். அப்படி பட்ட சில சர்தார்ஜி ஜோக்குகள் உங்கள் பார்வைக்கு…

சந்தா சிங் என்கிற சர்தார்ஜி. தன் வாழ்க்கையில முதல் முறையா விமானத்துல ஏறுறாரு. விமானத்துல ஏறுனதும் விமானப் பணிப்பெண் சொல்றாங்க இந்த விமானம் ஒரு போயிங் விமானம்னு. முதல்முறையா விமானத்தைப் பாத்த சந்தோஷத்துல சந்தாசிங் “போயிங்! போயிங்! போயிங்!”னு கத்தி குதிச்சு ஆர்ப்பாட்டம் பண்ண ஆரம்பிக்கிறாரு. இவுரு கத்துற கத்து விமானம் ஓட்டிட்டு இருக்குற பைலட் காது வரைக்கும் போயிடுது. அவரு கோவமா வெளியே வந்து “பீ சைலண்ட்” அப்படிங்குறாரு. ஒடனே சர்தார்ஜி கத்துறாரு “ஓயிங்! ஓயிங்! ஓயிங்!”

ஒரு சர்தார்ஜி ஒரு நாளேடு ஆசிரியரா வேலை செஞ்சிட்டு இருக்காரு. ஒரு முறை, ரயில்வே துறையில் என்னென்ன மேம்பாடுகள் செய்யலாம்ங்கிற தலைப்புல ஆலோசனைகள் சொல்றதுக்காக, ரயில்ல மும்பை போயிட்டிருக்காரு. அவரோட பெட்டி ரயில்வண்டியின் கடைசிப் பெட்டி. கடைசிப் பெட்டிங்கிறதுனால ஆட்டம் ரொம்ப அதிகமா இருக்கு…அதோட தூக்கி தூக்கி போடுது. ரொம்ப கடுப்பாகிப் போன சர்தார்ஜி மும்பை போனதும் ரயில்வே துறையினருக்கு கொடுத்த ஒரே ஆலோசனை “எந்த ஒரு ரயில் வண்டியிலயும் கடைசி பெட்டியே இருக்கக் கூடாது”

சர்தார்ஜி ஒரு பார்ட்டிக்குப் போறாரு. அங்க அவரோட நண்பர் ஒருத்தர், நம்ம பார்த்திபன் மாதிரி போட்டு வாங்குற டைப்பு. “எல்லாரும் உங்களை முட்டாள்னு சொல்றாங்களே, நீங்க முட்டாளா இல்லையான்னு தெரிஞ்சிக்க ஒரு கேள்வி கேக்குறேன் அதுக்கு நீங்க சரியான பதில் சொல்லனும்” அப்படிங்கறாரு. சர்தார்ஜியும் “கேள்வி எல்லாம் எனக்கு தண்ணி பட்ட பாடு…கேளுப்பா” அப்படிங்கிறாரு. ஒடனே நம்ம பார்த்திப நண்பரும்”வெறும் வயித்துல ஒங்களால எத்தனை சப்பாத்தி சாப்புட முடியும்?”அப்படின்னு ஒரு கேள்வி கேக்கறாரு. சர்தார்ஜி சொல்றாரு “ஏழு”ன்னு. இதை கேட்ட அவரோட ஃபிரண்டு சொல்றாராம் “ஏம்ப்பா மொத சப்பாத்தியைச் சாப்புட்டதும் உங்க வயிறு எப்படி வெறும் வயிறா இருக்க முடியும்? வெறும் வயித்துல ஒங்களால எப்படிப்பா ஏழு சப்பாத்தி சாப்புட முடியும்?”னு கேள்வி கேட்டு கலாய்க்கிறாரு. பல்பு வாங்குனாலும், சர்தார்ஜி “சே! பாயிண்டா தாம்யா சொல்லிருக்கான். இது நமக்குத் தோணாமப் போச்சே?. பரவால்லை… நாமளும் இதே மாதிரி யாரையாச்சும் கேள்வி கேட்டு கலாய்க்கனும்”னு முடிவு பண்ணறாரு. வீட்டுக்குப் போன முதல் வேலையா சர்தார்ஜி அவர் மனைவி கிட்ட அதே கேள்வியைக் கேக்குறாரு “உன்னால வெறும் வயித்துல எத்தனை சப்பாத்தி சாப்புட முடியும்?” அதுக்கு அந்தம்மா சொல்லுது “அஞ்சு”. இதை கேட்ட சர்தார்ஜி “சே…ஜஸ்ட் மிஸ்ஸு! நீ மட்டும் ஏழுன்னு பதில் சொல்லிருந்தேன்னு வை உன்னை செமத்தியா கலாய்ச்சிருப்பேன்” அப்படின்னாராம்.

ஒரு சர்தார்ஜி ஓட்டலுக்கு சாப்புட போனாராம். சாப்புட்டு முடிச்சிட்டு கை கழுவுற எடத்துல கையைக் கழுவாம வாஷ் பேசினைக் கழுவ ஆரம்பிச்சிட்டாராம். ஓட்டல் முதலாளி ஓடி வந்து “சர்தார்ஜி! சர்தார்ஜி! எதுக்குங்க வாஷ் பேசினைக் கழுவிட்டு இருக்கீங்க” அப்படின்னு கேட்டாராம். அதுக்கு சர்தார்ஜி பதில் சொன்னாராம் “என்னை என்ன கேணைன்னு நெனச்சியா…நீ தானேய்யா இந்த எடத்துல “வாஷ் பேசின்”னு எழுதி போர்டு மாட்டி வச்சிருக்கே?” அப்படின்னாராம்.

ரெண்டு சர்தார்ஜிகள் ஒரு பரிசோதனைக் கூடத்து வாசல்ல உக்காந்திருக்காங்க. அதுல ஒரு சர்தார்ஜி அழுதுட்டு இருக்காராம். ரெண்டாவது சர்தார்ஜி அதப் பாத்து “ஏம்பா அழுவுறே” அப்படின்னாராம். அதுக்கு முதல் சர்தார்ஜி சொன்னாராம் “நான் பிள்ட் டெஸ்டுக்காக வந்தேன். ரத்தம் எடுக்கறதுக்காக விரல் நுனியை லேசாக் கீறுனாங்க. பயங்கரமா வலிக்குது அதான் அழுவுறேன்” அப்படின்னாராம். இதை கேட்ட ரெண்டாவது சர்தார்ஜி “ஓ”ன்னு சத்தம் போட்டு அழ ஆரம்பிச்சிட்டாராம். முதலாமவரு கேக்கறாரு”நீ ஏம்பா இப்பிடி அழுவுறே?” அதுக்கு ரெண்டாவது சர்தார்ஜி “நீயாச்சும் பிளட் டெஸ்டுக்குத் தான் வந்தே…நான் யூரின் டெஸ்டுக்கு வந்துருக்கேன்பா”ன்னாராம்.

ஒரு சர்தார்ஜி உப்பு வித்துட்டு இருக்காரு. உப்பு வாங்க வந்த ஒருத்தரு “ஏங்க சர்தார்ஜி! ஆயிரக் கணக்குல உப்பு மூட்டை அடுக்கி வச்சிருக்கு. இத்தனையையும் நீங்க ஒரு மாசத்துல வித்துருவீங்களா?”அப்படின்னு ஒரு சந்தேகத்துல கேட்டாராம். அதுக்கு சர்தார்ஜி சொன்னாரம் “அட போப்பா! ஒரு மாசத்துல ரெண்டு மூட்டை தாம்பா விப்பேன். நான் ஒன்னும் அவ்வளவு நல்ல வியாபாரி இல்ல”. இதுக்கு வந்தவரும் கொழப்பமாகி “அப்புறம் எதுக்குங்க இத்தனை மூட்டை குமிச்சி வச்சிருக்கீங்க”ன்னாராம். அதுக்கு சர்தார்ஜி சொன்னாராம் “என்னப்பா பண்றது? எனக்கு விக்கிறவன் ஒரு நல்ல வியாபாரியாச்சே?”

ரெண்டு சர்தார்ஜி மாணவர்கள் அமெரிக்க விண்வெளி வீரர்களைப் பத்திப் பேசிட்டு இருந்தாங்களாம். ஒருத்தரு சொன்னாராம்”என்னய்யா நெலாவுல எறங்குறது என்ன பெரிய விஷயமா…அமெரிக்கா காரன் பெருசா என்னத்த சாதிச்சிட்டான்? நாம சர்தார்ஜிக்கள். நாம நேரடியா சூரியன்ல போய் எறங்குவோம்”அப்படின்னாராம். அதுக்கு ரெண்டாவது சர்தார்ஜி சொன்னாராம்”சூரியன்லேருந்து 13மில்லியன் மைல் தொலைவுல இருக்கும் போதே நாம பொசுங்கிடுவோம்”அப்படின்னாராம். அதுக்கு மொதல் சர்தார்ஜி “இருந்துட்டு போவுது…அதுக்கென்ன? நாம ராத்திரில போவோம்”அப்படின்னாராம்.

குர்பசன் சிங் அப்படிங்கிற சர்தார்ஜி பல்கலைக்கழகத் தேர்வு எழுதிட்டு இருந்தாராம். கேள்விகள் எல்லாமே ஆம்/இல்லைன்னு பதில் சொல்ற ரகம். பரிட்சை கூடத்துல நம்மாளு போய் ஒக்காருறாரு, அஞ்சு நிமிஷம் கேள்வித் தாளைப் பாக்குறாரு. அதுக்கப்புறம் ஒரு வேகம் வந்தவரா, தன்னோட பேண்ட் பாக்கெட்லருந்து ஒரு காசு எடுத்து சுண்டி போட்டு தலை விழுந்துதுன்னா ஆம்ன்னு பூ விழுந்ததுன்னா இல்லைன்னும் பதில் எழுத ஆரம்பிக்கிறாரு. அரை மணி நேரத்துல இந்த மாதிரி எல்லா கேள்விக்கும் பதில் சொல்லி முடிச்சிடறாரு. அதுக்கப்புறம் பாத்தா திடீர்னு டென்சன் ஆகிடறாரு. வேர்த்து விறுவிறுத்து போயிடறாரு. பரிட்சை ஹால்ல இருந்த வாத்தியாரு சர்தார்ஜி கிட்ட வந்து “என்னப்பா என்னாச்சு? ஏன் டென்சனா இருக்கே?”ன்னு கேட்டாராம். அதுக்கு சர்தார்ஜி சொல்றாராம்” சார்! நான் முதல் அரை மணி நேரத்துலயே பதில் எல்லாம் எழுதி முடிச்சிட்டேன்… ஆனா இப்ப எழுதுன பதில் எல்லாம் சரியான்னு அதே மாதிரி காசை சுண்டி போட்டு சரி பாத்துட்டு இருக்கேன்”

நாலு சர்தார்ஜிக்கள் ரயில்வே பிளாட்பாரத்துல “பஞ்சாப் மெயில்”ங்கிற வண்டிக்காகக் காத்துட்டிருகாங்க. அப்ப ரயில் காலதாமதமா ஓடிட்டு இருக்கு அது வர்ற இன்னும் ரெண்டு மணி நேரம் ஆகும்னு ஒரு அறிவிப்பு பண்ணறாங்க. அதான் இன்னும் ரெண்டு மணி நேரம் இருக்கே? வெளியிலே போய் எங்கேயாச்சும் சுத்திட்டு கொஞ்ச நேரம் கழிச்சு வரலாம்னு நாலு பேரும் கெளம்பி வெளியே போயிடறாங்க. அவங்க சுத்திட்டு திரும்பவும் ஸ்டேசனுக்கு வந்து பாத்தா பஞ்சாப் மெயில் வேகம் எடுத்து கெளம்பி போயிட்டு இருக்கு. நாலு பேருல ஒருத்தரு ஓடிப் போய் ஒரு பெட்டியில ஏறிக்கிறாரு. இன்னொருத்தரும் அதே மாதிரி தலை தெறிக்க ஓடி கடைசி பெட்டியில ஏறிக்கிறாரு. மத்த ரெண்டு பேரும் ஏற முடியாம நின்னுடறாங்க. குடுகுடுன்னு ஓடிப் போய் ஏறுன அந்த ரெண்டு பேரும் ரயில்வண்டிக்குள்ளேயே சந்திச்சிக்கிறாங்க. ஒருத்தரை ஒருத்தர் பாத்ததும் பயங்கரமா சிரிக்க ஆரம்பிச்சிடறாங்க. அப்ப அங்க பக்கத்துல இருந்தவரு”ஏங்க என்னாச்சு? ஏன் இப்படி சிரிக்கிறீங்க”ன்னு கேட்டாராம். அதுக்கு ஒரு சர்தார்ஜி சொன்ன பதில்”வழியனுப்ப வந்த நாங்க ரெண்டு பேருமே ஏறிட்டோம்…பஞ்சாப் மெயில் ஏறி ஊருக்குப் போக வேண்டிய ரெண்டு பேரும் கீழேயே நிக்கிறானுங்க”

கல்லூரியின் பெண்கள் அறையை மேம்படுத்த ஆலோசனைகள் வரவேற்கப் படுகின்றன என்ற அறிவிப்பை, அறிவிப்பு பலகையில பாத்துட்டு சர்தார்ஜி பயங்கரமா யோசிச்சு கொடுத்த ஒரு ஆலோசனை”ஆண்களுக்கும் உள்ளே வர அனுமதி கொடுக்கலாம்”

சந்தா சிங்கும் பந்தா சிங்கும் ஜென்ம விரோதிகள். சந்தா சிங் கட்டடத்தின் முதல் தளத்துல வசிக்கிறாரு, பந்தா சிங் ஏழாவது தளத்துல வசிக்கிறாரு. ஒரு நாள் கட்டடத்து லிப்ட்ல எதோ ஒரு கோளாறு ஆகிடுது. இது பழி வாங்க நல்ல சாக்குன்னு நெனச்ச பந்தா சிங், சந்தா சிங்கை அவங்க வீட்டுக்கு விருந்துக்குக் கூப்பிட்டாராம். சந்தா சிங்கும் லிப்ட் வேலை செய்யாததுனால ஏழு மாடி லொங்கு லொங்குன்னு மாடிப்படி ஏறி வந்தாராம். வந்து பாத்தா வீட்டுல ஒரு பெரிய பூட்டு தொங்குதாம். அதுக்குப் பக்கத்துலேயே ஒரு பேப்பர்ல “நல்லா ஏமாந்தியா? ஹா ஹாஹ்ஹா”ன்னு எழுதி இருந்துச்சாம். இதை பாத்த சந்தா சிங்குக்குக் கோவம் வருது, ஆனா அவரு மட்டும் சளைச்சவரா என்ன, அவரு அதே பேப்பர்ல எழுதி வச்சாராம் “நான் இங்கே வரவே இல்லியே!”

கடைசியா சமீபத்துல டிவியில பாத்த ஒரு காமெடி (witty answer). ஜானி லீவர்னு ஒரு இந்தி திரைப்பட நடிகர். செமத்தியான காமெடியன். முட்டைக் கண்ணை உருட்டி உருட்டி நடிக்கிறதும் பேசறதும் அவரு மிமிக்ரி பண்ணறதையும் பாத்தா பயங்கர காமெடியா இருக்கும். அவரோட “ஜானி ஆலா ரே”ங்கிற நிகழ்ச்சி ஒரு பிரபல இந்தி சேனல்ல வருது.

அந்த நிகழ்ச்சியில ஜானியை ஒரு பொண்ணு கேள்வி கேக்குது “ஏன் ஜானி சார்! உங்க காமெடியால பயங்கரமா மக்களை சிரிக்க வைக்கிறீங்க, உங்களைப் பாத்தாலே மக்கள் சந்தோஷமாயிடுறாங்க. நல்லா மிமிக்ரியும் பண்ணறீங்க. எப்படிங்க இப்பிடியெல்லாம்? எப்பிடி பண்ணறீங்க?” அதுக்கு முகத்தை அப்பாவியா வச்சிக்கிட்டு ஜானி சொன்ன பதில்”என்னம்மா பண்ணறது. எனக்கு ஒரு பொண்டாட்டி இருக்கு. ரெண்டு சின்ன குழந்தைங்க இருக்காங்க. அவுங்களுக்கு ரெண்டு வேளை கஞ்சி ஊத்தனும்னா(ரொட்டி) இந்த மாதிரி வேலையெல்லாம் பண்ணினா தான் உண்டு”

.... இங்கே பதியப்பட்டது கைப்புள்ள | 22 மறுமொழிகள் »

எருமை கன்னுக்குட்டி

பதிந்தவர் vavaasangam மேல் ஜூலை 1, 2006

கண்ணுங்களா! உங்கள்ல யார்னா ‘மந்திரி குமாரி’ படத்துல வர்ற ‘எருமை கன்னுக்குட்டி’ங்கிற பாட்டைக் கேட்டிருக்கீங்களா? முந்தா நேத்து காலைல எந்திரிச்சதுலேருந்து இந்த பாட்டு திடீர்னு உதட்டுல வந்து எக்கச்சக்கமா உக்காந்துக்குச்சு. எதனாலன்னு தெரியலை. ஆனா பாட்டோட முதல் வரியான ‘எருமை கன்னுக்குட்டி என்னெருமை கன்னுக்குட்டி’யைத் தவிர வேறு எதுவுமே நெனப்பு வரலைமா. என்ன தான் சொல்லு கண்ணு… எருமை கன்னுக்குட்டியும் பாக்கறதுக்கு அப்பாவியா க்யூட்டா சப்பியாத்(சரியா படிங்கய்யா – அது chubby) தான் இருக்கும். பசு கன்னுக்குட்டியைத் தூக்கி கொஞ்ச நம்ம பசுநேசன் உட்பட பல பேரு கெடச்ச மாதிரி, எருமை கன்னுக்குட்டிக்குன்னு யாரும் கெடக்கலை – இந்த பாட்டைப் படத்துல பாடிக்கிட்டு வர்ற அந்த சதரவட்டை பையனைத் தவிர. நான் கூட ரொம்ப நாளா ஒரு பெட் அனிமல்ஸ் வளக்கணுமின்னு ஆஸ் பட்டுக்குனுருக்கேன். பாப்போம். இந்த பாட்டைப் பாடுற வாய்ப்பு எனக்கு எப்பயாச்சும் வாய்க்குதான்னு பாப்போம்.

சில சமயம் இத மாதிரி எதாச்சும் பாட்டோட வரிகளோ, ஒரு படத்தோட பேரோ யோசிச்சி யோசிச்சி பார்த்தும், நெனப்புக்கு வராம ரெண்டு நாளைக்கு ஒரே மண்டை காய்ச்சலா இருக்கும். இருக்குற வேலையெல்லாம் போட்டுட்டு இதே வேலையாத் திரிய வைக்கும். நாம நெனச்ச விசயம், சம்மந்தமே இல்லாம வேற வேலையா இருக்கும் போது நியாபகம் வரும். ஆனா எருமை கன்னுக்குட்டி கேஸ்ல ரெண்டு நாளா முயற்சி பண்ணி பார்த்தும் தோல்வி தான். ரொம்ப கஷ்டப் பட்டு யோசிச்சதுல, படத்துல எம்.ஜி.ஆர் பேரு வீரமோகன்ங்கிறதும், ஆன்ட்டி-ஹீரோவா(Aunty இல்லப்பா) வர்றவரு பேரு எஸ்.ஏ.நடராஜன்ங்கிறதும், ஹீரோயின் பேரு மாதுரிதேவிங்கிறதும், ‘அரண்மனை நாயே அடக்கடா வாயை’ங்கிற கலைஞர் வசனமும், தீபன் சக்கரவர்த்தி அவுங்க நைனா திருச்சி லோகநாதன் பாடுற ‘வாராய் நீ வாராய்’ பாட்டுல வர்ற “முடிவில்லா மோனநிலையை நீ மலைமுடியில் காணுவாய் வாராய் வாராய்”ங்கிற வரியும், ‘வாத்தியார்’ அடிபட்டு கெடக்கும் போது ஜிம்மி மேலே ஒக்காந்துக்கிட்டு ஒரு ‘பியூட்டிஃபுல் பாய்’ எருமை கன்னுக்குட்டி…ன்னு பாடிக்கிட்டு வர்ற சிச்சுவேசனும் நியாபகம் வந்துச்சு.

ஆனா இதெல்லாம் நெனப்பு வந்து என்ன புண்ணியம்? ‘எருமை கன்னுக்குட்டி…’ பாட்டு மட்டும் தேய்ஞ்ச ரெக்கார்டு மாதிரி அதே எடத்துல நிக்குது. அதுக்கு மேலே ஒரு வார்த்தை கூட நெனப்பு வரலை. ஆகவே மகாஜனங்களே! இந்த பாட்டைக் கேட்டவங்களும் பாடல் வரிகள் தெரிஞ்சவங்களும் என் மண்டை காய்ச்சலுக்கு மருந்தாய் அவுங்கவுங்க எருமை கன்னுக்குட்டியைச் சங்கத்துப் பக்கம் மேய்ச்சலுக்கு ஓட்டிக்கிட்டு வாங்க.

அப்படி ஓட்டிக்கிட்டு வந்தீங்கன்னா இன்னிக்கில்லன்னாலும் என்னிக்காச்சும் ஒரு நாள், எளிய எருமை கன்றுகளும், அழகிய ஆர்மடில்லோக்களும், பிளிறும் யானை கன்றுகளும், கூவும் கூக்காபுர்ராக்களும் ஒரே தட்டில் ஒன்றாக, சப்பளங்கால் போட்டு சமத்தாச் சாப்புடும் காட்சியைக் காணும் அரிய வாய்ப்பைப் பெறலாம். அதுனால “எருமை கன்னுக்குட்டி என்னெருமை கன்னுக்குட்டி…”இதுக்கடுத்த வரி என்னான்னு சொல்லுங்க, ஒங்களுக்குப் புண்ணியமாப் போகும்.

(பி.கு : சொல்ல மறந்துட்டேனே! நம்ம ‘கன்னிவெடி’ சித்தர் பிரிகேடியர். நாகை சிவா வளர்க்கும் பெட் ஆர்மடில்லோவின்(Armadillo) பேரு டி.ஏ.மதுரம். காரணம் கேக்காதீங்க… சொல்லமாட்டேன்! யாரு கையிலயும் சொல்ல மாட்டேன்னு காட் ப்ராமிஸ் போட்டுருக்கேன். பி.பி.சியில் பிஸ்கோத்து சாப்பிட்டு சி.என்.என்னில் சைனா டீ குடிக்கும் சங்கத்தின் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் கீதா மேடத்தின் அன்பில் சங்கீத பயிற்சி பெறும் அந்த பேறு பெற்ற கூக்காபுர்ராவின்(Kookaburra)பேரு மகாலிங்கம்)

(ஐயோ! இன்னொரு பி.கு.வையும் மறந்துட்டேனே: “வீ வாண்ட் நாமக்கல்லார்”னு கோஷம் எழுப்பற தளபதி அவர்களின் பல நூறு கோடி ரசிகர்களுக்காக – இன்னிக்குக் காலையில சங்கத்துக்கு வந்த பேக்ஸ் செய்தி. அதுல “அருள்மிகு மலையாள பகவதி துணை. எண்டே ஒரே தலைவி கண்விண்மீனிற்கும் விரல்விளையாட்டு வித்தகருக்கும் தற்சமயம் சமாதானம் ஏற்படும் சூழல் நிலவிக் கொண்டிருப்பதால், அது ஏற்படாமல் தடுக்க தற்போது ரத, கஜப் படைகளையும் ஏவிப் பொருதிக் கொண்டிருக்கிறேன். இப்பணியைச் செவ்வனே முடித்துவிட்டு சங்கப் பணிகளை ஆற்ற இதோ வந்து கொண்டே இருக்கிறேன். இப்படிக்கு அ.உ.க.வி.மீ.ர.ம.தலைவர் சிபி ‘ஷாஜி’. ஆலப்புழா மாவட்டம்”ன்னு போட்டுருந்துச்சுப்பா.)

(சாரி…சாரி…லாஸ்ட்டா இன்னும் ஒரே ஒரு பி.கு: கூக்காபுர்ராவோட இனிஷியலைச் சொல்ல மறந்துட்டேன் – “டி.ஆர்”.)

இப்பாடலின் வரிகளை சிவஞானம்ஜி அவர்களின் “வ.வா.சங்கம் தேடும் பாடல்” எனும் பதிவில் காணலாம்.

.... இங்கே பதியப்பட்டது கைப்புள்ள | Leave a Comment »

‘கை’ திடீர் மாயம் – திடுக்கிடும் உண்மைகள்

பதிந்தவர் vavaasangam மேல் ஜூன் 21, 2006

‘நாம ரெண்டு பேரும் செத்துச் செத்து வெளாடலாமா” என்று பாசத்தோட கூப்பிட்டு என்னைய கதிகலங்கச் செய்யும் பாசத்தின் பிறப்பிடம், சங்கத்தின் உண்மைத் தொண்டன் – “கை” என்று அனைவராலும் அழைக்கப்படும் தேவ் ஆறு வருசம் லீவு சொல்லிட்டு திடீர்னு மாயமா மறைஞ்சு போனது நம்ம எல்லாத்துக்கும் தெரியும். ஆனா காணாமப் போனவரு எங்கே போனாரு என்ன ஆனாருன்னு யாராச்சும் நெனச்சுப் பாத்தீங்களாய்யா? அந்தப் பாசப்பிழம்பை நீங்கல்லாம் இம்புட்டு சீக்கிரம் மறந்திட்டீங்கன்னு நெனக்கும் போது தான் மேல்(Male இல்ல) எல்லாம் கொதிக்குதுய்யா.

இப்பச் சொல்றேன் கேட்டுக்கங்க. எம்புட்டுத் தான் தல தெருத் தெருவாத் திரிஞ்சு ஆப்பு வாங்கினாலும் ஒரு மனுசன் இல்லறத்துல வாங்குற “ஆப்பு” மாதிரி வராதுன்னு அனுபவத்துல பட்டு பட்டுத் தெரிஞ்சுக்கிட்ட தேவ் ஒரு மெகா ஆப்புக்கு மெகா ப்ளான் போட்டாப்புல. தலக்கு இல்லறத்துல ஆப்பு வாங்க வைக்க என்ன பண்ணலாம்னு பயங்கரமா யோசிச்சதுல கட்டத்துரை பார்த்திபன் சதியால கெழக்காப்பிரிக்காவுக்குத் திரும்பிப் போன தன்னோட உடன்பிறவா அண்ணி “கைப்பொண்ணு”வைத் திரும்ப சங்கத்து ஹெட்குவார்ட்டர்ஸ்க்கு கூட்டியாறது தான் இதுக்குச் சரியானத் தீர்வுன்னு முடிவுசெஞ்சாப்புல. ஆறு வருசம் லீவுன்னு ஒரு மெகா பீலாவை அவுத்துவிட்டுப் புட்டு சங்கத்து ஆளுங்களுக்கும் டன் கணக்குல அல்வாவைக் குடுத்துப்புட்டு யாருக்கும் தெரியாம “கைப்பொண்ணோட பொறந்த வீடான கெழக்காபிரிக்கா பஞ்சாயத்து யூனியனுக்குக் ராவோட ராவாக் கெளம்பிட்டாப்புல.

அங்கே போனா பட்டித் தொட்டியெல்லாம் கைப்பொண்ணு பேரு தானாம். அவுங்க நாட்டுலேயே கைப்பொண்ணு தான் செவத்தப்புள்ளங்கிறதால லோரியல் ஹேர் க்ரீம், லாங்கைன்ஸ் கைகடியாரம், கோகா கோலா இப்படின்னு இந்தியாவுல ‘அக்கா ஐஸ்” வர்ற வெளம்புரத்துக்கெல்லாம் புக் ஆயிட்டாங்கப் போல. எங்கே பாத்தாலும் கைப்பொண்ணோட போஸ்டரும் பேனரும் தானாம். ஏற்கனவே ‘மிஸ் கெலக்காப்பிரிக்கா’வா வேற தேர்ந்தெடுக்கப்பட்டுட்டாங்களாம். அடுத்ததா ‘மிஸ் ஆப்பிரிக்கா’ பட்டம் வாங்க பூனை நடை பழகிட்டு இருக்கும் போது தான் நம்ம தேவ் கைப்பொண்ணைப் பாத்துருக்காப்புல. “கண்டேன் கைப்புவை ஆப்பினுக் கணியாய்” அப்படின்னு கைப்பொண்ணுக் கிட்ட ‘சொல்லின் செல்வர்’ ஸ்டைல்ல சொல்லப் போன தேவைக் கைப்பொண்ணோட சித்தாப்புக்களல ஒருத்தரு பாத்துட்டாப்புல. பார்த்துட்டு சும்மா போயிருந்தா பரவால்லியே…அதுக்கப்புறம் நடந்ததை நெனச்சா தான் மறுபடியும் மேல் எல்லாம் பதறுது. எங்க நாட்டுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித் தர்ற எங்க “குடும்பத்து குலவிளக்கு” கைப்பொண்ணைக் கூட்டிட்டு போகவாடா வந்திருக்கே?”ன்னு ஒரு நாலு நாளு கட்டி வச்சி பேக்சைட்ல கழுதைப்புலியை வச்சி கடிக்க வச்சிருக்கானுங்க. அம்புட்டு வலியிலயும் ‘கை’க்கு சங்கத்து நெனப்பு தானாம்…ஐயோ தல இப்ப ஆப்பு இல்லாம் தவிச்சிட்டிருக்குமேன்னு ரொம்ப தவிச்சிப் போயிட்டாப்புலயாம். எப்படியோ அங்கேருந்து தப்பிச்சி யார் யார் கையைக் காலையெல்லாமோ புடிச்சி ஒரு வழியா எதோ ஒரு கடலோரப் பிரதேசத்துக்கு தேவ் வந்து சேர்ந்திருக்காப்புல.

எறங்குன எடத்துல கழுதைப்புலி கடிக்கு எச்சியைத் தொட்டுத் தொட்டு ஒத்தடம் குடுத்துக்கிட்டே மெல்ல நடந்து வந்தா சங்கத்து கீதமான “ஒன்றா ரெண்டா ஆப்புகள், எல்லாம் சொல்லவே ஓர் நாள் போதுமா”ங்கிற பாட்டை யாரோ ரெண்டு கட்டையில பாடுறதைக் கேட்டுருக்காப்புல. ஆஹா…நம்ம சங்கத்து சிங்கங்கள்ல யாரோ ஒருத்தரு இங்கே பக்கத்துல இருக்காருன்னு நம்ம தேவ் புரிஞ்சிக்கிட்டாப்புல. கட் பண்ணா அங்கேருந்து ஒரு நாலு கல்லு தூரத்துல நம்ம வெவசாயி இளா ‘கஜா கா தோஸ்த்’னு சொல்லி கள்ளத் தோணியில ஏறி கதாருக்குப் பதிலா கேரளால எறங்கி அங்கே வேஷ்டி கட்டுன அம்மணிங்களை லுக் விட்டுக்கிட்டே சங்க நாதத்தை மொழங்குன படியே போயிட்டிருக்காப்புல. மறுபடியும் கட் பண்ணா தேவ் சரி நாமும் சங்கத்துப் பாட்டைப் பாடினா அங்கிட்டுப் பாடுற சிங்கம் யார்னு கண்டுபிடிச்சிரலாம்னு இவரும் ஒரு நாலு கட்டையிலே பாட ஆரம்பிக்கிறாரு. அப்படியே வெவசாயி பாட, தேவ் பாட இப்படின்னு ரெண்டு பேரும் பக்கத்துல வந்து அண்ணா தம்பின்னு கட்டிப் பிடிச்சிக்கிறாங்க. தேவைக் கண்டுபிடிச்சாச்சு அடுத்த பஸ்ஸைப் புடிச்சு சீக்கிரம் விதவுட்ல வந்துடுறோம்னு நம்ம வெவசாயி நேத்து டிரங் கால் போட்டு சொன்ன சேதி தான் மேலே?

மக்களே! அப்பு வைப்பதே ஒன்றே தன் கடமை என்று எண்ணும் தேவ் தலக்காக முதல் முறையாகக் கழுதைப்புலியிடம் கடி வாங்கியுள்ளார். அந்த கடிக்கு அருமருந்தாய் கை தேவிடம் நீங்கள் சொல்லும் ஆறுதல்கள் அமைய வேண்டும் என்று தங்களிடம் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.

“தலக்காக கழுதைப்புலி கிட்ட கடி வாங்கினியாடா…’கை’ செல்லம்? ரொம்ப வலிக்குதாடா? இனிமே நீ இந்த இல்லறம் இல்லாத அறம்னு இந்த மாதிரி வேலையெல்லாம் பண்ண அப்புறம் என்னை மனுசனாவே பாக்கமுடியாது. எனக்கு நீங்க தாண்டா கண்ணுங்களா முக்கியம். அதை புரிஞ்சி நடந்துக்கங்க. இந்த சேதியை நேத்து நைட்டு கேட்டதுலேருந்து ரெண்டு ஃபுல் மீல்ஸ் ரெண்டு குவார்ட்டரு இதைத் தவிர அன்னந்தண்ணி எறங்கலைய்யா..எறங்கலைய்யா”

.... இங்கே பதியப்பட்டது கைப்புள்ள | Leave a Comment »

விவசாயி க(உ)தார் விஜயம்

பதிந்தவர் vavaasangam மேல் ஜூன் 14, 2006

வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் ஒட்டகப் படையில் ஆள் சேர்ப்பதற்காக…(சாரி ஸ்பெல்லிங் மிஸ்டேக்…ஒட்டகம் சேர்ப்பதற்காக) ஞாயிற்றுக் கிழமை கதார் செல்லவிருக்கும் சங்கத்தின் வெளியுறவுத் துறை அமைச்சர் விவசாயி இளா அவர்களின் பயணம் இனிதே அமைய எங்கள் வாழ்த்துகள்.

இப்பயணத்தின் வாயிலாக கதார் சேக்குடன் வ.வா.ச. கதார் நாட்டு எக்ஸ்டென்ஷன் கவுண்டர் திறப்பது குறித்தும், வளைகுடா வட்ட சங்கத்து சிங்கங்களுக்குப் ப்ளாக்கில் விவசாயம் செய்வது குறித்தும் மகசூலை மேம்படுத்துவது குறித்தும் சிறப்பு பயிற்சி அளிக்கவிருக்கிறார்.

கதார் நாட்டு விமான நிலைய வாயிலில் கடலை சாகுபடி குறித்து கதார் நாட்டு காலேஜ் பசங்களுடன் தன்னுடைய சொந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பம்பர் விளைச்சல் பெறுவது குறித்து பேச சங்கத்துச் சிங்கம் பாண்டிக்கும் சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வ.வா.ச. தென்மதுரை வட்ட கண்மணிகள் விவசாயியை ஞாயிற்றுக் கிழமை அன்று வழியனுப்ப சென்னை மெரினா கடற்கரையில் கரகாட்டம் ஒத்திகை நடத்தியபோது எடுக்கப் பட்ட படம்.

.... இங்கே பதியப்பட்டது கைப்புள்ள | Leave a Comment »