வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்

100% சிரிக்க

செப்டம்பர், 2006 க்கான தொகுப்பு

வ. வா. ஆட்டோகிராப்!!!

பதிந்தவர் vavaasangam மேல் செப்டம்பர் 29, 2006

இது ஒரு வருத்தப்படாத வாலிபனின் வாழ்வில் நடந்த பல துன்பியல் சம்பவங்களின் தொகுப்பு.

சேரனோட ஆட்டோகிராப் பாத்ததுல இருந்து நமக்கும் அந்த மாதிரி நம்ம ஆட்டோகிராஃப மக்கள்ட கொண்டு போய் சேக்கனும்னு ஒரு ஆர்வம். ஆனா அப்ப அதுக்கு வழியில்லாம போச்சு. (நம்ம ஆட்டோகிராஃப்ல கோபிகா, ஸ்னேகா எல்லாம் எதிர்பாக்க கூடாது. ஆமாம் சொல்லிட்டேன்… அதுல வர ஒரு பொண்ணு 75 வயசான எங்க அப்பத்தாதான் ;) )

நான் ஏன் நாத்திகனானேன், நான் ஏன் மதம் மாறினேன் மாதிரி தலைப்பை பார்த்தவுடன், அது தூங்கிகிட்டு இருந்த சிங்கத்த தட்டி எழுப்பிடுச்சு. முதல்ல தோனது “நான் ஏன் இஞ்சினியர் ஆனேன்?”. ஆனா இத எங்க அப்பா பாத்தாருனா “ஏன்டா நாயே!!! நான் பணம் கட்டனேன் நீ இஞ்சினியர் ஆயிட்ட. இத பத்தி பெருமையா தொடர் வேற எழுதறயா?”னு பாஸ்டனுக்கு பஸ் பிடிச்சு வந்து அடிப்பாருனு அந்த தலைப்பை விட்டுட்டு “வருத்தப்படாத வாலிபனின் ஆட்டோகிராப்“னு எழுத ஆரம்பிச்சிட்டேன்…

சரி கதைக்கு போவோம்… சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்னால்….

கள்ளக்குறிச்சில காட்டுத்தனமா படிச்சி எல்லா பரிட்சையிலும் 35 மார்க் மேல எடுத்து க்ளாஸ்லயே பெரிய ரேங் எடுத்து சிங்கம் மாதிரி சுத்திக்கிட்டு இருந்த என்னயத்தூக்கி கடலூர்ல ஹாஸ்டல்ல அடச்சி வெக்க எங்க அப்பா முடிவு பண்ணாரு.

எங்க அப்பத்தா அதெல்லாம் வேணாம்னு சொன்னப்ப எங்க அப்பா கேக்கல. கடலூர்ல அந்த ஸ்கூல்தான் பசங்களுக்கு ஒழுக்கமா வளர சொல்லி கொடுப்பாங்க. இவன் இங்க இருந்தானா பம்பரம், கோலி, கில்லினு விளையாடிகிட்டே உருப்புடாம போயிடுவான்னு எங்க அப்பா ஒரே முடிவுல இருந்தாரு.

சரின்னு அந்த ஸ்கூல்ல சேரதுக்கு எண்ட்ரஸ் பரிட்சை வெச்சாங்க. எப்பவும் பரிட்சைனா கில்லி மாதிரி பட்டைய கெளப்பிடுவேன். கடைசி மார்க்கா இருந்தாலும் வாத்தியார்ட சண்டை போட்டு, கெஞ்சி கூத்தாடி பாஸ் மார்க் வாங்கிடுவேன். ஆனா இந்த முறை நான் வாங்குன மார்க்கு எனக்கே ஆச்சரியமாயிடுச்சு. ஆனா எங்க அப்பா கொஞ்சம் ஃபீலிங்க இருந்தாரு. நம்ம புத்திசாலியா இருக்கறது அவருக்கு பொறாமையா இருக்குனு நானும் விட்டுட்டேன்.

பள்ளிகூடத்துல சேர்ந்து முதல் நாள் போகும் போது தான் தெரிஞ்சிது என்ன மறுபடியும் ஆறாம் க்ளாஸ்ல சேத்துருக்காங்கனு. ஏற்கனவே நான் எங்க ஊர்ல ஆறாவது ஒரு தடவ படிச்சு பாஸாயிட்டேன். இருந்தாலும் நம்மல சதி பண்ணி ஃபெயில் பண்ணிட்டாங்கனு அப்பதான் புரிஞ்சிது.

க்ளாஸ்ல முதல்ல நுழைஞ்சவுடனே எங்கப்பத்தா சொன்னது நியாபகம் வந்துச்சு. “கண்ணு முன்னாடி பென்ச்ல உக்காந்து படம் பாத்தா கண்ணு கெட்டுடும். அதனால எப்பவுமே கடைசிலதான் உக்காந்து பாக்கனும்”. சரினு கடைசி பென்ச்ல போயி உக்காந்துகிட்டேன்.

முதல் ஒரு வாரம் வாத்தியார் கேட்ட கேள்விக்கெல்லாம் ஃபர்ஸ்ட் பதில் சொன்னேன். வாத்தியாருக்கோ கள்ளக்குறிச்சில இருந்து வந்து கடைசி பெஞ்ச்ல உக்காந்தாலும் பையன் பயங்கர புத்திசாலினு ஒரு நம்பிக்கை வந்துச்சு.

ஒரு நாள் அவர்கிட்ட அடுத்த பாடத்தல இருந்து கேள்வி கேட்டேன்… அவருக்கா “நம்ம சொல்லி கொடுக்காதெதெல்லாம் தெரிஞ்சிவெச்சிருக்கான்… இவன் ரொம்ப புத்திசாலி”னு நெனச்சிகிட்டு “தம்பி இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்”னு கேட்டாரு. நான் “போன வருஷமே படிச்சிட்டேன் சார்”னு அப்பாவியா சொன்னேன். அப்பதான் நம்ம வண்டவாளம் தண்டவாளாம் ஏறிடுச்சு.

(தொடரும்…)

.... இங்கே பதியப்பட்டது வெட்டிப்பயல் | 28 மறுமொழிகள் »

பயில்வான் வர்றாரு…

பதிந்தவர் vavaasangam மேல் செப்டம்பர் 29, 2006

ஒத்துங்கப்பா ஒத்துங்கப்பா… பயில்வான் வர்றாருபா. அக்டோபர் மாச அட்லாஸ் வாலிபரா வருத்தப்படாத வாலிபர் சங்கத்தைச் சொமக்கறதுக்கு பயில்வான் வர்றாருபா. தமிழ் பளாக்கோட ‘முடி’சூடா கிங், சூப்பர் ஹெவிவெயிட் சாம்பியன்பா நம்ம பயில்வான். அவரைப் பத்தி நாங்கோ சொல்லி நீங்கத் தெரிஞ்சிக்கறதுக்கு ஒன்னுமில்ல. அல்லாருக்கும் அவரைப் பத்தித் தெரியும். எதோ நம்ம பேட்டைக்குள்ள அவரு வர ஒத்துக்குனதே நாம செஞ்ச பாக்கியம் தான். பயில்வான் சார்…அப்ப்டியே நம்ம பசங்களுக்கும் கொஞ்சம் வித்தை எல்லாம் கத்துக் குடுத்துட்டு போ சார் இன்னா?

இப்ப வாங்கய்யா…ஒவ்வொருத்தரா வாங்கய்யா…லைன்ல வரிசையா வாங்கையா. தெகிரியம் இருந்தா எங்க பயில்வான் மேலே கையை வெச்சுப் பாருங்கையா. வாங்கையா…யாருக்குன்னா இருக்கா அம்புட்டு தில்லு? கையைக் கண்டி இந்தப் பதிவுல தெரியாத் தனமா வெச்சேன்னு வை…மூஞ்சு மொகரை எகிறுற லெவலுக்கு அடுத்த பதிவுல கிச்சு கிச்சு மூட்டிவிட்டுருவாரு ஆமா… இப்பவே சொல்லிட்டேன். அட! அப்படியும் நம்பிக்கை வரலியா? சேப்பாக்கம் கிரவுண்ட் மாதிரி இருக்குற அந்த பரந்து விரிஞ்ச அவரு ஜெஸ்டை பாருங்கைய்யா…பனை மரத்தை ஒத்தைக் கையாலப் புடுங்கி வீசற அந்த பராக்கிரமம் பொருந்துன சோல்டரைப் பாருங்கைய்யா…’நேர் கோடு’ எடுத்து படிய சீவிக்கின்னு பால் வடியற பச்சைப் புள்ள மாதிரி ஃபேஸ்கட்ல இருக்காரேன்னு தப்புக்கணக்கு போட்டுறாதே நயினா… அப்பால பெஜாராயிடுவே இன்னா?

சட்டியா இருக்கட்டும், பல்பா இருக்கட்டும், ரசப்பொடியா இருக்கட்டும் அட லண்டனாவே கூட இருக்கட்டும்பா…நம்ம பைல்வான் அண்த்தை கையில எது கடைச்சிதுன்னாலும் வுயுந்து வுயுந்து சிரிக்கற மாதிரி ஹெவிவெயிட் காமெடி பண்ணுவாருபா. அப்படிப்பட்ட ஒரு கொயந்தை மனசு. சரி…இப்ப நான் வேற இன்னாத்துக்கு குறுக்கால நந்தி மாதிரி… எல்லாம் ஒரு தரம் ஜோரா கை தட்டுங்கப்பா… நீங்க அடிக்கிற பிகிலுல மவனே காது கிழியனும்…ஏன்னா அக்டோபர் மாசம் அட்லாஸ் வாலிபரா வரப் போறவரு ஹெவிவெயிட் பயில்வான்…”யோசிக்கிற பீரங்கி”….அண்ணாத்தே ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டூ…

.... இங்கே பதியப்பட்டது கைப்புள்ள | 13 மறுமொழிகள் »

சிவாஜி-ஒரு திரை முன்னோட்டம்

பதிந்தவர் vavaasangam மேல் செப்டம்பர் 28, 2006

ஜனங்களே,

இணைய ரசிகர்களுக்கென்றே நான் உருவாக்கிய திரை முன்னோட்டம், இதோ உங்கள் பார்வைக்காக.

சிவாஜி திரைப்படம், பெருத்த எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. பெரும் தலைகள் சேரும்போது, அவர்களின் பழைய படங்கள் எதிர்பார்ப்பைத் தூண்டி விடுவதும், வரும் படம் .. அ) பழைய படங்கள் போலவே இருப்பதால் ஏமாற்றுவதும் அல்லது ஆ) புதுமையாக இருந்து ஏமாற்றுவதும் சகஜம்:-)

சிவாஜியில் நான் என்ன எதிர்பார்க்கிறேன்? ஒன்றுமே இல்லை! ரஜினியின் பழைய படங்களின், சங்கரின் பிரம்மாண்டத்தின் உல்டா எப்படி இருக்கும் என்ற ஒரு கற்பனை இங்கே..

பாகம் 1:

பாகம் 2:

பி கு:

1. கோப்பின் அளவு பெரியதானதால் இரு கோப்புகள், மன்னிக்க.

2. என் ஒலிப்பதிவுக்கருவியைச் சரி செய்ய இன்னும் நேரம் வாய்க்கவில்லை, ஒலிக்குறைபாட்டுக்கு மன்னிக்க. வசனத்தை இங்கே காணலாம்.

3. மீள்பதிவுக்குக் காரணங்கள்:

அ. வரலாறு காணாத வேலைத் தொல்லை:-(

ஆ. இதுவும் எனக்குப்பிடித்த என் நல்ல நகைச்சுவை முயற்சிகளில் ஒன்று, புதியவர்கள் பார்க்கலாமே.

இ. பழைய image hoster மூன்று மாதங்களுக்குப் பின் ஸ்வாஹா செய்துவிட்டது. இது இன்னும் கொஞ்ச நாள் தாங்கும்.

4. முன்பெல்லாம் SWF வலையேற்ற நூற்றுக்கணக்கில் தளங்கள் இருந்தன. இப்போது என்ன ஆச்சு என்றே தெரியவில்லை. இப்போது போட்டிருப்பது, நம்பமாட்டீர்கள் – 20 ஆவது முறை முயற்சித்து அப்லோட் செய்தது:-((

.... இங்கே பதியப்பட்டது சுரேஷ் (penathal Suresh) | 11 மறுமொழிகள் »

வலைப்பதிவிலிருந்து கைப்பு விலகல்

பதிந்தவர் vavaasangam மேல் செப்டம்பர் 25, 2006


இது நடந்து ஒரு வாரம் இருக்கும். சங்கத்து சிங்கமெல்லாம் போன வாரம் அன்னந்த்தண்ணியில்லாம் பொண்ணுங்க குளிக்கிற ஆத்தங்கரை,குட்டிசுவரையும் எல்லாம் தேடிப்பார்த்தோம். எங்கியுமே காணாம்.
அப்புறமா சித்தூர்கட்ல இருக்கிற சித்தாளை கேட்டப்பத்தான் அந்த அதிர்ச்சிகரமான விஷயமே எங்களுக்கு தெரிய வந்துச்சு.

ஊர்ல ஒருத்தி விடாம ரவுசு பண்ணிக்கிட்டு, அரசியல்வாதியாகப் போறேன்னு பீலா விட்டுக்கிட்டு டாலடிக்கிற கலருல சட்டை, வேட்டி கட்டிகிட்டு சோறு போடுற இடத்தில எல்லாம் வருசக்கணக்கா தங்கி இம்சை கூட்டிகிட்டு இருந்த கைப்புவை “ஒரு கம்ப்யூட்டர் கம்பெனி ஆரம்பிச்சுரு கைப்பு. அப்புறம் உன்னிய எந்த பய புள்ளையும் சீண்டாது” அப்படின்னு எந்த கிறுக்குப்பயலோ சொல்லி கைப்பு மனசை கலைச்சு புட்டாங்க.
அதைக்கேட்ட தலயும் ஒரு கட்டு பீடியும், ஒரு 90யும் நம்ம கஜாவுக்கு குடுத்து அமெரிக்கா போயிட்டு வந்த பின்னாடி ஆரம்பிச்சதுதான் “சங்கம் டெக்னாலஜீஸ்”.

ஆரம்பிச்சுட்டா ஆள் வேண்டாமா,
நேத்தும் முந்தாநேத்தும் நந்தம்பாக்கம் சென்னை ட்ரேட் சென்டர்ல்ல நடந்த் ஜாப் பேர்ல்ல தலக் கைப்பு ஸ்டால் போட்டுட்டு உக்காந்து இருந்தார். அந்த போஸ் தான் மேலே….
தல வேலைக்கு ஆள் எடுக்கறது தெரிஞ்சு சுமார் 318765 ரெஸ்யூம் வந்து குவிஞ்சு இருக்கு… அம்புட்டு ரெஸ்யூமையும் வாங்கி கோட்டு பாக்கெட்டுக்குள்ளே திணிச்சுக்கிட்டு நம்ம தல திருவ திருவ முழிச்ச ஸ்டில் அடுத்த வாரம் THE HINDU, OPPORTUNITIES பக்கத்துல்ல வரும் DONT MISS IT.
தலக்கு ரெஸ்யூம் எல்லாம் படிக்க நேரம் இருந்தும் எழுதப் படிக்கத் தெரியாத ஒரேக் காரணத்தால் எதையும் படிக்கல்ல. இருந்தாலும் ரெஸ்யூம் கொடுத்தவங்க யாரும் ஏமாறக் கூடாதுன்னு அம்புட்டு ரெஸ்யூமையும் குலுக்கு குலுக்குன்னு குலுக்கி ஒரு ரெஸ்யூம் எடுத்து அந்த ரெஸ்யூம் சொந்தக் காரருக்கு சங்கம் டெக்னாலஜிஸ் ‘ஆப்’பர் லெட்டர் கொடுத்துட்டார்.
சங்கம் டெக்னாலஜிஸ்ல்ல முதல் வேற யாரும் இல்ல
விகடன் கைக்கொடுத்துப் பாராட்டி சிற்ப்பித்த டெக் சிங்கம் நம்ம வெட்டிபய தான்..
VETTI BOY YOU ARE APPOINTED!!!!!!!!!!!!! CONGRAJULATIONS!!!!!!!!!!!!!!!!!
பிகு: சங்கத்து மற்ற மக்களை எல்லாம் சாப்ட்வேர் கோர்ஸ் சேர்ந்துப் படிக்குமாறு தலக் கைப்பு அவசர ஆணை இட்டுள்ளார். மக்கா யார் யார் என்ன கோர்ஸ் படிக்கலாம்ன்னு ஒரு ஐடியா கொடுங்க ப்ளீஸ்….

.... இங்கே பதியப்பட்டது ILA | 30 மறுமொழிகள் »

தலயா கொக்கா!!!

பதிந்தவர் vavaasangam மேல் செப்டம்பர் 22, 2006


இது சங்கத்து சிங்கங்களின் கல்லூரியில் நடந்த ஒரு ரணகளமான நிகழ்ச்சி!!!

பிராக்டிக்கல் முடித்து காண்டீனில் ஓசி டீ குடித்து கொண்டிருக்கிறார் நம்ம தல கைப்பு!!!

ஜொள்ளு பாண்டி வேகமாக ஓடி வருகிறார்…

ஜொ.பா: தல… இந்த தடவையும் நம்ம தளபதிக்கு லேப்ல ஆப்பு வெச்சிட்டாங்க!!!

கைப்பு: என்னது!!! லேப்ல குத்திட்டாங்களா?சங்கத்து ஆளுனு சொன்னியா??

ஜொ.பா: சொன்னதுக்கு அப்பறம்தான் குத்துனாங்க!

கைப்பு: அந்த HODக்கு நம்மல சீண்டி வெளயாடுறதே வேலையாப்போச்சு. அவருக்கு ஹெட் லெட்டர் சரியில்லன்னு நினைக்கிறேன்…ஸ்டார்ட் பண்ணுங்கடா வண்டிய!!!

ஜொள்ளு பாண்டி இஞ்சினாக மாற, அவர் பின்னால் விவசாயி இளா, கை தேவ், வெட்டிப்பயல், நாகை சிவா நால்வரும் ரயில் பொட்டிகளாக மாற வண்டியில் இணைகிறார் கைப்புள்ள.

ரயில் வண்டி டிப்பார்ட்மெண்டு அருகே நின்றது.

டிப்பார்ட்மெண்ட்க்கு வெளியே தளபதி நின்று கொண்டிருக்க, உள்ளே HOD மற்றும் அவருக்கு அல்லக்கையாக இரண்டு வாத்தியார்கள்.

கைப்பு (கோவமாக) : சங்கத்து ஆள ஃபெயில் பண்ணவது யாரு?

HOD: என்னது? ஒன்னும் கேக்கல… உள்ள வந்து சொல்லு

கைப்பு: உள்ளயா?? நானா?? (கைப்பு தனது வழுக்கமான வீர சிரிப்பை சிரிக்கிறார்).நானும் டிப்பார்ட்மெண்டுக்குள்ள வர மாட்டேன் நீங்களும் வெளிய வர கூடாது…ஆமாம் சொல்லிட்டேன்… பேச்சு பேச்சாத்தான் இருக்கனும்.

HOD: ஏன்டா அவன ஃபெயில் பண்ணா உனக்கு என்னடா?

கைப்பு: எங்க சங்கத்துல இது வரைக்கும் யாரும் கப் வெச்சது இல்ல (பெருமையாக சொல்கிறார்)

HOD: ஏன்டா போன செமெஸ்டர்ல தான நீ வாஷ் அவுட் ஆன?

கைப்பு (நக்கலாக): அது போன செம்மு… நான் சொல்றது இந்த செம்மு

HOD (பக்கத்திலிருப்பவருடன்): இவன் அடங்க மாட்டான் போலிருக்கு… அந்த மார்க் ஷீட்ட எடுத்துட்டு வாங்க. தொலஞ்சு போறானுங்க இல்லைன்னா ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்னு அழுதே சாதிப்பானுங்க

கைப்பு (தளபதியிடம்): பாத்த இல்ல… அண்ணன் சொன்னா ரிடர்ன்வரப்படாது. கொண்டு போய் குடுத்துட்டு வா.
மார்க் லிஸ்ட் HOD கைக்கு வர, அதில் ஏதோ திருத்தம் செய்கிறார்.

HOD: சரி.. உன் விருப்பப்படி அவன பாஸ் பண்ணிட்டேன்… (கைப்பு பெருமையாக சிரிக்கிறார்)ஆனால் என் விருப்பப்படி உன்னைய ஃபெயில் பண்ணிட்டேன்…

சங்கத்து சிங்கங்கள் எல்லாம் பெருமை பொங்க கைதட்டுகிறார்கள்.

தளபதி: தல!!! நீ சாதிச்சிட்ட தல! பரிட்ச எழுதாத என்னையே பாஸாக வெச்சிட்டன்னா நீ சாதாரண ஆளே இல்ல தல???

கைப்பு: என்னாது??? நீ பரிட்சையே எழுதலையா???

ஜொ. பா: ஆமாம் தல!!! நேத்து நைட்டு தளபதிக்கு கொஞ்சம் ஓவரா போயிடுச்சு. அதனால நாந்தான் நீ பரிட்சை எல்லாம் எழுத வேணாம்… நம்ம தல பாத்துக்குவாருனு சொல்லிட்டேன்… நீ சாதிச்சிட்ட தல…

தேவ்: பரிட்சை எழுதாமலே பாஸாக வைத்ததால் இன்றிலிருந்து நீங்கள் “பரிட்சை கொண்டான்”னு அழைக்க படுவீர்கள்.

கைப்பு (மெதுவாக): பட்டத்த வேற கொடுத்துட்டானுங்களா! இனிமே எதுவுமே பேச முடியாதே…

அனைவரும் மறுபடியும் ரயில் வண்டியை ஆரம்பிக்க, இந்த முறை தளபதியும் இணைகிறார்.

பக்கத்து டிப்பார்ட்மெண்ட் வழியாக செல்லும் போது காதில் விழுந்தது.”பரிட்சை எழுதாத சிபியையே பாஸ் பண்ண வெச்சிட்டானே நம்ம கைப்புள்ள.. இந்த தடவ அவன் யுனிவர்சிட்டி ஃபர்ஸ்ட் தான்”…

கைப்பு:இப்படி பேசி பேசிதாண்டா இன்னும் என்னிய பர்ஸ்ட் இயரையே தாண்டவுடாம பண்ணிட்டீங்க.

.... இங்கே பதியப்பட்டது நாமக்கல் சிபி | 33 மறுமொழிகள் »

சங்கத்து ஆல்பம் – 2

பதிந்தவர் vavaasangam மேல் செப்டம்பர் 22, 2006

மக்கள் எல்லாம் வாரக் கடைசியிலே சிரிச்சுகிட்டே சந்தோஷமா வீட்டுக்குப் போகணும்ங்கற ஒரே நோக்கத்தோட தல கைப்புள்ளயே களத்திலே இறங்கி ஆல்பத்தின் அடுத்த பகுதியையும் பிரின்T போட்டு ரிலீஸ்க்கு ரெடி பண்ணிட்டார்.

“இந்தாப் பேச்சு பேச்சாத் தான் இருக்கணும் சொல்லிட்டேன்.. நீயும் உள்ளே வரப்பிடாது.. நானும் வெளியே வர மாட்டேன்.. உன்னிய நெக்ஸ்ட் மீட் பண்றேன்.. அது வரைக்கும் என் சங்கத்து ஆள் உங்கூடப் பேசிகிட்டு இருப்பான்… வர்றட்டா”
” ஏய் நாங்க எல்லாம் கருஞ்சிறுத்த அப்பூ பறக்கிற பிளைட் ஓடுற பஸ்ன்னு எதில்லயுமே கம்பியைப் பிடிக்காம கையைப் புறம்பாக் கட்டிகிட்டு கச்சிதமா நிப்போம்ல்ல.. ப்பூ பேன் காத்துக்கெல்லாம் பயந்துருவோமா என்ன? கப்பித் தனமாக் கரண்டை வேஸ்ட் பண்ணாம பேனை ஆப் பண்ணுங்கடா”

“கௌரவ்ம் கௌரவம்ன்னு சொல்லி இப்படிக் கூட்டிட்டு வந்து கும்மி அடிச்சு என் கௌரவத்தை நாறடிச்சு இப்படி ஒரு ஓரத்துல்ல உக்கார வச்சுட்டீங்களேடா”

இங்கேப் பார்டா… என்னிய மாதிரியே எவ்வளவு அலகா இருக்கான்… போட்டாவை சங்கத்துக்கு நடுவுல்ல மாட்டி வைங்கடா

மக்களே இப்போ சந்தோஷ்மா வீட்டுக்குப் போங்க … ENJOY MAADI

.... இங்கே பதியப்பட்டது கைப்புள்ள | 10 மறுமொழிகள் »

சஙகத்து ஆல்பம் – 1

பதிந்தவர் vavaasangam மேல் செப்டம்பர் 22, 2006

கொஞ்ச நாளா நம்ம சங்கத்துப் பசங்க யாரும் பதிவு போடல்ல… அதுக்குக் காரணம் எங்க அன்புத் தல கைப்புள்ள எங்க எல்லாருக்கும் லீவும் கொடுத்து கையிலே அவர் டிஜி கேமராவும் கொடுத்து டூர் போயிட்டு வாங்கன்னு சொல்லி அனுப்பிட்டார். பாசமான மனுஷன்ங்க…

போன இடத்துல்ல நம்ம பசங்கத் திரட்டுன படத்தை எல்லாம் தலக் கிட்ட கொண்டு வந்து காட்டுனோம். மனுஷன் சந்தோசத்துல்ல துள்ளிக் குதிச்சுட்டாரு.. அந்த ஆனந்தத்துல்ல அவர் அடிச்ச கமெண்ட்டையும் படத்துக்குப் பக்கமாவேப் போட்டு வச்சிருக்கோம்.

நம்ம சிவா ஆப்பிரிக்காக் காட்டுல்ல கழுதைப்புலி ஒண்ணைப் பார்த்துட்டாப்பல்ல.. அதைப் படம் புடிக்காம ரிட்டன் ஆவறதுல்லன்னு சபத்ம் அடிச்சுட்டு அதைத் துரத்திகிட்டே உள்ளேப் போனவர் தான் இன்னும் வர்றல்ல அவர் வந்ததும் ஆல்பம் அடுத்த பார்ட் ரிலீஸ்


என்ன லுக்? ராஸ்கல்…

இப்போத் தான் நீ புல்லட் பாண்டி கிட்ட பாடம் படிச்ச மாதிரி வண்டி ஓட்டுற..


ச்சீ ராஸ்கல் என்னது இது சின்னப்பிள்ளத்தனமா இருக்கு?

வேணாம் வலிக்குது… அவ்வ்வ்வ்வ் அழுதுருவேன்…

டேய் அவனடா நீயு?

ENJOY THE ALBUM … HAPPY WEEK END….

.... இங்கே பதியப்பட்டது தேவ் | 7 மறுமொழிகள் »

முதுகலை இல்லறத்தியல் – M.Sc Wifeology

பதிந்தவர் vavaasangam மேல் செப்டம்பர் 19, 2006

மனைவிக்கவிதைகள்

காதலியைப்பற்றி எழுத ஆயிரக்கணக்கான கவிஞர்களும் அவர்கள் எழுதிய கோடிக்கணக்கான கவிதைகளும் இருக்கின்றன. “வீட்டுல அதைப் பாடுங்க – பொண்டாட்டிய லவ் பண்ணுங்க”என்ற இளையராஜா நீங்கலாக, மனைவியைப்பற்றி கவிதை மழை பொழிந்த யாரும் என் கண்ணில் படவில்லை.

திருமணமாகி 7 ஆண்டுகளுக்கும் மேலாக ஓட்டிவிட்ட முதுகலை இல்லறத்தியல் பட்டதாரியான நானும் எழுதாவிட்டால் மெல்லத் தமிழினிச் சாகுமோ என்ற பயம் வந்துவிட்டது. மேலும் “மேட்டர் இல்லாதவனுக்கு கவிதையே கைகண்ட மருந்து” என்ற என் கவிமடத் தலைவன் பொன்மொழியும் நினைவில் ஆட, எடுத்துவிட்டேன் கலப்பையை.

கவிப்பேரரசுவின் லிஸ்ட் கவிதைகளையும், பாரதியின் கண்ணன் / கண்ணம்மா சீரீஸ் கவிதைகளையும் என் முன்னோடியாகக் கொண்டு ஆரம்பிக்கிறேன்!

மனைவி ஒரு எலக்ட்ரானிக் விந்தை

மனைவி ஒரு டெலிவிஷன்

இன்னும் யாரும் அதற்கு
ரிமோட் கண்டுபிடிக்கவில்லை.

மனைவி ஒரு ரெப்ரிஜரேட்டர்

பழைய சண்டைநினைவுகளையும்
கெடாமல் காப்பவள் -
தேவையான நேரத்தில்
கொடுப்பவள்

மனைவி ஒரு வாட்ச்

காலையில் எழுப்ப,
கண் போகும் பாதையை
கவனிக்க,
எல்லா அர்த்தத்திலேயும்:-(

மனைவி ஒரு குக்கர்

வேலை செய்வதைவிட
செய்ததைக்காட்ட
விசில் அடிப்பதில்தான்
ஆர்வம் அதிகம்!

மனைவி ஒரு வாஷிங் மெஷின்

துவைப்பதில்,
பிழிவதில்
வெளுத்துக்கட்டுவதில்!

மனைவி ஒரு தொழில்நுட்பப்புரட்சி

மனைவி ஒரு செல்போன்

இன்கமிங்கில் வசதிகள்
இருந்தாலும்
அவுட்கோயிங்
எப்போதும் செலவுதான்.

மனைவி ஒரு ரீசார்ஜ் கார்டு..

பழிவாங்குதலை
உடனே செய்யும் பூத் கார்டு;
கொஞ்சநாள் தாங்கும் ப்ரீபெய்டு
சேர்த்து வைத்துத் தாக்கும் போஸ்ட் பெய்டு..
விடாது ஆப்பு!

மனைவி ஒரு கணினி

உதவி போல் உள்ளே வந்து
எல்லா நேரத்தையும்
ஆக்கிரமிக்கும்.
அதன் கீபோர்டில்
கண்ட்ரோல் ஆல்ட் டெலீட்
மட்டும் கிடையாது!

மனைவி ஒரு இ-மெயில்

அட்டாச்மெண்டுகள் அதிகமானால்
வேகம் குறையும்.

மனைவி ஒரு இலக்கியம்

மனைவி ஒரு சிறுகதை

எப்போதுமே
எதிர்பாராத முடிவுதான்.

மனைவி ஒரு நாவல்

முரண்படும்
பல பாத்திரங்களை
முழுதாக உள்ளே கொண்டவள்

மனைவி ஒரு கவிதை

படைத்தவனையும்
சேர்த்து யாருக்கும்
புரியாத கவிதை.

மனைவி ஒரு நாடகம்

காட்சி அமைப்பில்
இன்னும் சிலர் இருப்பினும்
ஓரங்கம் மட்டுமே பேசும்.

இப்போதைக்கு இவ்வளவுதான்.

முக்கியமான பின்குறிப்பு: இக்கவிதைகளைப் படித்துவிட்டு பின்னூட்டமிடாமல் செல்பவர்கள், நெகடிவ் குத்து விடுபவர்கள் ஆகியோருக்கு சீக்கிரமே கல்யாணம் நடக்கும் என்ற “வாழ்த்து” வழங்கப்படும்.

முக்கியமோ முக்கியமான பின்குறிப்பு: இப்படி ஒரு பதிவு வந்ததாக என் மனைவியிடம் சொல்பவர்களுக்கு சைபர்ஸ்பேஸ் மற்றும் இல்லறத்தியல் சட்டப்படி 100 கசையடிகள் வழங்கப்படும்.

.... இங்கே பதியப்பட்டது சுரேஷ் (penathal Suresh) | 78 மறுமொழிகள் »

போலி வரு.வா.சங்கம் – 3

பதிந்தவர் vavaasangam மேல் செப்டம்பர் 13, 2006

பாகம் 1 படிக்க
பாகம் 2 படிக்க

“என்னது இது தல சவுண்ட் கேக்குது….தளபதியை வேறக் காணும் “

“யோவ் வாங்க அய்யா… போய் என்னன்னு பாப்போம்”

விவசாயி ஆல் இன் ஆல் அழகுராஜ் கடையில் வாடகைக்கு எடுத்த பெட்ரமாக்ஸ் லைட்டை உயர்த்திப் பிடிக்க சிவா, பாண்டி, நான் எல்லாரும் பின்னாடி மெதுவாக பூனை நடை நடந்துப் போனோம்.பழையக் கட்டடம் கடைசியா ஜெய்சங்கர் நடிச்ச CID சங்கர் படம் சூட்டீங் நடந்து இருக்கும் போல… மெகா அமைதி…

“ஆமா.. தலச் சத்தம் கேட்டுச்சு.. இங்கிட்டு இப்போ மனித நடமாட்டமே இல்ல…”

“தலயும் தளபதியும் சிக்கிட்டாங்கய்யா.. இன்னேரம் சிதறி இருப்பாயங்கன்னு நினைக்கிறேன்”

“அப்படித் தான் நானும் நினைக்கிறேன்…இந்தா இது தலயோடு சில்க் சட்டை மாதிரி இல்ல…”

“ஆமா கெக்கிரான் மெக்கிரான்னு அரேபிய மொழியிலேக் கூட எழுதி இருக்கு பாருங்க”
யாருக்கும் அரபிய மொழி தெரியாத போதும் ஆமாம் ஆமாம் என்று ஒத்துக் கொண்டோம்.

“இது தலயோடு சிலுக்கு லுங்கி மாதிரியே இருக்கு…” பாண்டி கண்டெடுத்த லுங்கியைப் பார்த்ததும் எங்களுக்கு லேசா வெலவெலக்க ஆரம்பித்தது.

“அய்யய்யோ இது தலயோட….” என்று ஆரம்பிக்கப் போன சிவாவின் வாயை நான், விவசாயி, பாண்டி மூணு பேரும் சேர்ந்துப் பொத்தினோம்.

“வேணாம் லேடீஸ் எல்லாம் படிப்பாங்க..அப்புறம் தலக்கு வெக்க வெக்கமாப் போயிரும் சொல்லக் கூடாது ஆமா”

“அடச்சே நிறுத்துங்கப்பா இது தலயோட கர்சீப்ன்னு சொல்லவந்தேன்” சிவா சீற்றலாய் சொல்லி முடிக்க.

“அதானேப் பார்த்தேன் தலக்கு அந்தப் பழக்கம் எல்லாம் கிடையாதே” விவசாயி முணுமுணுக்க…

“தமாஸ் பண்றதை நிறுத்துங்கப்பா.. தலயைத் தேடுங்கப்பா….”

“விவ் விவ்.. இங்கேப் பாரு… ஒரு எலுமிச்சம் பழத்தின் நடுவே குங்குமப் பொட்டு அதுக்கு பக்கத்துல்ல மை.. அதுல்ல நூல் கோர்த்து ரெண்டு மிளகாய் ஒண்ணு சிகப்பு காஞ்ச மிளகா.. இன்னொண்ணு பச்சை மிளகா.. அதுக்கு கீழே….அய்யோ.. ஒண்ணும் இல்ல”

“இளா…. ஏன்?”

“என்னங்கடா ஏன்ன்னு என்னைப் பாக்குறீங்க?”

“வேட்டையாடு விளையாடு படம் பார்த்து அன்னிக்கே நீங்க பீலிங் ஆவும் போதுக் கூட நான் இப்படி நினைக்கல்ல… கடைசியிலே.. ச்சே”

“டேய் தேவ்… என்னச் சொல்ல வர்ற நீ?”

“அந்தப் படத்துல்ல வர்ற முதல் கொலை மாதிரி நீங்கத் தலயை.. அய்ய்யோ…”

“தேவ் ஓவர் இதெல்லாம் ஆமா.. எதை வச்சு இப்படி ஒரு முடிவுக்கு வந்த நீ…”

காரணம் ஒண்ணு உங்கப் பேர் இளா…
காரணம் ரெண்டு தலயோட டிரெஸ் எல்லாம் அங்கங்கே கிடக்குது
காரணம் மூணு இந்த எலுமிச்சம் பழம்
காரணம் நாலு வேட்டையாடு விளையாடு படம் நீங்க பார்த்துட்டீங்க…”

“அடிங்க… நானும் உங்க கூட உக்காந்து பிஸ்கொத்துச் சாப்பிட்டுட்டு தவிச்ச வாய்க்கு தண்ணி கிடைக்காம விக்கி தலயோட அலறல் கேட்டுத் தானா விக்கல் நின்னு எந்தரிச்சு கூட வந்தா எனக்கே ஆப்பு வைக்கிறீயா நீ…வேணாம் விவகாரம் ஆயிடும் சொல்லிட்டேன்”

“ஸ்டாப் ஸ்டாப்… கேக்குதா” சிவா கேட்டான்.
“ஒண்ணும் கேக்கல்ல” இது நான்.
“ஆகா எனக்குக் கேக்குது….எனக்குக் கேக்குது….ஜொள்ளுபேட்டை டீ கடையிலே நிதம் நிதம் ஒலிக்கும் தெய்வீக ராகமாச்சே.. நல்லா கேக்குது”

எல்லோரும் காதுகளைத் தீட்டினோம்….ஆங் அதே பாட்டுதான்…

பொன்மேனி உருகுதே ஜகஜகஜக் புல் வால்யுமீல் பாடல் அலற…..

நாங்க நாலு பேரும் பாட்டு வரும் திசை நோக்கி நகர ஆரம்பித்தோம்.. பாட்டு முதல்மாடியில் இருந்து தான் கேட்டது. காலடி ஓசை படாமல் மெல்ல படிகளில் ஏறினோம். முதல் மாடி காலியாக இருந்தது. இரண்டாவது மாடிக்குப் போகவும் பாட்டு சத்தம் நின்று போனது.

விவசாயி விளக்கு வேறு அணைந்து அவிந்துப் போனது. செய்வதறியாது நாங்க தவித்து நிற்க.. மெல்லிய சவுண்டில் அடுத்தப் பாட்டு ஆரம்பித்தது..இந்த முறை நாங்கக் கேட்ட பாட்டு இன்னொரு காலத்தால் அழியாத கந்தர்வ கானம்.

“நேத்து ராத்திரி யம்மா.. தூக்கம் போச்சுடி யம்மா…..”

கானம் கேட்டு பாண்டியின் பற்கள் தவுசண்ட் வாட்ஸ் பல்ப் போல் பீறிட்ட உற்சாகத்தில் பளிச்சிட்டது. அந்த வெளிச்சத்தில் நாங்கள் கண்ட காட்சி எங்களை மிரள வைத்தது….

ரத்தம் உறைந்துப் போனது. சித்தம் சிதறிப் போனது. பித்தம் ஏறி புத்தி பதறி கிட்டத்தட்ட கண்டப்படிக் கதறும் நிலைமைக்கு நாங்கள் ஆளாகிப் போனோம்.

அப்படி ஒரு ஆயுள் காலமிரட்டல் காட்சி அது…

உலக வருத்தப்ப்டாத வாலிபர்களின் ஒரேத் தலைவரானக் கைப்புள்ள… தன்னுடைய சில் அவுட் ஸ்டில் மூலம் தமிழ் கூறும் நல்லுலகிற்கு பாரதியின் பாடல் வரிகளை ஞாபகப்படுத்திய கருஞ்சிறுத்தை இளைஞன்… மேலுக்கு ஆடை அணியாமல் கனடாத் தேசத்து மாப்பிள் இலைகளை இடுப்பில் உடுத்தி அந்தப் பாடலுக்கு ஆக்ரோஷமாக மைக்கேல் ஜாக்சன் பாணியில் நடனமாடிக் கொண்டிருந்தார்.

விவசாயி கோபத்தின் உச்சிக்கு ஏறி சென்று… ஸ்டாப் இட்.. என்று அலற….

” எவ் அவ…….???????????” பயங்கர உக்கிரமா வந்தக் குரலின் திசையில் திரும்பினால் அடுத்த அதிர்ச்சி.

அங்கு…….. தள…தள..தளபதி…. பயங்கர கெட்டபில் நின்று கொண்டிருந்தார்.

தளபதி….என்று நாங்கள் ஒரேகுரலில் அலற…

” ஹே..ஹே.. நான் தளபதி இல்லடா…. இன்னிக்கு சனிக்கிழமை… நான் அமானுஷ்யனாந்தாடா இவன் என் பிரதம சிஷ்யன் சிலுக்குவார்பட்டி சீன் சிலுக்குப்புள்ளடா.. .இவனையும் சிலுக்கையும் சேத்து வைக்கப் போறேன்டா அதுக்கு தான் இந்த யாகம் நடத்துறேன் நான்….

தல இருக்கப் பக்கம் நாங்கத் திரும்ப தல கையை இலையோடுப் பொத்தி அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் எனப் பரிதாபமாக எங்களைப் பார்த்து சங்க நாதம் எழுப்ப முயன்றார்.

“எப்படி சிக்கியிருக்கேன் பாத்தீங்களா.. அம்புட்டையும் உருவி விட்டுட்டு இலையாக் கட்டி ஆட விட்டுட்டான்ய்யா ஆட விட்டான்யா.. ஆடும் போது ரெஸ்ட் எடுத்தா பேனைப் புல் ஸ்பீட்ல்ல வச்சு இலையை எல்லாம் பறக்க விட்டுருவேன்னு மிரட்டுறான்… நாலு நாளா அடைச்சு வச்சு இப்படி பண்ணிகிட்டு இருக்கான்ய்யா இந்த ராஜாதி ராஜ ராஜமார்த்தாண்ட.. ராஜ குலத் திலக.. ராஜ குலோத்துங்க 23ஆம் புலிக்கேசிவழி வந்த வாலிப வயசுகார கைப்புள்ளைய காப்பாத்துங்கய்யா.. காப்பாத்துங்க…”

கைப்பு அழ… நாங்க அழ… கோபவேசத்துல்ல இருந்த தளபதி அப்படியே மயங்கிச் சரிய ஆரம்பிச்சார்.

அதுக்குள்ளே நாங்க கைப்பைக் காப்பாத்தி டவுசர் எல்லாம் மாட்டி விட்டு கிளம்பச் சொன்னோம். தளபதி மெல்ல கண் திறந்தார்.

“என்னாச்சு.. நாம் எல்லாம் எங்கே இருக்கோம்.. சாம்பு யார்ன்னு கண்டுபிடிச்சாச்சா? போலீஸ் யார்ன்னு தெரிஞ்சுப்போச்சா… எல்லாம் அமானுஷ்ய சக்திகளையும் அடக்கியாச்சா?” என எதோ பிதற்ற ஆரம்பிக்க….பாண்டி கையோடு கொண்டு வந்திருந்த சரக்கைத் தளபதிக்குப் பிடித்த மாதிரி வட்டமாக்கி ஊற்ற…. தளபதி மெல்ல சுய நினைவுக்குத் திரும்பினார்…

“யப்பா தளபபபபதி சொன்னாக் கேட்கணும்… இந்த அமானுஷ்யம் தாயத்து இப்படி ரொம்பத் திரியப் பிடாது.. ராத்திரி மணி பத்து அடிச்சாப் படுத்து தூங்கணும்.. அந்தைக் கணக்கா அத்துப் பிடுங்கிட்டு அலையப்பிடாது… இப்படி எல்லாம் செஞ்சா தேகம் சேதாராமாகி மூளை மந்தாராமாகிப் போயிரும் நயந்தாரா நயகாரான்னு எல்லாம் பிதட்டப் பிடாது… போலி.. கோலின்னு எல்லாம் கனவுக் கண்டு இந்தாப் பார் என்னக் காரியம் செஞ்சு வச்சிருக்க கிராதகா…” தலப் பொறுமையாப் பேச ஆரம்பித்தார்.

“தல என்னச் சொல்லுற நீ… தள எங்ககிட்ட எல்லாம் சங்கம் வளக்கப் போறேன்னு பாசமாப் பேசி பிஸ்கொத்து எல்லாம் கொடுத்து பிளான் எல்லாம் போட்டாரே… அப்போ அது எல்லாம் உட்டாலக்கடியா?”

“அடேய் சண்டாளா..தமில்ல தானேச் சொல்லிகிட்டு இருக்கேன்…. இந்தாப் பார் தளபதி கண்ணைத் திறந்துட்டான்… இந்த டவுசரை உருவினாலும் உருவிருவான் நான் போறேன் சாமி”

“டேய் நானூ பிடற்த்லல்லாணாந்தாடா.. அமானுஷ்ய சக்தி எல்லாம் ஒண்ணுக் கூடியிருச்சு.. சாம்புவைப் பிடிச்சுட்டேன்… ஆங் எங்கேடா என் சிஷ்யன் சிலுக்குவார்பட்டி சீன் சிலுக்குப் புள்ள”

“கிளம்பிட்டார்ய்யா கிளம்பிட்டார்ய்யா சங்கத்தைக் கலைச்சிட்டு கட்டத்துரைக்கிட்ட்யே கொடுத்துட்டு ஓடுங்கடா”

.... இங்கே பதியப்பட்டது தேவ் | 16 மறுமொழிகள் »

சர்தார்ஜி – இது நிஜம் அய்யா!

பதிந்தவர் vavaasangam மேல் செப்டம்பர் 11, 2006

என் வாலிப அனுபவங்களுக்குக் கிடைத்த ஏகோபித்த அனுதாபங்களினால் உந்தப்பட்டு, அனுபவச்சிதறல்களையே தொடரலாமே என்ற முடிவுக்கு வந்தேன். (அடங்குடா மவனே என் பதிவுக்கு மட்டும்தான்).

சைட்டடிக்கத்தான் முடியவில்லையே தவிர, வட இந்தியாவில் வேறு எந்த வகையிலும் ஆண்டவன் எனக்குக் குறை வைக்கவில்லை. காமடிக்குப் பஞ்சம் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் என் கூடவே ஒரு சர்தார்ஜி நண்பனை அனுப்பி வைத்தார்.

சர்தார்ஜிகளை ஜோக்குகளில் மட்டுமே சந்தித்த வந்த எனக்கு அந்த ஜோக்குகள் முழுக்கற்பனை அல்ல என்று உணர வைத்தவன் இந்த நண்பன். இவனை ஏமாற்றுவது எங்களுக்கு ஒரே பொழுதுபோக்கு.

சென்னையிலே பரங்கிமலையில் பிறந்து வளர்ந்தவன் இந்த சர்தார். ஏதோ காரணங்களால் சர்தார்ஜிகளோடு புழங்காமல் ஆங்கிலோ இந்தியர்கள் குடியிருப்புக்கு அருகில் வசித்ததால் சுமாராகத் தமிழும் அரைகுறை ஆங்கிலமும் வைத்து ஒப்பேற்றுவான். இவனுக்கு இந்தி வராது என்று எங்களுக்குத் தெரியாது (நாங்கள் நால்வர், சர்தாரைத் தவிர்த்த மூவரும் அக்மார்க் தமிழர்கள் – தூர்தர்ஷனில் கூட இந்தி பார்க்காதவர்கள்).

உத்தரப்பிரதேசத்தின் ஒரு அழுக்கடைந்த கோல் இந்தியா டவுன்ஷிப்பில் எங்களை இறக்கிவிட்டு பஸ் சென்றுவிட, தங்குமிடத்துக்கு ஆட்டோ வைக்க வேண்டும். இந்திப் புலவன் என்று நாங்கள் நினைத்திருந்த சர்தார் ஆட்டோக்காரனிடம் பேரம் பேசினான்.

“எக்ஸிகியூடிவ் ஹாஸ்டல் ஜானா ஹே!”

“வோ கஹான் ஹே?” என்றான் ஆட்டோக்காரன். நல்லவேளையாக வழி சொன்னவர் இன்னொரு அடையாளத்தையும் சொல்லியிருந்தார்.

“ஜி எம் ஆபீஸுக்கு பகல் மே” இந்த உக்குவை நாங்கள் கவனிக்கவில்லை!

“பச்சீஸ் ருப்யா?”

“மாப்ளே அம்பது ரூபா சொல்றாம்பா”

“நாப்பதுக்குக் கேளு” பேரம் பேசாம ஸ்டாம்பு கூட வாங்க மாட்டோமில்ல!

“சார்லீஸ் டீக் ஹே?”

அதிர்ந்து போன ஆட்டோக்காரன் “டீக் ஹே” என்று நாற்பதுக்குக் கொண்டு விட்டான்.

என் இந்தி அறிவு கொஞ்சம் செழுமையான பிறகுதான் தெரிந்தது ஆட்டோக்காரன் அதிர்ந்ததன் ரகசியம். அவன் முதலில் கேட்டது 25 ரூபாய்!

ஏமாறும்போது அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் சாதாரணமாக இருந்துவிட்டு கொஞ்ச நேரம் கழித்து நாங்களே மறந்த பின்னர் ஏமாந்ததை பறைசாற்றிக்கொள்ளுவது இவன் ஸ்டைல்!

ஒரு முறை ட்ரெயினில் சென்றுகொண்டிருந்தபோது ஒரு அத்துவானத்தில் சிக்னல் கிடைக்காமல் நள்ளிரவில் மூன்று மணிநேரம் நின்றது. ஆட்டத்திலேயே தூங்கிப் பழகிய நான் ஆட்டம் நின்றதால் எழுந்துவிட்டேன். சர்தார் கனவு கலையாமல் உறங்கிக்கொண்டிருந்தான். இன்னொரு நண்பனும் எழுந்து, இயற்கைச் சூழ்நிலையில் இயற்கை உபாதை கழிக்க இறங்கினான்,

ஏறும்போது சர்தார் அரைத்தூக்கத்தில் “ஏண்டா வண்டி நிக்குது?” நண்பன் குசும்பு பிடித்தவன். “அதுவா, வழியிலே ரொம்ப முள்ளாம், ரெண்டு மூணு டயர் பஞ்சராம்” இந்த ஜோக் முடிந்துவிட்டது என நினைத்து தூங்கிவிட்டோம்.

மறுநாள் அலுவலகத்தில் பாஸ் ஏன் லேட் என்று கேட்டதற்கு சர்தார்ஜி “வர வழியிலே மூணு டயர் பஞ்சர், அதனாலதான் லேட்” என்று சீரியஸாகச் சொன்னதை இன்றும் அந்த அலுவலகம் மறக்கவில்லை, மறக்கத் தான் முடியுமா?

அரைகுறைத் தமிழில் இவன் அடித்த அட்டகாசங்களை இந்த வருட அட்லாஸ் வாலிபனானாலும் கூட முடிக்க முடியாது.

ஒரு நாள் சீரியஸாகத் தமிழ் பாட்டு ஒன்றைக் கொலை செய்து கொண்டிருந்தான்.

“உல்லுக்குல்ல ஸக்கரவத்தி ஆனா உன்மையிள மெலுகுவத்தி”

“என்ன சர்தார், தமிழ் பாட்டெல்லாம் பாடுற!”

“நல்ல மீனிங்டா இந்த பாட்டு”

“அப்படியா? என்ன மீனிங் சொல்லு பாக்கலாம்!”

“he tells, he is inside sweet matches, but really he is candle matches!”

“ஏறத்தாழ புடிச்சிட்டயே.. அது என்ன Sweet matches?”

“சக்கர ன்னா Sugar தானே? அதான் Sweetனு கண்டுபிடிச்சேன்”

“அடேங்கப்பா! அப்புறம் matches?”

“அதான் வத்தின்னு வருதே.. மாட்ச் பாக்ஸத்தானே வத்திப் பொட்டின்னு சொல்றீங்க?”

அருகிலிருந்த சுவரில் தலையை முட்டிக்கொள்ளப் போனேன்..

“உண்ச்சி வியாசர்பாடி”

“இது என்னடா”

“டென்ஷன் ஆவாதேன்னு தமிழ்லே சொன்னேன்”

‘உணர்ச்சிவசப்படாதே” என்று சொல்ல வந்தானாம்!

வேலையைப் பொறுத்தவரை அவன் புத்திசாலிதான். இருந்தாலும் ஓரிரு முறை அவனையும் மீறி அவனுக்குள் இருக்கும் சர்தார் வெளிப்பட்டுவிடுவான்.

மெஷினில் இருக்கும் ரேடியேட்டர் கேப்புகள் Brassஇனால் ஆனவை என்பதால் அடிக்கடி திருட்டுப்போகும். கேப் போவதால் வேறு சில பிரச்சினைகள் வந்து, அடிக்கடி மெஷின்கள் பழுதாவதால் இந்தத் திருட்டுகள் ஒரு பெரும் பிரச்சினையாக உருவெடுத்தது. ஒரு நாள் நம் தலைவர் வேலையிலிருந்து திரும்பி வந்து “யூரேகா” என்றான் உற்சாகமாக!

“என்னடா ஆச்சு?”

“இந்த ரேடியேட்டர் கேப் பிரச்சினைக்கு ஒரு பெர்மனண்ட் சொல்யூஷன் கண்டு பிடிச்சிட்டேன். எல்லாக் கேப்பையும் எடுத்து ஸ்டோர்க்குள்ளே வச்சிட்டேன்”

“கேப் இல்லாட்டி தண்ணி சிந்திடுமேடா”

“நான் என்ன கேனையனா? எல்ல வண்டிக்கும் கேப் இருந்த இடத்திலே ஒரு பிளேட் வச்சு வெல்ட் செஞ்சுட்டேன்!”

எல்லா வெல்டிங்கையும் நீக்க ஒரு வாரமானது!

ஒரு நாள் மிகக் கோபமாக இருந்தான்.

“என்னடா? கோபமா இருக்கே?”

“என்னை அந்த ஸ்ரீவாத்ஸவ் முட்டாளுன்னு நெனைக்கிறாண்டா!”

“பரவாயில்லையே, ஸ்ரீவாத்ஸவ் புத்திசாலின்னு புரூவ் பண்ணிட்டானே? என்ன ஆச்சு?”

“நம்ம கேடர்பில்லர் ரெகமண்டேஷன் படி மெஷின் டயர்லே வெறும் காத்து அடிக்கக்கூடாது, நைட்ரஜன் தான் அடிக்கணுமுன்னு அவன்கிட்டே சொன்னேன்.”

“சரிதான். அது ரெகமண்டேஷன் இல்லடா, வெறும் சஜஷன் தான்”

“இருந்துட்டுப் போகட்டுமே, உண்மையச் சொல்லலாமில்ல, வெறும் காத்துதான் அடிக்கறோமின்னு – அவன் என் கிட்டே பொய் சொல்றாண்டா.. இந்த சைட்லே நாங்க எப்பவும் 78% பியூர் நைட்ரஜன் தான் அடிக்கறோம்னு சொல்றான். நானும் இந்த வொர்க் ஷாப் புல்லாத் தேடிப் பாத்துட்டேன், எங்கேயுமே 78% நைட்ரஜன் ஃபில்லிங் ஸ்டேஷனே கிடையாது. வெறும் ஏர் கம்பிரஸர்தான் இருக்கு”

எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. அடக்கிக் கொண்டு, “சும்மா விடாதே அந்த ஸ்ரீவாத்ஸவ்வை! பொய்யா சொல்றான்” என்று ஏற்றிவிட்டேன்.

கொஞ்ச நாள் கழித்து அவனுக்கும் உண்மை தெரிந்துவிட்டது. அதற்குப் பிறகு ஒரு வாரம் ஸ்ரீவாத்ஸவ்வும் நானும் அவன் கண்ணில் படாமல், வி ஆர் த எஸ்கேப்!

.... இங்கே பதியப்பட்டது சுரேஷ் (penathal Suresh) | 37 மறுமொழிகள் »